இடுகைகள்

ராசேந்திர சோழனின் இசைவு: பிறழ்வெழுத்தின் மோசமான முன் மாதிரி

படம்
ஆண் - பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை - பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் மீறலை -பிறழ்வு உறவை நியாயப்படுத்தும் உரையாடல்களையும் காரணங்களையும் முன்வைத்து விவாதித்துக் கதையை நகர்த்துவதுண்டு. அப்படி இல்லாமல் பிறழ்வு உறவுகளில் ஈடுபடுகின்றவர்கள் அதனைப் பிறழ்வாகக் கருதாமல் இயல்பான உறவாகவே நினைக்கின்றனர்; ஏற்று நகர்கின்றனர் என்ற பார்வையைப் புனைவுக்குள் வைத்து எழுதியவர்கள் பட்டியல் ஒன்று உள்ளது. தமிழில் அப்பட்டியலில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே.

கொண்டாடப்படவேண்டியவர் சாரு

சாரு நிவேதிதாவின் எழுத்துகள் மீது காட்டப்படும் வன்மம் என்பது அவரது ஆளுமை மீது காட்டப்படும் வன்மம் அல்லாமல் வேறில்லை. மரபான அமைப்புகள் மீது நம்பிக்கையும் வழிபாட்டு மனோபாவமும் கொண்ட தமிழ் எழுத்தாளர்களில் பலர் நவீனத்துவத்தின் மீது நம்பிக்கைகொண்டவர்களாகப் பாவனை செய்பவர்கள். சரியாகச் சொல்வதானால் இப்பாவனை யாளர்களுக்கு நவீனத்துவத்தின் சாராம்சவாதம் மட்டுமே உவப்பானது. ஆனால் மரபின் மீது மூர்க்கமான எதிர்ப்பைக் காட்டுவதோடு சாராம்சத்தைக் கடந்தவர் சாரு நிவேதிதா. உரிப்பொருளில் மட்டுமல்லாது வெளிப்பாட்டு முறையிலும் அதனைக் கைக்கொண்ட ஒரு முன்மாதிரி அவர்.

சிறார்களுக்கான நாடகங்கள் -ஒரு குறிப்பு

படம்
தமிழில் நாடகக் கலையின் இருப்பே கேள்விக்குரியதாக இருக்கிறது. நவீன நாடகங்கள் என்ற அறிமுகம்கூடத் தமிழில் அதன் சரியான அர்த்தத்தில் வெளிப்படவில்லை. ஒரு செய்தியை அல்லது ஒரு கேள்வியை நிகழ்வாக்கிப் பார்வையாளனை நோக்கிக் காட்சிப்படுத்திய நிகழ்வுகள்தான் நவீன நாடகங்களாக அறிமுகப்பட்டன. அந்தப் போக்கிலிருந்து மாற்றங்களை உருவாக்கிப் பல்வேறு வகைப்பட்ட நாடகப்பிரதிகளும் மேடையேற்ற முறைகளும் உள்ளன என்ற தகவலே பொது வாசகனுக்கு அல்லது பார்வையாளனுக்கு இன்னும் எடுத்துச் செல்லப்படவில்லை.

சாகித்திய அகாதெமியின் ‘யுவபுரஷ்கார்’

படம்
  விடுதலை பெற்ற இந்தியாவில் கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட   அகாதெமிகளில் எழுத்துக்கலைகளுக்கான அமைப்பு சாகித்திய அகாதமி   (நுண்கலைகளுக்கானது லலித் கலா அகாதெமி; நிகழ்த்துக்கலைகளுக்கானது சங்கீத் நாடக   அகாதெமி). பல்வேறு நோக்கங்களுடன் 1954 இல் உருவாக்கப்பட்ட சாகித்திய அகாதெமி அடுத்த (1955) ஆண்டிலிருந்தே ஒவ்வொரு இந்திய மொழிக ளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எழுதியவர்களுக்கு விருதுகள் வழங்கத் தொடங்கியது. அவ்விருது தேசிய அளவில் கிடைக்கும் அங்கீகாரம் என முன்வைக்கப்பட்ட நிலையில் அவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் போட்டி ஆரம்பமானது.   அதன் விருதுகள் வழங்கியதின் வழியாகவே சாகித்திய அகாதெமியின் இருப்பைப் பலரும் அறிந்துகொண்டார்கள். நூலுக்கு விருது எனச் சொல்லப்பட்டாலும் தொடக்கம் முதலே ஆளுமைகளுக்கு விருது என்பதே நடைமுறையாகத் தமிழில் இருந்து வந்துள்ளது. எப்போதாவது சில ஆண்டுகளில் விருதுக்குழுவினர் ஆளுமையைப் பின்னுக்குத் தள்ளி எழுத்தை அங்கீகரிப்பதாக நினைத்துக் கொண்டார்கள்.

நெல்லையின் கண்ணன்: பேச்சின் ரசிகர்

படம்
நெல்லையில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, அதற்குத் தமிழின் நாடக முன்னோடியான (மனோன்மணீயம்) சுந்தரனார் பெயரும் வைக்கப்பட்டாலும் ஆரம்பத்திலேயே தமிழ்த்துறை தொடங்கப்படவில்லை. 1991 இல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன பின்பே 1996 இல் தான் தமிழியல் துறை தொடங்கப்பட்டது. காலத்தாழ்ச்சியில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட பின்னணியில் உள்ளூர் தமிழ் அமைப்புகளும் ஆர்வலர்களும் இருந்தார்கள். “சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை இருக்கவேண்டியதின் காரணங்களைச் சுட்டிக்காட்டிப் பத்திரிகைகள் எழுதின” அப்படி எழுத வைத்தவர்களில் ஒருவராக நெல்லை கண்ணனும் இருந்தார் என அவரே சொன்னார்.

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள்

படம்
  புலம்பெயர் இலக்கியங்கள் என்ற சொல்லாடல் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் இலக்கியப்பரப்பிற்குள் தவிர்க்கமுடியாத சொல்லாடலாக மாறியிருக்கிறது.   இலக்கிய வகைமைப்பாட்டில் வரையறைகள் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தச் சொல்லாடலின் வரவு தனி ஈழக்கோரிக்கைக்கான போராட்டங்கள், போர்கள், வெற்றிகள், தோல்விகள், அமைதிப் பேச்சுகள், மீறல்கள், உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வுகள், அகதி நிலை வாழ்க்கை என்பனவற்றோடு தொடர்புபற்றி நிற்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களைப் பற்றிய பதிவுகளாகவும் இருப்பின் துயரங்களாகவும் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களின் விவரிப்புகளாகவும் எழுதப்பெற்ற கவிதைகளும் புனைகதைகளும் இப்போது தமிழின் புலம்பெயர் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.