இடுகைகள்

வகைப்படுத்துதல் வெளிப்பாடுகள்

தனது கவிதைகளை வாசிக்க நினைக்கும் வாசகருக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவவேண்டும் என்று பெரும்பாலான கவிகள் நினைப்பதில்லை. கால வரிசையில் அடுக்கப்படும் கவிதைகள் கூடக் கவிதையை எழுதிய கவியின் மனப்பாங்கு மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவும். அதைத் தாண்டி வகைப்பாடு செய்வதற்குச் சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்றைப் பின்பற்றலாம். அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டால் வாசிப்பவர்கள் அதனைப் பின்பற்றிச் செல்வார்கள்.

பேச்சுமரபும் எழுத்துமரபும்

படம்
பேச்சும் எழுத்தும் உலகப்புகழ்பெற்ற பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கன்னிப் பேச்சு, கடைசிப்பேச்சு, காவியப்பேச்சு, உரைவீச்சு, தீப்பொறி, வெடிப்பேச்சு, நரிப்பேச்சு எனப் பேச்சுபற்றிய பெயர்ச்சொற்களை நினைக்கும்போது பலர் நினைவுக்கு வரலாம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழ்ந்தவர்களும். ஆண்டவர்களும் உண்டு ; மாண்டவர்களும் உண்டு. 

வெங்கடேஷ் சக்கரவர்த்தி

படம்
அவரைச் சினிமா விமர்சகர் என்று சொல்வதைவிடச் சினிமாவைக் கற்பித்துக் கொண்டே இருந்த ஆசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வகுப்பெடுத்த திரைப்பட ரசனை வகுப்புகள் பலவற்றில் இருந்திருக்கிறேன். முதன் முதலில் சந்தித்தது மதுரை மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அதற்கு முன்பே ப்ரீத்தம் சக்கரவர்த்தியைத் தெரியும். பரிக்‌ஷாவின் நாடகங்களில் பார்த்திருக்கிறேன்.

கோவையோடு ஞானியும்

படம்
கோவை புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். சந்தித்தவர்களில் - மேடையில் அவரின் பெயரைக் குறைந்தது பத்துப்பேராவது உச்சரித்திருப்பார்கள். கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருக்கும் இந்த இரண்டு மாதத்தில் நான் சந்திக்கும் பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என்பதும் சொல்லப்படுகிறது. ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்துள்ளார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிகிறது.

கலை அடிப்படைகள் -….. கற்பிக்கின்றவர்களுக்கும் கற்கின்றவர்களுக்குமான குறிப்புகள்

படம்
கலை இலக்கியப் படைப்புகளை வகுப்பறைக் கல்வி முறையில் கற்பிப்பதுவும், கற்றுக் கொள்வதும் சாத்தியம் தானா?அப்படிக் கற்றுக் கொண்ட ஒருவர் படைப்பில் ஈடுபடுதலும் திறமான படைப்புகளை உருவாக்குதலும் இயலுமா..? இவ்வளவு ஏன்../திறமான ஆசிரியர்களால் திறமான படைப்புகள் எதுவும் உருவாக்கப்படுவது சாத்தியமில்லையே…

அரசுத்துறைகள் கவனிக்க வேண்டிய ஒன்று

படம்
இப்போது நான் பணியிலிருக்கும் கோவை குமரகுரு கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.இந்த ஆண்டின் கல்லூரிக்கான இலக்குகள், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடங்கள், பாடங்களைத் தாண்டிய வாய்ப்புகள், நடத்தவேண்டிய விழாக்கள், கொண்டாட்டங்கள் குறித்த திட்டமிடல்களைக் கல்லூரி முதல்வரோடு கலந்தாலோசித்து துறையின் தலைவர்கள் செய்தார்கள்.

பாராட்டும் பரிசும்

  தனது பிறந்த நாளைக் கவிஞர்கள் தினமாக அறிவித்துக் கவிஞர் ஒருவருக்கு விருது அளித்து வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து என்பது இதுவரை கேள்விப்பட்ட செய்தியாக இருந்தது. இன்று நேரில் பார்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இந்த ஆண்டுக்கான கவிஞர்கள்தின விருதைப் பெறும் பெயராகக்கவி சக்திஜோதி பெயர் அறிவிக்கப்பட்டபோதே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு நேரிலும் வந்து வாழ்த்துவேன் எனச் சொல்லியிருந்தேன். நிகழ்வு நான் இப்போதிருக்கும் கோவையில் நடைபெறுவதாக விளம்பரத்தில் சொல்லப்பட்டதும் ஒரு காரணம்.