இடுகைகள்

சமகாலத்தமிழ் நாடகங்கள்

படம்
இருபத்தியோராம் நூற்றாண்டின் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட   இந்தியர்கள் அல்லது தமிழர்களின் ‘நிகழ்காலம்‘ என்பதை 1990 - க்குப் பிந்திய முப்பதாண்டுகளாகக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களது ‘சமகாலம்‘ இன்னும் கொஞ்சம் பின்னுக்குப் போய் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட பத்தாண்டுகளாக -1950-களாகக் கொள்ளப்பட வேண்டும். ஆனால்  அவர்களது ‘நேற்று‘ என்பது ஒரு நூற்றாண்டுப் பழைமையாகவும் இருக்கலாம். ஓராயிரம் ஆண்டுப் பழைமையாகவும் கொள்ளப்படலாம்.

வேளாண்சட்டங்கள் : வாக்காளர் எவ்வழி அரசும் அவ்வழி

படம்
  உலகமயத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு 30 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஏற்றுக் கொண்டது தொடங்கி, காங்கிரஸ் தலைமையில் - முனைவர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த ஆட்சிக் காலத்தில் தொழில் மண்டலங்களே வளர்த்தெடுக்கப்பட்டன.

சிதைவுகளின் முழுமை - பின் நவீனத்துவச் சொல்லாடல்கள்

படம்
நடிக அரசியல் தேசிய இன அடையாளம், வட்டாரவாதம், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள், நாடோடிகள், மூன்றாம் பாலினர், மதங்களின் உட்பிரிவு நம்பிக்கைகள், சடங்குகள், வெளிப்பாடுகள், சாதியின் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகள் போன்றனவற்றை அடையாள அரசியல் சொல்லாடல்கள் என்ற அளவில் விவாதிக்கலாம்; விவாதிக்க வேண்டும்; அவையெல்லாம் சரிசெய்யப்படவேண்டும். அதை வலியுறுத்தும் அரசியல் விவாதங்கள், இவையெல்லாம் ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மையான தடைக்கற்கள் என்பதையும் மறுப்பதில்லை.

முல்லையென அறியப்பட்ட சித்ரா

படம்
2014 முதலாகவே தொலைக்காட்சி அலை வரிசைகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விளம்பரப் படங்களின் நடிகை, தொடர்களின் நடிகை என வந்து கொண்டிருந்தார் என்றாலும், அவரது உருவமும் பேச்சும் சிரிப்புமான முகமும் பதிந்துபோன தொடராக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக் காட்சியின் முதன்மை நேரத்தொடர்தான். அந்தப் பெண்ணின் பெயர் சித்ரா என்பதுகூட நேற்றுத் தற்கொலை செய்துகொண்டதாகப் பரவிய செய்திக்குப் பின்புதான் தெரியும். செய்திகளில் கூட முல்லையாக நடித்த சித்ரா என்றுதான் சொன்னார்கள்.

இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு: கதைப் படம் அல்ல; முன்னெடுப்பு சினிமா

படம்
  படத்திற்குள் கதை இருக்கிறது. அதுவும் ஒரு காதல் கதை இருக்கிறது. ஒரு தடையை உருவாக்கிக் காட்டி,  இந்தத்தடையை மீறிக் காதல் நிறைவேறுமா ? என்ற கேள்வியை எழுப்பிச் சிக்கல்களை முன்வைத்துத் திருப்பங்களைத் தாண்டிக் காதல் நிறைவேறியது எனக்காட்டி இன்பியல் முடிவைத் தரும் காதல் கதைகள் இங்கே செய்யப்படுகின்றன. இந்தப் படத்திலும் அப்படிச் செய்யப்பட்ட காதல் கதை இருக்கிறது.

இதுவொரு புலப்பாட்டுக்கலை

படம்
60 நாட்களைத் தாண்டிய பெருந்தலை- பிக்பாஸ் - பங்கேற்பாளர்களின் இன்றைய பொறுப்புச் செயல் தங்களை முன்மொழிதல். இதுவரை தன்னை ஒரு பங்கேற்பாளராக எப்படி முன் வைத்தார்கள்; அதன் மூலம் பார்வையாளர்களை எப்படி மகிழ்ச்சிப் படுத்தினார்கள் எனச் சொல்லும்படி வலியுறுத்தப்பட்டது. பொதுவான செயல்பாடுகளான காலைவிழிப்பு, வீட்டின் வேலைகள், ஆடை அணிதல், மற்றவர்களோடு பழகுதல் என்பதில் அவரவர்களின் தனித்தன்மையான வெளிப்பாடு இருந்தால் கூடச் சொல்லியிருக்கலாம்.

வட்டாரத்திலிருந்து தேசியத்திற்கு

கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல், மாநிலம் தழுவிய அரசியலிலிருந்து வட்டார அரசியலுக்கு நகர்ந்துவிட்டது. வட்டார அரசியல் என்பது முன்பு மண்டலங்களின் அரசியலாக இருந்தது. அதன் வெளிப்படையான அடையாளம் திராவிட முன்னேற்றக் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக திரு மு.க. அழகிரியை நியமித்ததைச் சொல்லலாம். மண்டல அளவு அரசியல், மாவட்ட அளவு அரசியலாக மாறி, தாலுகா அளவு அரசியலாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடுகளே கட்சி அமைப்புகளுக்காக ஒரே மாவட்டம் இரண்டு மூன்று பிரிவுகளாக ஆக்கப்பட்டுத் தனித்தனி மாவட்டச் செயலாளர்கள் நியமனங்கள் நடப்பது. இந்த நகர்வைத் தொடங்கி வைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.