இடுகைகள்

இணக்க அரசியல் -இரண்டு குறிப்புகள்

இணக்க அரசியல் என்பதை விட்டுக்கொடுத்தல் எனப்புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஆனால் எதிரில் இருப்பவர்கள் யார் என்பதுதான் ஒரு நிலைப்பாட்டின் வரையறையை உருவாக்குகிறது. 

அழகிய பெரியவன்: கதைவெளிப்பயணம்

படம்
நீ நிகழ்ந்த போது என்ற கவிதைத் தொகுப்பைத் தனது இலக்கிய அறிமுகத்தைச் செய்த அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான தீட்டு தமிழினிப் பதிப்பாக வெளி வந்த 2000- க்குப்பின் கவனிக்கப் பட வேண்டிய சிறுகதையாளராக ஆனதோடு தனது முதல் நாவலான தகப்பன் கொடி வழியாக முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவராக அறியப்படுகிறார். அவரது கதைகளைக் குறித்து சரியாக ஐந்தாண்டு இடைவெளியில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கே அவற்றை வரிசைப்படுத்தித் தருகிறேன்.

சென்னை புத்தகக்கண்காட்சி-2022

முகநூலில் எழுதிய இந்தக் குறிப்புகள் புத்தகம் வாங்கிப் படிக்க நினைப்பவர்களுக்கு உதவும். தேடும்போது பெயர்கள் நினைவில் வரும் அல்லவா?

வாசிப்பின் விரிவுகள்:

வாசிப்பின் நோக்கமும் தெரிவுகளும் பலவாக இருக்கும். எழுத்தின் கவனமும் முன்வைப்பும் சிலவாக மாறிவிடும்

சினிமா என்னும் பண்பாட்டு நடவடிக்கை

படம்
பத்து வயது முதல் திரையரங்குகளுக்குச் சென்று தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பவனாக இருந்த எனக்குக் கடந்த இரண்டு ஆண்டுகள் பெரும் சவாலாக மாறிவிட்டன. கடைசியாகத் திரையரங்கம் சென்று பார்த்த படம் திரௌபதி (திருநெல்வேலி ராம் தியேட்டரில் பிப்ரவரி 28, 2020). படம் பார்த்து முடித்தபோது ‘கலை இலக்கியம் குறித்துக் கற்றுத்தேர்ந்த கலைவிதிகள் அத்தனையும் தோல்வியுற்று நிற்பதாக உணர்ந்தேன். வெளியேறியபோது.எழுதுவதற்கு எதுவுமில்லை என்று மனம் உறுதி செய்து கொண்ட து.

நினைவுகள் அழிவதில்லை

படம்
  முகநூலுக்குள் இப்போது வந்தவுடன் அந்த இருவரது மரணச்செய்திகள் முன்னிற்கின்றன. இருவரோடும் நெருக்கமான பழக்கமும் நினைவில் இருக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன. முதலாமவர் நாடகவியலாளர் கே.எஸ்.ராஜேந்திரன்; இரண்டாமவர் நாவலாசியர் பா.விசாலம்