நாடகங்களின் ஊடாகப் பிரபஞ்சனின் படைப்புத்தளம்
படைப்பு- படைப்பாளர் உறவு கதாபாத்திரம் ஒன்றின், அல்லது நிகழ்வு ஒன்றின், அல்லது இருப்பு ஒன்றின், அல்லது இருப்பின்மை ஒன்றின் – இப்படி எல்லாவிதமான ஒன்றுகளின் மீது கருத்தை, எண்ணத்தை, புன்சிரிப்பை, ஏளனத்தை, ஏக்கத்தை, மனநிறைவைப் பதிவு செய்து விட வேண்டும் என்று தோன்றும்பொழுது படைப்புச் செயல் தொடங்குகிறது. படைப்பாளி அவற்றின் கால நீட்டிப்பையும், வெளியின் விரிவையும் தடுத்து நிறுத்தி, தனது குறிப்பை அதன் மீது ஏற்றிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறான். படைப்புச் செயல் நிறைவடைகிறது.