இடுகைகள்

பத்துத்தலெ :

படம்
இவையெல்லாம் குற்றச்செயல்கள், வெளிப்படும்போது தண்டனைகள் உண்டு எனத் தெரிந்தபின்னும் திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குப் பின்னால் எதிரெதிர்க் கூட்டணிகளின் மறைமுக ஒப்பந்தங்கள் இருக்கவே செய்யும்.மறைமுக ஒப்பந்தங்களைக் கதைப்பின்னலின் ரகசிய முடிச்சுகளாக மாற்றிக் குற்றக்குழு மோதல் ( Gang war )படங்கள் உருவாக்கப் படுகின்றன. ஒவ்வோராண்டும் எடுக்கப்படும் இருபத்திச் சொச்சம் குற்றக்குழு மோதல் படங்களில் ஒன்றாகவே அண்மையில் வந்த ‘பத்துத்தல’ யும் கணிக்கப்பட வேண்டிய படம்.

இந்திரனுக்கு வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது

படம்
வானம் அமைப்பு முன்னெடுக்கும் நிகழ்வுகள் அடையாள அரசியலோடு தொடர்புடையது.  அடையாள அரசியலுக்கும்  அவைசார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தற்காலிக நோக்கங்கள் மட்டுமே இருக்கும்; இருக்க வேண்டும். எல்லாவகையான அடையாளங்களும் மறைந்து மைய நீரோட்டத்தில் கலக்கும் நாளுக்காகவே உலகம் காத்திருக்கிறது.  அந்த நாளில் மனிதர்களும் மனித மேன்மையும் மட்டுமே மிஞ்சியிருக்கும். இதொரு கனவு தான். என்றாலும் காணவேண்டிய கனவு.

ஆடும் நாற்காலிகள்

படம்
குறுநாவல் மூலம்: ஜெயகாந்தன் நாடக ஆக்கம்: அ.ராமசாமி

புத்தகங்கள் வாங்கிய கதைகள்

சொந்தமான முதல் புத்தகம் சில ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அவற்றில் இருப்பனவற்றில் பாதி நூல்கள் நான் வாங்கியவை; இன்னொரு பாதி நண்பர்களும் நூலாசிரியர்களும் எனது வாசிப்பின் மீது நம்பிக்கை வைத்துக்கொடுத்தவை. பள்ளிப்படிப்பில் என்னுடைய பெயரெழுதிப் பரிசாகக் கிடைத்த அந்த நூலைத்தான் எனது முதல்நூல் எனச் சொல்லவேண்டும். அண்ணாவிற்குப் பின் முதல்வராக வந்த கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிமுகம் ஆனது. அந்தப் பொதுத்தேர்வுக்கு மாதிரித்தேர்வொன்றைக் கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தவேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று உசிலம்பட்டிக் கல்வி மாவட்ட நடத்தினார். அந்தத் தேர்வில் முதலிடம் பெற்றேன். அதற்காக வழங்கப்பெற்ற பரிசாகக் கிடைத்த அந்த நூலின் பெயர்: பொழுதுபோக்குப் பௌதிகம். நூலாசிரியரின் பெயர் யா.பெரல்மான். வெளியீடு மாஸ்கோவின் ராதுகா பதிப்பகம். மொழிபெயர்ப்பு நூல்.

