இடுகைகள்

இருபுனலும் வாய்த்த மலைகள்

படம்
மார்ச் 22 . உலக நன்னீர் நாள் கொண்டாட்டத்திற்காக முதல் நாள் சென்னையிலிருந்து வந்து விட்ட அந்த நண்பரை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஆழ்வார்குறிச்சிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஆழ்வார்குறிச்சிக்கும் முக்கூடலுக்கும் இடையில் இருக்கும் கோயில் வளாகத்தில் அவர் பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட ஊர் என்பதாக இல்லாமல் தாமிரபரணி நதியையொட்டிய பகுதியில் நடக்கும் சிறப்பு நாட்டுநலப் பணித்திட்ட முகாம். நெல்லையின் மேற்குப்பகுதியில் செயல்படும் அம்பை, ஆழ்வார் திருநகரி, பாபநாசம் கல்லூரிகளின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் கூட்டுச் செயல்பாடாக அந்த முகாம் நடந்துகொண்டிருந்தது.

அகத்திணைக்காட்சிகள்

படம்
தமிழ்ச் செவ்வியல் கவிதைக்குள் இடம்பெறும் உரிப்பொருட்கள் புணர்ச்சி, பிரிவு,இருத்தல்,  இரங்கல், ஊடல் ஆகிய அன்புசார்ந்த அகநிலையோடு, ஒருபால் விருப்பமும், பொருந்தாக் காமமும் என்னும் அன்புசாரா அகநிலையாகவும் இருக்கின்றன. இவ்வுரிப்பொருட்கள் அகப்பாடல்களில்  திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன. அதனால் கூறியது கூறல் என்னும்  நிலையைக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் அவற்றிற்குள் இடம்பெறும் கருப்பொருட்களும் முதல்பொருளும் உருவாக்கும் உருவகம், உவமை, இறைச்சி, உள்ளுறை  போன்றன  கவிதையியல் நுட்பங்களாக மாறி விடுவதைக் காணமுடிகிறது. ஒரு குறுந்தொகையில் நிலாவும்,  கலித்தொகைப்பாடலில் சொம்பும், அகநானூற்றில் வீடுறைச் சேவலும் பேடும் உருவாக்கும் அர்த்தத்தளங்கள் ரசிக்கத்தக்கனவாக மாறவிடுகின்றன.

வாசிப்புத் தூண்டலுக்கான பனுவல்( A Reader) - ஓர் உரையாடல்

ரீடர்-  A Reader- என்பதை ஓரளவு உள்வாங்கிக் கொண்டு தமிழில் எழுத்தாளர்களுக்கான படைப்புலகங்கள் என்ற பொருண்மையில் கலைஞன் பதிப்பகம் 5 நூல்களை வெளியிட்டது. 2000 இல் வெளிவந்த அவ்வந்து நூல்களும் அந்தந்த எழுத்தாளர்களின்/ எழுத்துகளின் மீது பற்றுக் கொண்ட அல்லது விமரிசனப்பார்வை கொண்டவர்களால் தொகுக்கப்பெற்றன. சுந்தரராமசாமி படைப்புலகம் -ராஜமார்த்தாண்டன் கி.ராஜநாராயணன் படைப்புலகம் - பிரேம் :  ரமேஷ் லா.ச.ராமாமிருதம் படைப்புலகம் -அபி அசோகமித்திரன் படைப்புலகம் - ஞாநி ஜெயகாந்தன் படைப்புலகம் -டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன்

மெல்லினக்கவிதைகள் - ஒரு குறிப்பு

படம்
  நேர்க்காட்சிகளாகவும், கற்பனையாகவும் காட்சிச்சித்திரங்களை வரைபவர்கள் மென்வண்ணங்களால் தீட்டும்போது வெளிப்படுவது வரையப்படும் ஓவியக்காட்சிகளின் மென்மையியல் மட்டுமல்ல; வரையும் ஓவியரின் மென்மைக்கலையியலும் அழகியலும் தான்.

சிற்றிலக்கியங்களின் காலப்பின்னணி

படம்
இலக்கியவரலாறும் நாட்டுவரலாறும்            தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது . அதன் வரலாற்றை எழுதியவர்களும் பல்வேறு விதமாக வரலாற்றை எழுதிக் காட்டியிருக்கிறார்கள்.   கருத்தியல் வரலாறும் இலக்கியவரலாறும் நகர்ந்த விதத்தைக் கலாநிதி ஆ.வேலுப் பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் முன்வைத்துள்ளது. கால அடிப்படையில் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமென நினைத்த அறிஞர் மு. அருணாசலம் நூற்றாண்டுகள் அடிப்படையில் இலக்கியவரலாற்றைத் தொகுத்துத் தந்தார். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை எழுதப்பெற்ற அவரது இலக்கியவரலாற்று நூல்களில் முதன்மையான கவிகளின் காலத்தை அறுதியிட்டதோடு ஒவ்வொருவரின் பங்களிப்புகளையும், அவற்றின் சிறப்புத்தன்மைகளையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். 

வெளியேற்றம் -மாற்றம் - இலக்குகள் : சமஸ்

படம்
மாணவப்பருவம் தொடங்கி வாசித்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தினசரி தினமணி. ஆங்கிலத் தினசரியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எனது வாசிப்பில் இருந்தது. இந்துக் குழுமத்தின் ஆங்கிலத் தினசரியைப் பெரிதும் வாசித்ததில்லை. இவ்விரு தினசரிகளிலும் நண்பர்கள் சிலர் - சிகாமணி, ராஜமார்த்தாண்டன், எஸ்.விசுவநாதன் - ஆசிரியர் குழுவில் இருந்தனர். முதுகலையில் விருப்பப்பாடமாக இதழியலைத் தெரிவுசெய்திருந்ததால் இருவாரப் பயிற்சிக்காகவும் தினமணிக்குச் சென்றதுண்டு.