இடுகைகள்

தலித் இலக்கியம் பற்றி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கைகள் சிதையும் தருணங்கள்:எக்பர்ட் சச்சிதானந்தத்தின் தேவனுக்குரியதை தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்..

ஒரு மாதத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட நித்தியானந்தப் புயல், சாதாரண மக்களின் பொதுப்புத்தியிலிருந்து நகர்ந்து விட்டது. ஆனால் நமது ஊடகங்கள் அதன் மர்மமுடிச்சுகளை இன்னும் அவிழ்ப்பதாகப் பாவனை செய்து கொண்டே இருக்கின்றன. தேர்ந்த மர்மத்திரைப்பட இயக்குநர் அடுத்தடுத்து ரகசியங்களை அவிழ்த்துப் பரவசப்படுத்துவதுபோல காட்சிகளை விரித்துக் கொண்டிருக்கின்றன தமிழகத்து ஊடகங்கள்

சாதியெனும் பீனிக்ஸ் பறவை : சுப்ரபாரதி மணியனின் தீட்டு

இது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி. இதுவும் அதுவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயம், கத்தி இரண்டு வார்த்தைகளையும் குறியீடாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர்களைப் பழமொழிகள் என்று சொல்ல முடியாது. மரபுத் தொடர்கள் எனக் கூறலாம்.

முதல் பயணம் :அழகிய பெரியவனின் தரைக்காடு

பயணங்கள் எப்போதும் இனிமையானவை; அதிலும் முதல் பயணங்கள் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை. பதின் வயதுக் காலத்தில் நாட்குறிப்புகள் எழுதும் பழக்கம் என்னிடம் இருந்தது. அந்தக் குறிப்புகளில் நான் சென்ற பயணங்கள் பற்றிய குறிப்புகளை விட தவற விட்ட பயணங்களைப் பற்றிய குறிப்புகளையே அதிகம் எழுதி வைத்திருந்தேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

முப்பரிமாணமென்னும் மாயவலை.

படம்
கயிறு திரித்தல் தமிழ் நாட்டுக் கிராமங்களின் ஒரு கைத்தொழில். வணிகரீதியாக விற்பதற்காக என்றில்லாமல் விவசாயிகள் அவர்களின் தேவைக்கென அவர்களே கயிறுகளைத் திரித்து உருவாக்கிக் கொள்வார்கள். என்னுடைய தந்தை எங்கள் வீட்டில் இருந்த மாடுகள், ஆடுகள் போன்ற வற்றைக் கட்டுவதற்கும்,மூக்கணாம் கயிறுகளுக்கும் தேவையான கயிறுகளை அவரே தான் திரிப்பார்.

தலித் இலக்கியம் : 2000 க்கு முன்னும் பின்னும்

படம்
தொலைபேசியில் அழைத்த அவர் பல்கலைக்கழக இலக்கியத் துறையொன்றில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். தலித் இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்து நூல் ஒன்றை எழுதப் போவதாகக் கூறி யாரையெல்லாம் படிக்க வேண்டும் என்று கேட்டார். காலச்சுவடு பதிப்பக வெளியீடான தமிழினி 2000 பெருந் தொகுப்பில் இருக்கும் எனது தமிழ் தலித் இலக்கியம் என்ற கட்டுரையைப் படித்தீர்களா? என்று கேட்டேன். அக்கட்டுரையை வாசித்து விட்டேன்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளின் படைப்பு களைத் தொகுத்து வைத்துள்ளேன்; வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு - அதாவது 2000-க்குப் பிறகு வந்துள்ள படைப்பாளிகள் மற்றும் படைப்புகள் விவரம் வேண்டும் என்றார்.

கவனிக்கப்பட்டதின் பின்னணிகள்

தகவல்களும் நிகழ்வுகளும் சேர்ந்துதான் வரலாற்றை உருவாக்குகின்றன.சொல்லப்படும் தகவல்களும் நடக்கின்ற நிகழ்வுகளும் நேர்மறை வரலாற்றை உருவாக்கவா..? எதிர்மறை வரலாற்றை உருவாக்கவா.? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டியது அதில் பங்கேற்பவர்களின் தன்னுணர்வு சார்ந்த ஒன்று.இன்னும் சொல்வதானால் பங்கேற்கிறவர்களின் நோக்கம் சார்ந்தவைகளும் கூட.

சந்தேகங்களின் தொகுதி

எழுத்து மட்டுமல்ல எல்லாவிதமான கலைச்செயல்பாடுகளும் ஒருவிதத்தில் மனிதர்களின் அனுபவங்களாகவும், அனுபவங்களின்மேல் எழும் நம்பிக்கைகளாகவும் உள்ளன. அதேபோல் விமரிசனங்கள், அவற்றின்மேல் எழுப்பப்படும் சந்தேகங்களாகவும் சந்தேகங்களுக்கான காரணங்களைத் தொடுப்பதுமாகத்தான் இருக்கின்றன. விமரிசனங்களின் மேல் சந்தேகங்கொள்ளக் கூடுதலாகவே சாத்தியங்கள் இருக்கின்றன.

நீங்கள் இந்து அல்ல என்றால் ..

காஞ்சா அய்லய்யா நமது காலத்தில் வாழும் சமூகப் பொறுப்புள்ள பேராசிரியர்களுள் ஒருவர். ஆந்திராவில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருந்த அவர் தற்சமயம் ஏதோ ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பணி ஆற்றுகிறார் . இந்திய சாதி அமைப்பை விமரிசிக்கும் அவரது எழுத்துக் களைத் தொடர்ந்து எழுதியதால்  இந்திய அளவில் அவருக்கு அறிமுகம்  உண்டு.நான் ஏன் இந்து அல்ல ( Why I am not a Hindu) என்ற அவரது நூல் இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (தமிழில் பேராசிரியர்கள் மு.தங்கவேலுவும் ராஜமுருகு பாண்டியனும் இணைந்து மொழி பெயர்க்க அடையாளம் வெளியீடாக 2001 - ல் வெளி வந்தது) தலித்துக்களும் சூத்திரர்களும் இந்து மதத்தின் ஆன்மீக நிலைபாட்டிற்கும் சடங்கியல் வெளிப்பாட்டிற்கும் வெளியே இருப்பவர்கள் எனற வாதத்தை  முன் வைத்து அதற்கான ஆதாரங்களை வரலாற்று நிலையிலும் நிகழ்காலச் சடங்கியல் நிலையிலும் எடுத்துக் காட்டி அடுக்கிக் காட்டியுள்ளது அந்நூல்.