நம்பிக்கைகள் சிதையும் தருணங்கள்:எக்பர்ட் சச்சிதானந்தத்தின் தேவனுக்குரியதை தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்..
ஒரு மாதத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட நித்தியானந்தப் புயல், சாதாரண மக்களின் பொதுப்புத்தியிலிருந்து நகர்ந்து விட்டது. ஆனால் நமது ஊடகங்கள் அதன் மர்மமுடிச்சுகளை இன்னும் அவிழ்ப்பதாகப் பாவனை செய்து கொண்டே இருக்கின்றன. தேர்ந்த மர்மத்திரைப்பட இயக்குநர் அடுத்தடுத்து ரகசியங்களை அவிழ்த்துப் பரவசப்படுத்துவதுபோல காட்சிகளை விரித்துக் கொண்டிருக்கின்றன தமிழகத்து ஊடகங்கள்