இடுகைகள்

சிறார்ப்போராளியின் அனுபவங்கள்

படம்
ராதிகா பத்மநாதனின் என்னை நான் தேடுகின்றேன் வெளிச்சம் என்னும் இருளில்10 நிமிட நடை . கவி. கருணாகரன் வீட்டிலிருந்து கிளம்பி, கிளிநொச்சி கவின் கலைச் சோலை அரங்கத்திற்குப் போக அவ்வளவு நேரம்கூட ஆகாது. வீட்டைவிட்டுக் கிளம்பி மண்சாலையில் திரும்பியபோது அந்தப்பெண் வந்தார். மிகக்குறைவான நண்பர்களுடன் ஓர் உரையாடலுக்காக ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள அவரும் வந்ததால் எங்களோடு நடந்தபடி வந்தார். நடக்கும்போது ஒன்றும் பேசவில்லை. கருணாகரன் தான், அவரது. பெயர் ராதிகா என்று சொல்லிவிட்டுக் கடைசிக் கட்டப்போரில் பாதிக்கப்பெற்ற இளம் போராளி, அவரது வாழ்க்கை ஒரு சிறு நூலாக வந்திருக்கிறது. அவரே அதை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டு மற்றவற்றை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

அம்மாச்சி: பெண்களை விடுதலை செய்யும்

படம்
இருபது நாட்கள் பயணத்தில் 11 ஆவது நாளில் யாழ்ப்பாணத்தில் இறங்கினேன். அதிகாலை நான்குமணிக்கு இறங்கிய உடனே எனது தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது என்னருகில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருந்தவர் எடுத்தார். உடனே அணைத்துவிட்டு ‘நான் சீலன்…’ என்று கையை நீட்டினார். நானும் ‘வணக்கம் சீலன்’ என்று சொல்லிக் கையைக் கொடுத்துவிட்டுத் தயங்கினேன். சீலனைப் புகைப்படமாகப் பார்த்திருக்கிறேன்.

மன்னாருக்குப் போகும்போது -உரையாடல்கள் காலத்தின் வடிவம்

படம்
எழுத்தும் பேச்சும் இருவேறு வெளிப்பாட்டு வடிவங்கள். இரண்டிலும் சாதிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. இரண்டையும் லாவகமாகக் கையாளத் தெரிந்தவர்கள் பெருஞ்சாதனையாளர்களாக மாறி விடுவார்கள். 

நாடு திரும்பியுள்ள அகதிகளின் ஒரு வகைமாதிரி

படம்
முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. இலங்கைத் தீவுக்குள் தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பதாக நினைத்தவர்களின் முணுமுணுப்புகள் வெளிப்பட்ட காலத்திற்கு முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் முன் 30 ஆண்டுகள் போகவேண்டும். உரிமைகளுக்கான போராட்டமாகத் தொடங்கிப் பின்னர் தனிநாட்டுக்கான கோரிக்கையாக மாறிய பின் அந்நாடு போர்க்கள பூமியாக மாறியது. போர்க்களம் சிங்களப் பேரினவாதத்திற் கெதிரானதாகத் தோன்றி, தமிழர் இயக்கங்களுக்குள்ளேயே வென்றெடுக்கும் போராக மாறியது ஒருகட்டம். அக்கட்டத்தில் இந்திய அரசின் அமைதி காக்கும் படையின் நுழைவு இன்னொரு திசையையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. அதன் வெளியேற்றத்திற்குப் பின் நடந்த போரில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளான சிங்களப் படைகளோடும், மறைந்து திரிந்த வல்லாதிக்கப் பேரரசுகளோடும் மோதி வீழ்ந்தனர் முள்ளிவாய்க்காலில். 

பூனைக்குட்டியும் பூக்குட்டியும் ஒரு காரோட்டியும்

ஒரு பயணத்தில் நினைவில் இருப்பவர்கள் எப்போதும் நீண்டகால நண்பர்களாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களைத் திரும்பத் பார்த்திருப்போம்; அவர்களோடு பேசியிருப்போம்; பேசியனவற்றுள் உடன்பட்ட கருத்தும், உடன்படாத கருத்துமெனப் பலவும் வந்து போய்க் கொண்டே இருக்கும்.

எழுத்துகள் - எழுத்தாளர்கள்

படம்
அபிலாஷின் பத்தி எழுத்துகள் உயிர்மை.காம் இணைய இதழில் அபிலாஷ் இன்னொரு பத்தித் தொடரை எழுதப் போகிறார் என்றொரு விளம்பரத்தை மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ளார். உயிர்மை கண்டுபிடித்து வளர்த்தெடுத்த எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன். அவரது புனைவுகளில் -சிறுகதைகளிலும் நாவலிலும் - அதிகப்படியான விவரணைப் பகுதிகளும், தர்க்கம் சார்ந்த விவரிப்புகளும் இடம்பெற்று புனைவெழுத்தின் அடையாளங்களைக் குறைத்துவிடும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாகக் கருதியிருக்கிறேன்; ஆனால் அவரது கட்டுரைகள் - அவை தனிக்கட்டுரைகள் ஆனாலும் சரி, பத்தித்தொடர்களாக எழுதப்படும் கட்டுரைகளும் முன்மாதிரி இல்லாத வகைமை கொண்டவை.