இடுகைகள்

கலைஞர் மு. கருணாநிதி:காலத்துக்கும் நினைக்கப்பட வேண்டியவர்

படம்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்பது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை.சிலர் இதனை மறுத்து நேற்று இருந்தேன்; இன்று இருக்கிறேன்; நாளையும் இருப்பேன் என்று உறுதிகாட்டுகிறாகிறார்கள். அவர்களைச் சாவு நெருங்கிவதில்லை. 

ஒடுக்குதலின் அழகியலும் விடுதலையும் : திலகவதியின் போன்சாய்ப் பெண்கள்

படம்
உரிமைகோரிப் போராடும் அமைப்புகளாக வடிவம் கொண்ட பெண் அமைப்புகளின் தோற்றம் ஐரோப்பா 18 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் துளிர்விட்டது. அடுத்த நூற்றாண்டில் அவை வேலை வாய்ப்பு, பொதுவெளி உரிமைகள், வாக்குரிமைகள் என நகர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இலக்கிய உருவாக்கத்திலும் விமரிசனத்திலும் தடம் பதித்தன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஓரளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் முன் பாதியில் பெண்ணிய இயக்கங்கள் தங்களை வலுவான தரப்பாக நிலைநிறுத்திக்கொண்டன. 1960-களில் முழுமை பெற்ற பெண்களின் செயல்பாடுகள் சார்ந்த இயக்கங்களின் நேரடி விளைவாகவே பெண்ணியத் திறனாய்வும் வலுப்பெற்றது. 

அடையாளப்பிரதிகளும் அடையாளம் தேடும் முகங்களும்……

படம்
· பல்வேறு மாநிலங்களின் பாராம்பரியக் கலைகளிலிருந்து உருவாக்கி, இந்திய நாடகம் (Indian Theatre) ஒன்றைக் கட்டமைத்து விட முடியுமா….?

சேரனும் தங்கரும்: ஆண் மைய சினிமாக்காரா்கள்

படம்
சொல்லமறந்த கதை – நாவலாசிரியா் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்களின் திரைப்பட வடிவம். திரைப்பட வடிவமாக்கி நெறியாள்கை செய்ததுடன் ஒளி ஓவியம் செய்தவர் தங்கா்பச்சான். தங்கா்பச்சான், ஒளிப்பதிவுத் தொழில் நுட்பத்தை முறையாகக் கற்றுக்கொண்டு திரைப்படத் துறையில் நுழைந்து, தனது சிறுகதையான கல்வெட்டை, “அழகி” என்னும் படமாக இயக்கி நெறியாள்கை செய்து அதன் மூலம் தனது திரைப்படங்கள் எவ்வாறு இருக்கும் என அடையாளம் காட்டியவா். தனது சினிமா, வியாபார வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக இருக்காது; வாழ்க்கையினூடான பயணமாக இருக்கும் எனப் பேட்டிகளிலும் சொல்லிக்கொண்டவா். அவா் எடுத்த சொல்லமறந்த கதையும் அதிலிருந்து விலகிவிடவில்லை. இப்பொழுது அவா் நெறியாள்கை செய்த மூன்றாவது படமான “தென்றல்“ வந்து ஓடிக்கொண்டிருக்கிறது; கவனிக்கத்தக்க படமாக.

மணவிலக்கம் என்னும் கருத்தியல் கருவி: ஜோதிர்லதா கிரிஜாவின் தலைமுறை இடைவெளிகள்

படம்
மனிதச் சிந்தனை என்பது எப்போதும் மனித மைய நோக்கம் கொண்தாக இருக்கிறது. நிலம், நீர், வளி, ஒளி, வானம் என ஐந்து பரப்புகளும் இணைந்திருப்பதும், அவ்விணைவுக்குள் தாவரங்கள்-அவற்றின் உட்பிரிவுகளான செடிகள், கொடிகள், மரங்கள் என்பனவும், விலங்குகள் – அதற்குள் நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன என்பனவும் முக்கியமானவை என்றாலும் மனிதர்கள் இவையெல்லாம் தங்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றே நினைக்கின்றனர். அவர்கள் உருவாக்கும் சொற்கள் எப்போதும் மனிதர்களை மையமிட்டே பொருளை – அர்த்தத்தை உற்பத்தி செய்கின்றன. உலகம் என்ற சொல்லை மனிதர்களின் வெளியாகவே புரிந்து வைத்திருக்கிறது மனித மனம்.

தமிழ் இலக்கிய விமர்சகர்கள்: இற்றைப்படுத்துதல்

படம்
1979 இல் சுவடு இதழ் தனது நான்காவது இதழை விமரிசனச் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.

தேர்வின் மொழி

  அண்மையில் தென்மாவட்ட மாணவர்கள் தாங்கள் பயிலும் பல்கலைக்கழகத்திற்கெதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் . தொடக்க நிலையில் தங்கள் கல்லூரிகளின் வாசல்களில் ஆரம்பித்த போராட்டம் உடனடியாகப் பல்கலைக்கழக வாசலை நோக்கித் திரும்பியது . மொத்தமாகத் திரண்டுபோய்ப் பல்கலைக்கழக வாசலை முற்றுகையிட்டார்கள் . வழக்கம்போல பல்கலைக்கழக நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது . ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை .