இடுகைகள்

கதைவெளி மனிதர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிந்த உண்மையிலிருந்து விடுதலை-சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை:

ஜெயமோகனை ஆசானாகக் கருதும் சிஷ்யர்களின் கதைகளால் நிரம்பியிருக்கிறது ம.நவீனின் வல்லினம். மார்ச்,1,2020 இதழில் சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள கதைத் தலைப்பு : இயல் வாகை.  சுனில் கிருஷ்ணனின் கதையைப் பற்றிப் பேசுவதற்கு முன் சில குறிப்புகள்:  இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும். மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்று. மற்ற இரண்டு அடிப்படை வண்ணங்கள் பச்சை, நீலம். 

யாதேவியும் சர்வஃபூதேஷுவும்

தனது உடலை ஓர் ஆண் தொடக்கூடாது என நிபந்தனையாக்கும் ’எல்லா ஆன்ஸெல்’ என்னும் பிரெஞ்சுக்காரிக்கு முன்னால், தனது மருத்துவ முறையின் நுட்பங்களை - செயல்படும் நுணுக்கங்களைச் சொல்லி ஏற்கச் செய்யும் ஸ்ரீதரப்பொதுவாளின் பேச்சுதான் கதை, ஆயுர்வேத மருத்துவனான தன்னால் அவளின் உடல் நோயை மட்டுமல்ல; உளநோயையும் குணப்படுத்த முடியும்; அதையும் தாண்டி எதிர்கால வாழ்க்கையையே திசைதிருப்பிவிட முடியும் என்பதைத் தீர்க்கமான நம்பிக்கையோடு முன்வைக்கிறான். தன்னுடைய மருத்துவம் அனுபவ மருத்துவம் என்பதைத் தாண்டி, யாதுமாகி நிற்கும் பராசக்தியை நம்பும் வாழ்முறையின் வழியாக உருவான மருத்துவம் என்பதில் அவன் காட்டும் பெருமிதமே கதையில் முதன்மையாக வெளிப்பட்டுள்ளது 

பெண்ணெழுத்து: கனலியில் மூன்று பெண்கள்

படம்
எழுதும் ஒரு பெண், பெண்களின் சொல்லாடலைத் தவிர்த்துவிட்டு ஆணை எழுத முடியும். ஆண் உயிரியும் பெண்ணை எழுத முடியும். இந்த நிலைப்பாட்டைச் சிலவகைப் பெண்ணியலாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை; மறுதலிக்கிறார்கள். அப்படியான பால்மாறாட்டத்தில் சிறப்பான பெண் வெளிப்பாடுகள் இருப்பதில்லை என்பது அவர்களின் வாதங்கள் .அந்த வாதங்களில் ஓரளவு உண்மை இருந்தபோதிலும் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல. எல்லா வகையான எழுத்தும் அனுபவங்களின் வெளிப்பாடாக மட்டுமே என்ற நம்பிக்கையின் அடிப்படை இதற்குள் இருக்கிறது.  இந்த நம்பிக்கை, நடப்பியல் சாராத எழுத்துகளுக்கும் பொருந்தாமல் போய்விடும். பாதிக்கப்பட்ட மனிதர்களின் துயரத்தை - ஏக்கத்தின் வலியை எழுதி, அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதலைக் காட்டும் எழுத்துகள் தீவிரமான தாக்கம் செலுத்தக்கூடியனதான். மனிதர்களின் மனதிற்குள் அலைவுகளை உருவாக்கித் திசைமாற்றம் செய்யும். இது ஒருவகையில் மனிதநேய எழுத்துக் கோட்பாட்டின் வெளிப்பாடுகள். அண்மை விமரிசனங்கள் மனித நேய எழுத்துகளின் காலம் முடிந்துவிட்டதாகச் சொல்கின்றன. ஆனாலும் இப்போதும் அவையே அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.

ஆறு கதைகள் ஆறு விதங்கள்

படம்
‘தமிழக சிறப்பிதழ்’ சிறுகதைகள் – நடு இணைய சிற்றிதழ் கடந்த இதழைத் (21- ஆவணி, 2019) ‘தமிழக சிறப்பிதழாக’ வெளியிட்டது. புலம்பெயர் தேசம் ஒன்றிலிருந்து வரும் இணைய சிற்றிதழில் தங்கள் பனுவல்கள் இடம்பெற வேண்டுமெனத் தமிழ்நாட்டின் முதன்மையான படைப்பாளிகள் விரும்புவார்கள் என்ற நோக்கில் நடுவின் ஆசிரியர் பலருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இயலாதவர்களும் விரும்பாதவர்களும் பங்கேற்கவில்லை. இயன்றவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல், மொழிபெயர்ப்பு என அந்த இதழில் வாசிக்கக் கிடைத்தனவற்றை முழுமையாக இங்கு பேசப்போவதில்லை.

உள்ளே மட்டுமில்லை அர்த்தங்கள்- இமையமும் புதியமாதவியும்

இமையத்தின் பணியாரக்காரம்மா கடந்த உயிர்மையில் இமையம் எழுதியுள்ள பணியாரக்காரம்மா கதையை வாசித்து முடித்தவுடன் இந்தக் கதையின் விவாதம் பிரதிக்கு வெளியே இருப்பதாகத் தோன்றியது. எனக்குத் தோன்றியது போலவே அக்கதையை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் என்று சொல்வதற்கில்லை. அப்படித் தோன்றாத வகையிலே தனது எழுத்துத் திறனை முழுமையாக இமையம் காட்டியுள்ளார். ஆனாலும் இந்திய மனிதர்களை அவர் எழுதுவதால், அவர்களின் இயங்குதளம் – இந்தியச்சாதி அமைப்பின் இயங்குமுறையின் வீரியத்தால் கதையின் விவாதம் கதைக்கு வெளியே இருப்பதாகத் தோன்றும்படி சில வரிகள் வந்து விழுந்துவிட்டன. 

வீடற்றவர்களின் கதைகள்

படம்
மனிதர்களின் அகவுலகம் என்பது எப்போதும் புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட உலகமாகவே இருக்கிறது . ஒருவரின் நேரடி அனுபவம் என்பதுகூட ஒருவிதத்தில் புனைவுதான் . நேரடி அனுபவம்போல எழுதப்பெற்ற புனைவுகள் நம்பத்தகுந்த புனைவுகளாக இருக்கின்றன என்று சொல்லலாமேயொழிய , அவையெல்லாம் உண்மை என்ற சொல் தரும் பொருளைத் தந்துவிடுவதில்லை . எல்லாவகை எழுத்துகளுமே , நம்மைத் தவிர்த்து இன்னொருவரைப் பார்க்கும்போதும் , அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதும் , நம்மிடத்தில் நிறுத்திப்பார்த்து அவராக நம்மை நினைத்துக்கொள்வதில் விரிகிறது புனைவு .

தற்காலிகத்தைக் கொண்டாடுதல்

படம்
இதுதான் கவிதையின் வடிவம்; நாடகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும்; சிறுகதையின் தொடக்கமும் முடிவும் இப்படித்தான் இருக்கவேண்டுமென வலியுறுத்தும் நபர்களைப் பின்னுக்குத்தள்ளி எழுத்தும் பனுவல்களும் கடந்துபோய்க்கொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களில் மட்டுமல்ல; எல்லாவகையான செயல்பாடுகளிலும் இயங்குநிலையிலும் வடிவச்சீர்மையை வலியுறுத்தும் போக்கு முடிந்துவிட்டது. நெகிழ்ச்சியும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதாகவும், மாறாமலேயே தோன்றுவதாகவும் இருக்கும் வடிவங்களே கொண்டாடப்படும் வடிவங்களாக நம்முன்னே அலைகின்றன.

