இடுகைகள்

திரளின் மனநிலைகள்

 பாவனைகளும் தந்திரங்களும் நெரிசலில் 42 பேரின் குரூர மரணம் என்பது நடந்த உண்மை. காரணியாக இருந்த அரசியல் கட்சி த.வெ.கழகம். பாதிப்பைப் பற்றிப் பேசுவதை அந்தக் கட்சி தொடர்ந்து தவிர்க்கிறது. தவிர்ப்பதன் மூலம், விளக்கம் சொல்லும் இடத்தில் அரசை நிறுத்தித் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. பாதிப்பைப் பற்றிப் பேசத்தூண்டும் ஊடகச் சந்திப்புகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அரசும் தயக்கம் காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

கவிதைகள்: ஆக்கங்களும் வாசிப்புகளும். செம்மொழியான தமிழுக்குத் தனித்துவமான இலக்கியவியல் ஒன்று இருக்கிறது. எல்லாச் செவ்வியல் மொழிகளிலும் இருக்கும் இலக்கியவியல் நூல்கள் பேசுவதைப் போலத் தமிழின் இலக்கியவியல் நூலான தொல்காப்பியமும் இலக்கியத்தை ஆக்கும்/ செய்யும் முறைகளையே பேசுகின்றது. ஆனால் அதன் துணைவிளைவுகள் சில இருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

BIGBOSS - AN INTERNSHIP PROGRAMME / பிக்பாஸ் நிகழ்வைப் பயிற்சி நிகழ்வாகவும் மாற்றலாம்.

படம்
2025 ஆம் ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில்  சில நாட்களில் தொடங்க உள்ளது. தொடங்குவதற்கு முன்பு இந்த இந்த யோசனையைச் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை வெறும் பொழுதுபோக்குப் போட்டி நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல் தமிழ்ச்சினிமா மற்றும் காணொளி ஊடகங்களுக்கான திறமையாளர்களை உருவாக்கும் கற்றல்/ கற்பித்தல் நிகழ்ச்சியாகவும் மாற்றலாம். 

தமயந்தியின் காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல்

படம்
எழுத்தாளர் தமயந்தியின் இயக்கத்தில் வந்துள்ள காயல் அவரது இரண்டாவது சினிமா. முதல் சினிமா தடயம். சினிமாவுக்குள் நுழைந்த மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தமயந்தியின் நுழைவும் இருப்பும் முக்கியமான வேறுபாடு உடையது. எழுத்தாளர் என்ற தனித்த அடையாளத்தோடு நுழைந்து, வணிக சினிமாவுக்குள் தன் இருப்பிற்காகப் போராடியிருக்கிறார். அவரது முதல் படம் தடயத்தைப் பார்வையாளர்கள் முன் வைக்கப் பலவிதமான சிரமங்களை அனுபவித்தார். திருநெல்வேலியில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த அரங்கில்தான் தடயம் படத்தைப் பார்த்தேன். இரண்டாவது படமான காயலையும் முடித்துவைத்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அரங்கில் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் மனந்தளர்ந்து விடாத அவரது பிடிவாதம் இருக்கிறது.

தொட்டால் சுடாத பெருநெருப்பு

படம்
கரையில் நிற்கும் போதுதான் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது - இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம். இந்தியாவில் எந்தத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி எல்லாவகை ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தொடங்கி விடுவது வாடிக்கை.வாக்குப் பதிவு தொடங்கிய நாள் முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிட அனுமதி இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் விதி என்பதால் அதை இந்திய ஊடகங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு கருத்துக் கணிப்புகளை நிறுத்திக் கொண்டுவிட்டன என்பது பெரும்பாலோரது நம்பிக்கை.