ஸ்ரீஎன்ஸ்ரீவத்ஸா என்னும் மொழிபெயர்ப்பாளரும் கருணாகரனின் மத்தியூ கவிதைகளும்
அவரது மொழிபெயர்ப்பில் தினசரி ஒன்றிரண்டு கவிதைகள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. எழுதிய கவிகளின் அனுமதியுடனும் மொழிபெயர்ப்புக்கான ஒப்புதலுடனும் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார். அவரது மொழிபெயர்ப்பு வழியாகவே பல கவிகளை முதன்முதலாக வாசித்துள்ளேன். நானும் எப்போதாவது கவிதை வடிவத்தில் எனது நினைவுகளையும் நிலைப்பாடுகளையும் எழுதுவதுண்டு. அவற்றில் இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்துக் கவி அடையாளம் தந்து கூச்சப்பட வைத்துள்ளார்.