தொடரும் கதைவெளி மனிதர்கள்

படம்
இப்படியான சிறுகதைத் தொகுதியை ஒரே மூச்சில் வாசித்துவிட முடியாது. ஒருவர் எழுதிய 14 கதைகளென்றால் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டே போகலாம். இரண்டு அல்லது மூன்றுநாளில் முடிந்துபோகும். அகநாழிகை பதிப்பக வெளியீடாக, ‘பொன்.வாசுதேவன்’ தேர்வுசெய்து தொகுத்துள்ள “விளிம்புக்கு அப்பால்” சிறுகதைத் தொகுதியில் 14 பேரின் 14 கதைகள் இருக்கின்றன.

கி.ரா.வின் புதிய வரவு: பெருங்கதை

படம்
முன்பெல்லாம் நண்பர்களின் எழுத்துகள் கையெழுத்தில் வாசிக்கக்கிடைக்கும் . நீலவண்ண எழுத்துகள் , கறுப்பு வண்ண எழுத்துகள் அதிகம் என்றாலும் பச்சை , சிவப்பு , ஊதா வண்ணங்களிலெல்லாம் எழுதும் பேனாக்கள் வந்தபோது அவற்றில் எழுதிப் பார்க்கும் எழுத்தாளர்கள் உண்டு . எழுத்தாளர்களின் கையெழுத்திலேயே வாசிக்கக் கிடைக்கும் பிரதிகள் இப்போது குறைந்துவிட்டன . அப்படிக்கிடைத்தாலும் டைப் செய்யப்பட்டு கணினி வழியாகவே வந்துசேர்கின்றன . அப்படிப் படித்த எழுத்துகளையும் பிறகு அச்சில் வாசிக்கும் ஆசை விலகுவதில்லை .

பிரபஞ்சனின் ஆகாசப்பூ: வடிவம் தொலைத்த கதை

படம்
ஆனந்தவிகடனில் (7/12/2016) அச்சாகியிருக்கும் ஆகாசப்பூ வழக்கமான பிரபஞ்சனின் கதைபோல இல்லை. பிரபஞ்சனின் கதைகளில் வரும் மாந்தர்களின் குணங்களைச் சொல்வதற்கு தேவைக்கதிகமான சொற்களைப் பயன்படுத்துவார்; அதிலும் பெண்களின் அறிவு, திறமை போன்றவற்றைச் சொல்லவிரும்பும்போதை வார்த்தைகள் செலவழிவதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை.

எல்லாம் தெரிந்த அம்மா

படம்
இப்போது மாத இதழ்களாக வந்துகொண்டிருக்கும் இலக்கியம் மற்றும் இடைநிலை இதழ்களைத் திரும்பவும் எடுத்துப் படிக்கவேண்டுமெனத் தூண்டுவன அந்த இதழ்களில் இடம்பெறும் கதைகள் மட்டுமே . முதல் புரட்டலில் ஈர்த்துவிடும் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துவிட்டுத் தான் கதைகளுக்கு வருவேன் . அந்தக் கதைகளின் தொடக்கமோ , நகர்வோ , நிதானமாகப் படிக்கவேண்டியவை என்ற உணர்வைத்தூண்டிவிடும் நிலையில் கட்டாயம் படித்தே விடுவேன் . 

எழுதிக்கொள்ளவேண்டிய கதையின் முடிவு: துரோகங்களுக்கான பரிகாரம்

படம்
கதையை வாசி க்கத் தொடங்கி ய சிறிது நேரத்திலேயே அவரது புகழ்பெற்ற நாவலான 18- வது அட்சக்கோட்டை வாசிக்கும் நினைவுதோன் றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கலவரம் , கல்லூரி மூடல் , மாணவர்கள் வீட்டில் முடங்கல் என அந்த நாவலின் நிகழ்வுகள் இந்தக் கதையிலும் இருந்தன . கதையின் காலமும் சிறுகதை யின் எல்லையைத் தாண்டி 50 வருட நிகழ்வுகளையும் நினைவுகளையும் தொட்டுத்தொட்டுத் தாவி்க் கொண்டிருந்ததால் சிறுகதை யின் வடிவ எல்லையைத் தாண்டிக் குறுநாவலாக மாறி க்கொண்டிருக்கிறது என்ற  எண்ண மு ம் வலுவாகிக் கொண்டே இருந்தது. அதனால் , அந்த நாவலில் எழுத நினைத்த ஒரு கிளைக்கதையை இப்போது எழுதியிருக்கிறா ர் என்ற நினைப் பிலேயே வாசித்தேன். அந்த நாவலை வாசித்தவர்கள், இந்தவார (23/11/16) ஆனந்த விகடனில் அச்சாகியிருக்கும் அசோகமித்திரனின் துரோகங்கள் கதையை இப்படி வாசிப்பதைத் தவிர்க்கமுடியாது.

விலகும் மையங்கள்: லட்சுமி சரவணக்குமாரின் படையலும், விநாயமுருகனின் ஞமலி போல் வாழேலும்.

படம்
இரண்டு கதைகளிலும் பின்னணிதான் கவனிக்கவைக்கின்றன .   என்றாலும் இரண்டு கதை களி லும் பின்னணிகள் ஒன்றல்ல . ஒன் று இடப்பின்னணி யால் கவனம் பெறுகின்றது.   இன்னொன்றோ காலப்பின்னணி யால் கவனம் பெறுகின்றது.

தாய்மையென்னும் புனிதம்

படம்
' ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதைகொண்டிருக்க வேண்டும் ' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். ' கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை ' என்பதுபோன்ற திகில் தன்மையைக் கொண்ட தொடக்கம். சிக்கலான மனிதர்களை முன்னிறுத்தும் கதை என்பதான குறிப்புகள்கூட இல்லை. காலச்சுவடு 200 ஆம் இதழில் வந்துள்ள  உமா மகேஸ்வரியின் குளவி என்ற தலைப்பிட்ட அந்தக் கதையை வாசிப்பதை நிறுத்திவிடலா ம் என்று தோன்றியது . ஆனால் இடையிடையே ஓவியங்களோடு மூன்று பக்கத்தில் முடியும் கதை தான்  என்ற நிலையில் தொடர்ந்து வாசிக்க லாம் என்று தோன்றியது.  

சோ.தர்மன்:நிலவியலில் நிறுத்திய எழுத்து

படம்
என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்; எல்லாவற்றையும் நானே திட்டமிடுகிறேன் எனக் கூறுவதற்குப் பின்னால் இருப்பது நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைதான் முழுமையாகச் செயல்படுகிறதென்று சொல்லமுடியாது. தன்பிள்ளை, தன்குடும்பம், தன்போக்கு என இருப்பவர்களுக்கு வேண்டுமானால், ஓரளவுக்கு இது சாத்தியமாகலாம். அதுகூட ஓரளவுக்குத்தான். பொதுமனிதர்களை நோக்கி இயங்கும் ஒருவரால், அவரது செயல்பாடுகளை முழுமையாக அவரே திட்டமிட்டுக்கொள்ள முடியாது. எழுத்து, இலக்கியம் என்பது அடிப்படையில் பொதுமனிதர்களை நோக்கிய இயக்கம். ஆகவே எழுத்தாளர்களின் செயல்பாடுகளைச் சூழல் இயக்குகிறது.

மேல்பார்வை X கீழ்பார்வை = குடலாப்ரேஷன்

படம்
ஆபரேஷன் சக்சஸ் என்று சொன்னபடி வந்த ஜூனியர் டாக்டர்களின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார் டாக்டர் அ.ரா. . சட்டென இந்த ஆபரேஷன் மெத்தடாலஜியை மாணவர்கள் புரிந்து கொண்டதில் உள்ளபடியே அவருக்கு மகிழ்ச்சி. அவர் மேஜை மீதிருந்த ஒரு படத்தில் கோமாளி சிரித்துக் கொண்டிருந்தான். அதில் இருந்த வாசகம்- ‘ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை மனிதனோடிருந்தது; அந்த வார்த்தை வார்த்தையாயிருந்தது’

எண்ணங்களால் இணையும் நிகழ்வுகள்: நேசமித்ரனின் பிரசவ வார்டு

படம்
பிரசவ வார்டு - இந்தமாத உயிர்மையில் வந்துள்ள சிறுகதையின் தலைப்பு. நிகழ்வெளியைத் தலைப்பாக்கிக் கதையை எழுதியுள்ளவர் நேசமித்ரன்.

