கொடியன் குளம்:முதல் பார்வை
புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்கு மாறுவதற்காக விண்ணப்பம் செய்தபோது கிடைக்கும் என்று நினைத்து விண்ணப்பிக்கவில்லை கிடைத்த பின்னர் அமைதியான ஊரிலிருந்து கலவரமான ஓர் ஊருக்குப் போகிறேன் என்று நண்பர்கள் வருத்தம் அடைந்தார்கள். எனக்குள்ளும் அந்த வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்திற்குப் பின்னிருந்த பெரும் நிகழ்வு கொடியன் குளம் சாதிக்கலவரம். இந்தியாவில் சாதிகளும் சாதிகளுக்கிடையே வேறுபாடுகளும் அடக்குமுறைகளும் இருக்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்டக் கலவரம் போல இந்தியாவின் எல்லா இடங்களிலும் கலவரங்கள் வெடிக்கவே செய்யும்; ஆகவே கலவரத்திற்குள் வாழ்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சமாதானப்பட்டுக்கொண்டேன். நண்பர்களையும் சமாதானப் படுத்தினேன்.