இடுகைகள்

கலையியல் நோக்கம் கொண்ட சினிமா: ஜல்லிக்கட்டு என்னும் இந்திய அபத்தம்

படம்
ஜல்லிக்கட்டு: இந்திய அபத்தம் ஒரு சினிமாவைத் திரை யரங்கில் வெளியிட்ட பின் குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் இணையம் வழியாகப் பார்க்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் தொழில் நுட்பம் உருவாக்கி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியின் குறுந்திரையில் புதிய படம் ஒன்றைப் பார்ப்பதை விரும்பாத என்னைப் போன்றவர்களுக்குச் சென்னை போன்ற பெருநகரம் ஒருவிதத்தில் வரம். உடனடியாக இல்லையென்றாலும் ஒருவார இடைவெளிக்குள்ளாவது ஜல்லிக்கட்டு போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. ஜல்லிக்கட்டு படத்தை இயக்கியுள்ள லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் முந்திய படம் அங்கமாலி டைரீஸ். படமாக்கப்பட்ட விதம், விவாதிக்கும் பொருண்மை காரணமாகக் கவனித்துப் பேசப்பட்ட படம். அந்தப் படத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் விவாதிக்கப்படக்கூடிய படமாக வந்துள்ளது. ஜல்லிக்கட்டு. ஒருவிதத்தில் இந்திய சினிமாவை உலக சினிமாவிற்குள் நகர்த்தும் முயற்சி என்றுகூடச் சொல்லலாம்.

தேர்வுகள் -வேலைகள்- தரம்

தினக்கூலிகளுக்குப் பதில் மணிக்கூலிகள்  கல்லூரிக் கல்வியில் இணையவழி வருகைப் பதிவைப் பல்கலைக்கழக மானியக்குழு இப்போது வலியுறுத்துகிறது. அதனை ஏற்றுப் பல்கலைக்கழக கல்விக்குழுக்கள் விதிகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு உள்மதிப்பீட்டுத் தேர்வின் போதும் அதற்கு முன்னர் மாணாக்கர்களின் வருகைப்பதிவு கணக்கிடப்பட வேண்டும் எனக் கடுமையாகச் சொன்னபோது ஒரு கல்லூரியின் முதல்வர் அதனை மறுத்துப் பேசினார். மாணாக்கர்களின் வருகைப்பதிவில் இவ்வளவு கறாராக இருக்க வேண்டியது அவசியமா? எனக் கேள்வி எழுப்பியதோடு, இப்படியான கறாரான வருகைப்பதிவு கல்லூரியில் சேரும் மாணாக்கர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும் என்றார். இந்த ஆண்டுமுதல் வருகைப்பதிவை கறாராகப் பின்பற்றினால் இப்போது இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் மாணாக்கர்களில் பலரும் இடையில் படிப்பைத் தொடராமல் நின்றுபோகும் (drop out ) வாய்ப்பும் உண்டு என்று வருத்தப்பட்டார். 

கலப்புத் திருமணங்களின் பரிமாணங்கள் : அழகுநிலாவின் பெயர்த்தி

மொழியை விரும்பும் ஒவ்வொருவரும் அம்மொழியில் இருக்கும் எல்லாச் சொற்களையும் எல்லா நேரத்திலும் விரும்பிவிடுவதில்லை என்பது ஒரு நகைமுரண்நிலை. சொற்கள் – எதிர்ச்சொற்கள் அறிவது ஐரோப்பிய மொழிக்கல்வியில் -குறிப்பாக ஆங்கிலக் கல்வியில் தொடக்கநிலை. வேற்றுமொழிச் சொற்கள் என்றில்லாமல் தாய்மொழியில் இருக்கும் சொற்களைக்கூட விரும்பப்படும் சொற்கள், வெறுக்கப்படும் சொற்கள் எனப் பட்டியலிட்டே பயன்படுத்தி வருகிறார்கள் மனிதர்கள். சொற்களில் விரும்பும் சொற்களை உடன்பாட்டுச் சொற்கள் என்றும் நேர்மறைப்பார்வையைத் தரும் சொற்கள் என்றும் சொல்லி அதிகம் பயன்படுத்துகின்றோம். எதிர்மறைப்பார்வையைத் தரும் சொற்களை விருப்பத்திற்குரியன அல்ல என்று கருதிப் பயன்பாட்டையே தவிர்க்க நினைப்பதும் மனித இயல்புதான்.

