இடுகைகள்

இன்னுமொரு குடிப்பெயர்வு

படம்
இதுவரையிலான வாழ்நாளில் மூன்று பங்குக் காலத்தைக் கழித்த நெல்லை நகரவாழ்க்கை இன்றோடு நிறைவடைகிறது. இன்று மதுரை – திருமங்கலத்தில் குடியேறுவதற்கான பயணத்தைத் தொடங்குகிறேன்.

கருணா:நிகழக்கூடாத மரணம்

படம்
  நேரடித் தொடர்புகள் இல்லாத நிலையிலும் நண்பர்கள் என்ற அடையாளத்தோடு வாசிக்கவும் முரண்படவும் உரையாடவும் உதவி கேட்கவுமான வாய்ப்புகள் கொண்ட சமூக ஊடகத்தின் காலத்தில் வாழும் நமக்கு சில மரணங்க ள் நிகழக்கூடிய மரணங்களாகத் தோன்றிக் கடந்துபோகின்றன. சில மரணங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று தோன்றுகின்றன.

அடம்பிடித்து அழும் காந்தியும் புத்தனும்

படம்
ஒரு நாள் இடைவெளியில் இணையப் பக்கங்களில் பதிவேற்றம் பெற்ற இந்த இரண்டு கவிதைகளையும் வாசித்தபோது இரண்டுக்கும் இடையே கவிதையின் சொல்முறையிலும் அமைப்பாக்கத்திலும் முன்வைப்பிலும் உருவாக்கும் உணர்வலைகளிலும் பெருத்த ஒற்றுமைகள் இருப்பதை உணரமுடிந்தது. இப்படியான ஒற்றுமைகளை உருவாக்குவது அவர்கள் இருவரும் கவிதையாக்க நினைத்த நேர்நிலை நிகழ்வுகள் என்றே சொல்லத்தோன்றுகிறது. முகநூலில் யவனிகாஸ்ரீராமின் கவிதையை வாசித்தது முதல் நாள் (டிசம்பர்.17) அடுத்தநாள் ரியாஸ் குரானாவின் கவிதை நடு இதழில் வாசிக்கக் கிடைத்தது.

வேதசகாயகுமார்: நினைவலைகள்

படம்
அவரது இறப்பு முதல் தகவலாக என்னிடம் வந்து சேர்ந்தபோது நேரம் முன்னிரவு 7.50. எழுதியவர் அனந்தபுரி நயினார். வருத்தமான செய்தி என பின்னூட்டக் குறிப்பெழுதிய பின் அவரோடான சந்திப்புகளும் உரையாடல்களும் விவாதங்களும் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன.

நம் சமையலறையில்... : கட்டுப்படுத்தப்பட்ட எழுத்தும் வாசிப்பும்

படம்
கொன்றை அறக்கட்டளை, குமுதம் இதழுடன் இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் குறிப்பான ஒற்றைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. என்றாலும் சிலவகைக் கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் நெருக்கடி கொண்டது அப்போட்டி.

சமகாலத்தமிழ் நாடகங்கள்

படம்
இருபத்தியோராம் நூற்றாண்டின் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட   இந்தியர்கள் அல்லது தமிழர்களின் ‘நிகழ்காலம்‘ என்பதை 1990 - க்குப் பிந்திய முப்பதாண்டுகளாகக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களது ‘சமகாலம்‘ இன்னும் கொஞ்சம் பின்னுக்குப் போய் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட பத்தாண்டுகளாக -1950-களாகக் கொள்ளப்பட வேண்டும். ஆனால்  அவர்களது ‘நேற்று‘ என்பது ஒரு நூற்றாண்டுப் பழைமையாகவும் இருக்கலாம். ஓராயிரம் ஆண்டுப் பழைமையாகவும் கொள்ளப்படலாம்.

வேளாண்சட்டங்கள் : வாக்காளர் எவ்வழி அரசும் அவ்வழி

படம்
  உலகமயத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு 30 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஏற்றுக் கொண்டது தொடங்கி, காங்கிரஸ் தலைமையில் - முனைவர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த ஆட்சிக் காலத்தில் தொழில் மண்டலங்களே வளர்த்தெடுக்கப்பட்டன.