ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்
தமிழ்நாட்டின் இப்போதைய விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியில் பிறந்து சொந்த ஊரிலும் மதுரையிலும் பள்ளிக் கல்வி கற்றவர். திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் கல்லூரிக்கல்வியைக் முடித்தவர். பட்டப்படிப்பில் விலங்கியல் பட்டமும் பட்டமேற்படிப்பில் தமிழ் இலக்கியமும் பயின்றவர். புதுச்சேரி அரசுக் கல்லூரிகளில் 38 ஆண்டுகள் பணியாற்றியவர். பணியிடைக்காலத்தில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும், சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் நாவல் எழுத்தாளர்களில் முன்னோடியான அ.மாதவய்யாவின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். ஓய்வுக்குப் பின்னர் திருநெல்வேலியில் வசித்துவருகிறார் ராஜ்கௌதமன்.