போர்க்காலமும் புலம்பெயர் வாழ்வும் -சந்திரா, மாலினி, தீபச்செல்வன், ப.தெய்வீகன்,தமிழ்க்கவி

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் போரின் நினைவுகள் குறைந்து, புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எழுதும் போக்கு அவ்வப்போது வெளிப்பட்டதுண்டு. இந்நகர்வுகள் வழியாக 2009 க்கு முந்திய போர்க்காலம் பற்றிய பார்வைகளும் விமரிசனங்களும் வாசிக்கக் கிடைக்கின்றன. இப்போதும் தொடரும் விடுதலைப்புலிகள் மற்றும் போர் ஆதரவுக்கருத்துகளும், போருக்கெதிரான மனநிலைகளும் அவற்றில் பதிவாகின்றன. அந்தவகையில் இப்போது எழுதப்பெறும் கதைகள் கவனத்துக்குரியன.

காப்பான்: வணிக சினிமாவின் இயங்குமுறைகள்

படம்
கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? ஒரு சினிமாவை எடுப்பதற்குப் போடப்படும் முதலீட்டின் மீது லாபம் வேண்டும் என்பதை நியாயமற்றது எனச் சொல்லமுடியாது. போடப்படும் முதலீட்டின்மீது பன்மடங்கு லாபத்தை அடைவதைக் கூட வணிகத்தின் விதிகளைக் கொண்டு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பன்மடங்கு லாபத்திற்காகப் பார்வையாளர்களின் சிந்தனையையும் எண்ணங்களையும் சிதறடிக்கும் நோக்கத்தைக் கொண்ட சினிமாக்களை, எந்தவித விமரிசனங்களும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அத்தகைய ஏற்றுக்கொள்ளல்கள் சினிமாவைக் குறித்த எதிர்வினையின்மை என்பதாக கருதக்கூடியன அல்ல. நமது காலகட்டத்தைக் குறித்த அக்கறையின்மையின் வெளிப்பாடு அது. தனது வயலைத் தாக்கி அழிக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் தடுக்கும் வகையறியா விவசாயிகளைப்போலவே, நம் காலத்துச் சமூகப் போக்கைத் தாக்கிவரும் கருத்தியல்களின் ஆபத்துகளைக் குறித்து முணுமுணுக்காமல் இருக்கும் செயல் அது. திரள்மக்களின் கோபதாபங்களைத் திசைதிருப்பும் நோக்கங்கள் கொண்ட பண்டமாக திரைப்படங்களைக் கருதுபவர்களைக் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டியது காலத்தில் செய்யவேண்டிய கடமை.

கீழடிச் சான்றுகள்: தமிழ்ப் பழைமையின் அறிவியல் ஆதாரங்கள்

படம்
நவீன மனிதனாக வாழ்ந்து கொண்டே பழைமையின் மீதான பற்றை வெளிப்படுத்துவது மனித இயல்பு. இது ஒருவித பாவனையாகக்கூட இருக்கலாம். தனிமனிதர்களுக்குள்ள இந்த இயல்பு குழுவாகவும் கூட்டமாகவும் அடையாளப்படுத்தப்படும் போதும் வெளிப்படுகிறது. என் தாத்தா 100 வயதைத் தாண்டியவர் என்பதைச் சொல்லும்போது இருக்கும் பெருமிதத்தின் தொடர்ச்சிகளே ஊரின் பழைமை; மொழியின் பழைமை இனத்தின் பழைமை என நீள்கிறது. அண்மையில் வெளியிடப்பெற்ற கீழடித் தொல்லியல் ஆதாரங்கள் தமிழர்கள் கொண்டிருக்கும் பழைமை குறித்த பெருமிதங்களில் உண்மை இருக்கிறது என்பதை அறிவியல் முறைப்படி அறிவிக்க உதவியிருக்கிறது.