இடுகைகள்

அண்மைக் கதைகள் இரண்டு- 1.சரவணன் சந்திரன்

படம்
அவரது கதைககளுக்குள்  பெரும்பாலும் தன்னை ஒரு பாத்திரமாக்கி – கதைசொல்லும் இடத்தில் நிறுத்திக்கொண்டு சொல்கிறார். இந்தச் சொல்முறையில் கதைக்கு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்றாலும் புனைவுத்தன்மை குறைவு. எழுதுபவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து கட்டுரையை நெருங்கிவிடும். இதனை முன்பே சில     தடவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். என்றாலும் அந்த சொல்முறை அவருக்கு உவப்பானதாகவும் நெருக்கமானதாகவும் இருப்பதாக நினைத்திருக்கலாம்.

இந்து சமயத்தைப் புதுப்பித்தல்: ஈசா யோகியின் மகாசிவராத்திரிகள்

படம்
திருவிழாக்காலத்தில் கிராமத்தின்/ நகரத்தின் மொத்த வெளியும் பக்தியின் வெளியாகவும் கொண்டாட்டத்தின் மேடையாகவும் ஆக்கப்படுவது நீண்டகால நடைமுறை. அமெரிக்க அரங்கியல் செயல்பாட்டாளர் ரிச்சர்ட் செக்னர் RICHARD SCHECHNER) டெல்லிக்குப் பக்கமாக நிகழ்த்தப்பெற்ற ராம்லீலா நிகழ்வைப் பார்த்தபின்பே தனது அரங்கச் செயல்பாடுகளைச் சூழல் அரங்கு (ENVIRONMENT THEATRE ) என்ற வடிவத்திற்கு மாற்றினார். இந்துசமயத்தின் எல்லாவகை ஆன்மீகமும் சடங்குகளும் திருவிழாக்களைக் கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் இணைந்த பெருநிகழ்வுகளாகக் கட்டமைத்ததின் வழியாக நிலைபெற்றுள்ளன.ஜக்கி வாசுதேவின் மகா சிவராத்திரிக் கொண்டாட்டங்கள் நவீன சூழல் அரங்க நிகழ்வு. அவ்வப்போது அது குறித்து எழுதிவந்துள்ளேன்.

தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் *************** இது ஒரு ஆற்றுகைப் பனுவல் (PERFORMANCE TEXT) இப்பனுவலில் உள்ள கவிதை வரிகளை எழுதிய கவிகள் சி.சுப்பிரமணிய பாரதி வ.ஐ.ச.ஜெயபாலன் கோடாங்கி தேன்மொழிதாஸ் ஆதவன் தீட்சண்யா மகேஷ் பொன் ****** ஆற்றுகைப் பனுவலாக்கம் : அ.ராமசாமி

முழுமையைத் தவறவிடுகின்றன

படம்
  சில வெற்றிப்படங்களில் - தனித்தன்மை கொண்ட நாயகப்பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஸ் என்ற நடிகையை மையப்பாத்திரமாக்கி எடுக்கப்பட்டுள்ள டிரைவர் ஜமுனாவும் இணையவெளிப்படங்களின் பொதுத்தன்மையோடுதான் வந்துள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால் , முழுமையைத் தவறவிட்ட இன்னொரு படமாகவே இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் குற்றப் பின்னணி , ரகசியம் , திடீர் திருப்பம் , எதிர்பாராத முடிவு என்ற கட்டமைப்போடுதான் எடுக்கப்படுகின்றன. அந்தப் பொதுத்தன்மை இந்தப்படத்திலும் இருக்கிறது.

சூழலில் வாழ்தலும் எழுதுதலும்

படம்
அச்சு நூல்களுக்கு இணையாக இணைய இதழ்களையும் வாசிப்பவன். அதன் இடையே முகநூலிலும் நுழைந்து வெளியேறுவதுண்டு. கோவிட் தொற்றுக் காலத்தில் முகநூலில் செலவழித்த நேரம் அதிகம் என்றே சொல்லலாம். முன்பு வாசிக்கக் கிடைத்தது போல முகநூல் கவிதைகள் இப்போது இல்லை என்ற உணர்வு உண்டான நிலையில் தான் முகநூலில் எழுதப்படும் தன் அனுபவக் குறிப்புகளைத் தேடி வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தன் அனுபவக் குறிப்புகளை எழுதும் முகநூல் பதிவர்களில் பலர் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், அமைப்புகளில் செயல்படும்போது சந்திக்கும் சிக்கல்கள் எனப் பலவற்றை எழுதும்போது அவற்றை வாசித்தபோது புனைவுகளின் தன்மையை நெருங்குவதைக் கண்டிருக்கிறேன்.

சென்னைப் புத்தகக்கண்காட்சிப் பரிந்துரைகள்

நாம் எப்படி வாசிக்கிறோம்? வாசிப்புத்தேவைகள் எப்படி உருவாகின்றன? நமது வாசிப்பு விருப்பங்கள் எப்படிப்பட்டவை? வாசித்தவற்றை                       யாருக்குச் சொல்கிறோம் என்ற புரிதலோடு இந்தப் பரிந்துரைகள்.

சென்னைப் புத்தகக்காட்சிப் பரிந்துரைகள் -2

நாம் எப்படி வாசிக்கிறோம்? வாசிப்புத்தேவைகள் எப்படி உருவாகின்றன? நமது வாசிப்பு விருப்பங்கள் எப்படிப்பட்டவை? வாசித்தவற்றை யாருக்குச் சொல்கிறோம் என்ற புரிதலோடு இந்தப் பரிந்துரைகள்.