இடையீடுகள்

  நவீன நாடகங்களும் குடும்பங்களும் இம்மாதக் காலச்சுவடுவில் தலையங்கத்தைத் தொடர்ந்து ”பிம்பம்- அதிகாரம் -அத்துமீறல்” எனத் தலைப்பிட்டு அரவிந்தன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ’இதுதான் உங்கள் நுண்ணுணர்வா?’எனக்கேள்வியோடு கூடிய கட்டுரை ஒன்றைச் செந்தூரன் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ”அதிர்ச்சி- குழப்பம்- அவமானம்” என்ற தலைப்பில் மணல் மகுடி நாடகக்குழுவில் இணைந்து செயல்பட்டவர்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் நாடகப்பட்டறைகளை நடத்தியும் நாடகங்களை இயக்கியும் செயல்பட்டுவரும் பார்த்திபராஜா மீதொரு பாலியல் குற்றச்சாட்டுக் கூறும் பெயரிலிக் கடிதமும் உள்ளன. இவற்றில் விவரிக்கப்பட்டுள்ளவை இரண்டு மையங்களை விவாதப்படுத்தியுள்ளன. முதல் மையம், இப்பிரச்சினையை வெளிக்கொண்டு வரக்காரணமாக இருந்த எழுத்தாளர் கோணங்கியின் ஒரு பால் உறவு விருப்பம் தொடர்பானவை. தொகுக்கப்பட்டுள்ள வாக்குமூலங்கள் ஒவ்வொன்றும் அவரது செயல்பாடுகளும் அணுகுமுறைகளும் பாலியல் விருப்பம் சார்ந்ததாக - அவர்களுக்கு விருப்பமில்லாத நிலையில் அவர் தங்கள் உடலை அதற்காக அணுகினார் என்பதாகக் குற்றம் சாட்டுகின்றன. இவ்வகைக் குற்ற

கவிதைகள் : வாசித்தவிதங்கள்

தேவதச்சனின் சலனச் சித்திரங்கள் தமிழில் எழுதும் கவிகள் ஒவ்வொருவரின் கவிதையியலை - வெளிப்பாட்டு முறையை அறிந்து வாசிக்கத் தொடங்கிவிட்டால், அவர்களின் புதிய கவிதைகள் வரும்போது வாசிக்காமல் தவிர்க்கமுடியாது. எப்போதும் கவிதைக்குள் தன்னை - தன்னிலையைச் சொல்லுமிடத்தில் வைத்துக் கொண்டு முன்னே இருக்கும் எல்லாவற்றையும் காட்சிப்பொருளாக்குவது தேவதச்சனின் கவிதைப்பாங்கு. அக்காட்சிப்பொருட்களுக்குள் உயிருள்ளனவும் உண்டு; உயிரற்றனவும் இடம்பெறுவதுண்டு. மனிதர்களும் இடம்பெறுவார்கள்; மனிதர்கள் அல்லாத உயிரினங்களும் இடம்பெறுவதுண்டு. முதன்மையாக அவர் தனது சொற்களால் செய்து காட்டுவது காட்சியின் வரைபடம். வரையப்படும் அக்காட்சிக்குள் நிலையாக நின்றுகொண்டிருக்கும் இருப்பைவிடவும், அசைவுகளோடு கூடிய - நகர்வுத்தன்மை பொருட்களை நிரப்பிக் காட்டுவார். அவ்வாறு நிரப்பப்பட்ட காட்சியை விரிப்பதின் நோக்கம், அதன் மீதான கவிதைசொல்லியின் பார்வைக்கோணத்தை - மனச்சாய்வைச் சொல்லி விட்டு ஒதுங்கிக்கொள்வதாக இருக்கும். ஒதுங்கிக் கொண்டபின் எழும் உணர்வலைகள் கவியிடமிருந்தும், கவியால் உருவாக்கப்பட்ட கவிதை சொல்லியிடமிருந்தும் விலகிக் கவிதையை வாசிப்பவர்கள

இந்தியத்தன்மை கொண்ட முதலாளியப்புரட்சி

படம்
வணிகக் குழுமங்கள் முதலாளியக் கட்டமைப்பில் அரசைப் பயன்படுத்திக் கொள்வதுதான் அடிப்படை இயங்குமுறை. விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முதலாளிகள் அடையாளங்காணப்பட்டு அப்போதைய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் உதவி அளித்தன. உதவிகள் நேரடி மானியங்களாகவும் மறைமுக வரிச்சலுகைகளாகவும் இருந்தன.