இடுகைகள்

வாழ்த்துகள் அம்பைக்கு.....

படம்
இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பெண்மையச் சொல்லாடல்களை வெளிப்படுத்தும் வடிவமாகத் தனது சிறுகதைகளைத் தொடர்ந்து தந்துகொண்டிருந்தவர். இதுவரை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களின் பங்களிப்புகளோடு ஒப்புநோக்க, இந்த விருது அவருக்குத் தாமதமாகவே தரப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். கட்டுரைகள், சிறுகதைகள் என்ற இரு வடிவங்களில் அவரது வெளிப்பாடுகள் இருந்தபோதிலும் சிறுகதையே அம்பையின் அடையாளம்.

தீர்க்கவாசகன் கவிதைகள்

கட்டுரை மனம் என்னுடையது. ஆனால் விரிவாக அமர்ந்து எழுதமுடியாத கட்டுரைகளைக் கவிதை வடிவத்திற்குள் அடைத்துவிடவும் முயற்சிசெய்வேன். அந்த வகையில் எனது கவிதைகள் எப்போதும் புறம் சார்ந்த நிகழ்வுகளை விவரிப்பனவாகவும் விமரிசனம் செய்வனவாகவும் இருக்கின்றன. 

ராவணனை நினைவில் வைத்திருக்கும் திரிகோணமலை

படம்
ராமாயணம் கற்பனை; அதில் வரும் பாத்திரங்களும் இடங்களும் புனையப் பட்டவை. ராவணனின் தலைநகரான லங்காபுரியும் அங்கிருந்த மனிதர்களும் இப்போதிருக்கும் இலங்கையோடு தொடர்புடையன அல்ல என்று முடிவுகளை முன்வைத்த ஆய்வுகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். வட இந்தியாவில் இருக்கும் அயோத்தியிலிருந்த ராம லக்குவனர்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் இருக்கும் இலங்கைத்தீவுக்கு வந்திருக்க முடியுமா?

அலையடிக்கும் திரிகோணமலை

படம்
திரிகோணமலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது காலை 6.30.கண்ட காட்சி இந்த மான். காட்டுக்குள்ளும் காட்சிச் சாலையிலும் மான் இணைகள்/கூட்டங்கள் தான் இதுவரையான அனுபவம். கடைகளும் மனிதர்களும் நிரம்பிய இடத்தில் தனியொரு மானாகப் பார்த்தில்லை. மானும் மிரளவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை.

ஜயரத்ன என்னும் மனிதம்

படம்
இரண்டாவது இலங்கைச் செலவில் மறக்க முடியாத பயண அனுபவத்தைத் தந்தவர்கள் சிங்களமொழி பேசும் மனிதர்களாக இருந்தது தற்செயல் நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். கொழும்பு – பேராதனை புகையிரதப் பயணத்தில் சந்தித்தவரும் புத்த குருமார்களும் தந்த அனுபவத்திற்கு மாறான அனுவத்தைச் சபரகமுவ பல்கலைக்கழக வாகன ஓட்டி தந்தார். மலையகத்திலிருந்து சபரகமுவ பல்கலைக்கழகம் போய்த் திரும்பிய பயணம் மறக்கமுடியாத பயணமாக ஆனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பல்கலைக்கழக வாகனத்தின் ஓட்டுநரென்றால், இரண்டாவது காரணம் அந்த மலைப்பயணத்தின் வளைவு நெளிவுகளும் அடர்வனப் பகுதிகளும் எனலாம்.

சிங்களப் பகுதிக்குள் ஒரு தமிழ்த்துறை

படம்
இலங்கையின் மற்ற பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் பலரும் வந்து போவார்கள்; நான் பணியாற்றும் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு இலங்கையின் தமிழறிஞர்களும் எழுத்தாளர்களும் கூட அதிகம் வருவதில்லை. நீங்கள் திரும்பவும் இலங்கை வரும்போது கட்டாயம் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு வரவேண்டும். கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கும் எங்கள் மாணவ மாணவிகளோடு உரையாட வேண்டும் எனத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் அப்துல் ஹக் லறீனா.