இடுகைகள்

இரு சினிமா ஆளுமைகளின் மரணங்கள்

படம்
  அருண்மொழி இனி இல்லையா? ஆர் யூ இன் சென்னை - R U N Chennai - என்று கேள்வியாகக் குறுந்தகவல் வரும்போதெல்லாம் தொலைபேசி எடுத்துப் பேசும் நேரம் நீண்டுகொண்டே போகும். தொடக்கத்தில் என்னை நீ கலாய்ப்பதும்; உன்னை நான் கலாய்ப்பதுமாக நீளும் அந்த உரையாடல்கள் அண்மையில் பார்த்த நாடகம், சினிமா, புத்தகம் என்று நீண்டு எப்போது சென்னை வருகிறீர்கள்?

நாட்டரசியல் : மூன்று குறிப்புகள்

24 மணிநேரத்திறப்பு என்னும் அடுத்த கட்ட நகர்வு 24 மணி நேரமும் கடைகள்/வணிக நிறுவனங்கள்  திறந்திருக்கும். தமிழ்ச் சமூகம் நுகர்வுச் சமூகமாக மாறுகிறது என்பதைச் சட்டப்படி முன்வைத்துள்ளது. இந்த அறிவிக்கை. இந்த அறிவிக்கையில் கட்டுப்பாடுகள் இல்லை. பொதுவாக வரையறைகளில் மட்டுமே விதிவிலக்குகளும் கட்டுப்பாடுகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். வரையறுப்பதற்கு மாறாகத் திறப்புகளில் இவை இருப்பதில்லை.

உலகக் கோப்பைக் கிரிக்கெட்

பார்வையாள நினைவுகள்  ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சேர்ந்து நடத்திய 1992 உலகக் கோப்பைத் தொடக்கவிழாக் காட்சிகளைச் சொந்த தொலைக் காட்சியின் முன்னால் உட்கார்ந்து பார்த்துவிடும் ஆர்வத்தோடு காலையிலிருந்தே தயாராக இருந்தோம்.புதுச்சேரி, அங்காளம்மன் நகர், பிள்ளையார்கோவில் தெரு 52 ஆம் எண், முதல் மாடி வீட்டின் முன்னறையில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி படங்காட்டத் தொடங்கியபோது தொடக்க நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டன. நான் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பேன் என்பதால் வாங்கவில்லை. மனைவியும் பார்ப்பார். மகளும் மகனும் பார்ப்பார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் பிள்ளைகளும் கிரிக்கெட் பிரியர்கள் என்பதால் அவ்வப்போது அங்கே போய்ப் பார்ப்போம்.உலகக் கோப்பைப் போட்டிகள் தொடர்ச்சியாக நடக்கும் என்பதால் தினசரி அங்கே போய் உட்காருவதில் இருக்கும் சிரமம் உணர்த்தப்பெற்றது. 

சில மாயைகளும் சந்தேகங்களும்

படம்
கருத்தியல் விவாதங்களைத் தீர்மானிப்பதிலும் இலக்கியப்போக்கைத் தீர்மானிப்பதிலும் சில நூல்கள், சில ஆளுமைகள், சில நிகழ்வுகள், சில பத்திரிகைகள் முக்கியப்பங்காற்றுவதின் மூலமாக வரலாற்றின் பங்குதாரராக மாறுவிடக்கூடும். அப்படியான இரண்டை இங்கே பார்க்கலாம். இவை 2000 -க்கு முன் நடந்தவை. இப்போது இப்படியானவற்றைக் கண்டுபிடித்து முன்வைக்க முடியவில்லை.

வரலாறுகள் எழுதப்பட்ட கதை

படம்
இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறையில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது. ஒரு தேசத்திற்கு வரலாற்றுணர்வு இல்லை எனச் சொல்கிறவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் , அந்தத் தேசத்தின் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான சான்றுகளைத் தொகுத்து வைக்காத நிலையிலிருந்தே இத்தகைய கருத்து உருவாகிறது என்பது புரிய வரலாம்.

சாருவின்மயானக் கொள்ளை :கலவையான நிகழ்த்துதலைக் கோரும் நாடகப்பிரதி

படம்
     தன்னை உள்ளிருத்திக் கதைகள்(Auto -Fictional) எழுதும் சாருநிவேதிதா அதே பாணியை நாடகப் பிரதி ஆக்கத்திலும் கையாண்டுள்ளார். புதுவைப் பகுதியில் அங்காளம்மன் திருவிழாவில் நடக்கும் ”மயானக் கொள்ளை” என்னும் சடங்கியல் நிகழ்வின் காட்சிகள் அவற்றின் பின்னிருக்கும் நம்பிக்கைகளோடும் மாயத் தன்மையோடும் உள்ளோட்டமாக இடம்பெற்று நிகழ்த்துப் பிரதியாகியுள்ளது. முதல் அங்கம் வசனக் கதைசொல்லலாகவும் இரண்டாவது அங்கம் குரூர அரங்கியலாகவும் மூன்றாவது அங்கம் பழக்கங்களின் மீதான அங்கதமாகவும் கடைசி அங்கம் சடங்கியல் அரங்காகவும் எழுதப்பட்டுள்ளது. 

இரண்டு நாடக ஆளுமைகள்: எஸ்பிஎஸ். ந.முத்துசாமி

படம்
கலைஞர் எஸ்.பி.சீனிவாசன்  வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இயங்கும் மாற்று நாடகக்குழுவின் முழுமையான இயக்கம் பேரா. கி.பார்த்திபராஜாவின் முயற்சிகள் சார்ந்தது. அம்முயற்சிகளுக்குத் துணையாக இருப்பது அவர் பணியாற்றும் கல்லூரி. முயற்சியுடைய ஒருவருக்குத் தடைசொல்லாத நிறுவனம் கிடைத்துவிட்டால் வானம் வசப்படும் என்பதற்கு மாற்றுநாடக இயக்கத்தின் செயல்பாடுகள் எடுத்துக்காட்டு. மாற்று நாடகக் குழுவின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியான நாடக இயக்கத்தின் கண்ணிகளில் ஒன்று.