பாராட்டும் பரிசும்
தனது பிறந்த நாளைக் கவிஞர்கள் தினமாக அறிவித்துக் கவிஞர் ஒருவருக்கு விருது அளித்து வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து என்பது இதுவரை கேள்விப்பட்ட செய்தியாக இருந்தது. இன்று நேரில் பார்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இந்த ஆண்டுக்கான கவிஞர்கள்தின விருதைப் பெறும் பெயராகக்கவி சக்திஜோதி பெயர் அறிவிக்கப்பட்டபோதே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு நேரிலும் வந்து வாழ்த்துவேன் எனச் சொல்லியிருந்தேன். நிகழ்வு நான் இப்போதிருக்கும் கோவையில் நடைபெறுவதாக விளம்பரத்தில் சொல்லப்பட்டதும் ஒரு காரணம்.