கத்தார் : கனவுகளைக் காட்சியாக்கிய கலைஞன்.
நான் அவரது மேடை நிகழ்வை அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டடமேடையில் பார்த்தேன். அப்போது நான் ஆய்வு மாணவன். 1000 பேருக்கு மேல் நாற்காலிகள் போட்டு அமரக்கூடிய அரங்கு அது. ஆனால் அன்று நாற்காலிகள் எல்லாம் நெருக்கி முன்னோக்கி நகர்த்தப்பட்டு உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பின்னால் இன்னொரு ஆயிரம்பேர் நின்று பார்த்தார்கள். அவ்வளவுபேரும் கட்டணம் செலுத்தி வந்தவர்கள். புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுக்க முக்கியமான நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அவரது குழு அழைத்து வரப்பட்டிருந்தது. திறந்தவெளி அரங்குகளில் கட்டண நிகழ்ச்சியாக நடத்தக் கிடைத்த அனுமதி பின்னர் மறுக்கப்பட்ட நிலையில் எல்லா ஊர்களிலும் மூடிய அரங்குகளின் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன