ஒற்றை இலக்குகளின் சிக்கல்
குதிரைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி என்றொரு மரபுத்தொடர் உண்டு. கடிவாளம் குதிரைக்கு முக்கியமல்ல. கடிவாளம் போட்ட குதிரை மனிதர்களுக்கு முக்கியம். கடிவாளம் போட்டால்தான் ஓட்டப் பந்தயக்குதிரையாக பயன்படுத்த முடியும். அதன் மீதேறி அமர்ந்து. காற்றினும் கடிதான வேகத்தில் செல்லமுடியும். காட்டு விலங்கான குதிரையை வயக்கித்தான் நாட்டுவிலங்காக்கியிருப்பார்கள்.