இடுகைகள்

முல்லையென அறியப்பட்ட சித்ரா

படம்
2014 முதலாகவே தொலைக்காட்சி அலை வரிசைகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விளம்பரப் படங்களின் நடிகை, தொடர்களின் நடிகை என வந்து கொண்டிருந்தார் என்றாலும், அவரது உருவமும் பேச்சும் சிரிப்புமான முகமும் பதிந்துபோன தொடராக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக் காட்சியின் முதன்மை நேரத்தொடர்தான். அந்தப் பெண்ணின் பெயர் சித்ரா என்பதுகூட நேற்றுத் தற்கொலை செய்துகொண்டதாகப் பரவிய செய்திக்குப் பின்புதான் தெரியும். செய்திகளில் கூட முல்லையாக நடித்த சித்ரா என்றுதான் சொன்னார்கள்.

இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு: கதைப் படம் அல்ல; முன்னெடுப்பு சினிமா

படம்
  படத்திற்குள் கதை இருக்கிறது. அதுவும் ஒரு காதல் கதை இருக்கிறது. ஒரு தடையை உருவாக்கிக் காட்டி,  இந்தத்தடையை மீறிக் காதல் நிறைவேறுமா ? என்ற கேள்வியை எழுப்பிச் சிக்கல்களை முன்வைத்துத் திருப்பங்களைத் தாண்டிக் காதல் நிறைவேறியது எனக்காட்டி இன்பியல் முடிவைத் தரும் காதல் கதைகள் இங்கே செய்யப்படுகின்றன. இந்தப் படத்திலும் அப்படிச் செய்யப்பட்ட காதல் கதை இருக்கிறது.

இதுவொரு புலப்பாட்டுக்கலை

படம்
60 நாட்களைத் தாண்டிய பெருந்தலை- பிக்பாஸ் - பங்கேற்பாளர்களின் இன்றைய பொறுப்புச் செயல் தங்களை முன்மொழிதல். இதுவரை தன்னை ஒரு பங்கேற்பாளராக எப்படி முன் வைத்தார்கள்; அதன் மூலம் பார்வையாளர்களை எப்படி மகிழ்ச்சிப் படுத்தினார்கள் எனச் சொல்லும்படி வலியுறுத்தப்பட்டது. பொதுவான செயல்பாடுகளான காலைவிழிப்பு, வீட்டின் வேலைகள், ஆடை அணிதல், மற்றவர்களோடு பழகுதல் என்பதில் அவரவர்களின் தனித்தன்மையான வெளிப்பாடு இருந்தால் கூடச் சொல்லியிருக்கலாம்.

வட்டாரத்திலிருந்து தேசியத்திற்கு

கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல், மாநிலம் தழுவிய அரசியலிலிருந்து வட்டார அரசியலுக்கு நகர்ந்துவிட்டது. வட்டார அரசியல் என்பது முன்பு மண்டலங்களின் அரசியலாக இருந்தது. அதன் வெளிப்படையான அடையாளம் திராவிட முன்னேற்றக் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக திரு மு.க. அழகிரியை நியமித்ததைச் சொல்லலாம். மண்டல அளவு அரசியல், மாவட்ட அளவு அரசியலாக மாறி, தாலுகா அளவு அரசியலாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடுகளே கட்சி அமைப்புகளுக்காக ஒரே மாவட்டம் இரண்டு மூன்று பிரிவுகளாக ஆக்கப்பட்டுத் தனித்தனி மாவட்டச் செயலாளர்கள் நியமனங்கள் நடப்பது. இந்த நகர்வைத் தொடங்கி வைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.

சம்ஸ்க்ருதம் என்னும் ஆதிக்கமொழி

இரண்டு ஆண்டுகள் போலந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கச் சென்ற போலந்து நாட்டில் கஷுபியன் மொழி என்றொரு மொழி வட்டார மொழியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அம்மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் அளவில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட வட்டாரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தனியாகத் தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.

இந்தியச்சாலைகளில் இருவேறு வாகனங்கள்

படம்
”மிதிவண்டியைப் பயன்படுத்தும் கலாசாரத்தை முன்னெடுக்கப் பெரியதொரு விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்” என நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய வெங்கய்யா நாயுடு அவர்கள் பேசியதாக வானொலியின் காலைச் செய்தியில் முதல் செய்தியாக வாசிக்கப்படுகிறது.