சாரு நிவேதிதா: தந்திரக் கதை சொல்லலின் ஒரு கோடு

படம்
என் பெயர் சீஸர்.ரோமானியப்பேரரசர் ஜூலியஸ் சீஸர் அல்ல, வெறும் சீஸர். என்னுடைய பயாலாஜிகல் தந்தை பெயர் டைஸன். இப்படித்தொடங்குகிறது போனமாத(டிசம்பர், 2015) உயிர்மையில் வந்து சாருநிவேதிதா வின் கதை. கதையின் தலைப்பு என் பெயர் சீஸர் . ஒருவிதத்தில் தன்மைக்கூற்றுக் கதை. கதை எழுதும் சாரு நிவேதிதா நாயாக மாறித் தன் கதையை - நாயின் கதையை- கூறுவதாக வாசிக்கவேண்டும் என நிர்ப்பந்திக்கும் கதைகூற்று முறை.

மரத்தில் மறையும் யானை:அ.முத்துலிங்கத்தின் சிப்பாயும் போராளியும்

படம்
ஒன்றை இன்னொன்றாக ஆக்குவது உருவாக்குபவரது வேலை. எதை உருவாக்குகிறோம் என்ற உணர்வோடு தொடங்கினாலும் இன்னொன்றின் அடிப்படைக்கூறுகளின் மீது ஏற்படும் தற்காலிக விருப்பம் உருவாக்கியதை இன்னொன்றுபோலக் காட்டிவிடும். சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்து பார்த்தவர்கள் தான்.

அடையாளம் அழிக்கும் புனைவு வெளி

படம்
இந்த ஐந்து கதைகளும் புத்தம் புதிதான கதைகள். 2015, நவம்பர் மாதத்தில் வந்த இதழ்களில் அச்சான கதைகள். கதைகளை எழுதியவர்கள் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களும்கூட. எழுதியனுப்பிவிட்டு அச்சேறுவதற்குக் காத்திருக்காமல் அனுப்பினால் உடனே அச்சாகும் வாய்ப்புள்ள எழுத்தாளர்கள். அதுதான் அவர்களை அறியப்பட்ட எழுத்தாளர்களாக ஆக்குகிறது. அறியப்பட்ட எழுத்தாளர் என்பது அவர்களின் எழுத்தின் வழியாக அறியப்பட்ட அடையாளமே. எப்படி அறிந்திருக்கிறோம் என்பதோடு அவர்களின் கதைகளின் விவரங்களை முதலில் தந்துவிடலாம். அறியப்பட்ட எழுத்தாளர்கள்: வாசிக்கக் கிடைத்த கதைகள்: அம்பை-தன்னுணர்வு கொண்ட பெண்ணியப் புனைவு எழுத்துகளின் தனிக் குரல் . அவரது கதை: தொண்டை புடைத்த காகம் ( இந்து தமிழ், பக் 190 -195) · ஆண்- பெண் உறவின் சிக்கலான புள்ளிகளை- பாலியல் சார்ந்த ஈர்ப்பினை லாவகமாக எழுதுவதில் தேர்ச்சி பெற்ற கை வண்ணதாசனின் கை. அவரது கதை: சற்றே விலகி, உயிர் எழுத்து, (பக்.44- 48) · சாதியமுரண் சார்ந்த கிராம வாழ்வில் தலித்துகளின், குறிப்பாகத் தலித் பெண்களின் துயரத்தையும் தணிந்து போய்விடாத தன்னம்பிக்கையையும் சிறுகதைகளாகத் தொடர்ந்து எழுதிவரு