கட்டுரைகள் பத்திகள் நேர்காணல்கள் தன்னம்பிக்கை எழுத்துகள்
இலக்கியப்பனுவல்களின் அடிப்படையான வடிவங்கள் மூன்று எனக் கருதியே இலக்கியவியல் அடிப்படைகளைப் பேசும் நூல்களை எழுதியவர்கள் நினைத்திருக்கிறார்கள். அரிஸ்டாடில், தொல்காப்பியர், பரதர் போன்றவர்கள் அவர்களின் விருப்பமான இலக்கிய வடிவத்தை மையப்படுத்திக்கொண்டு மற்ற வடிவங்களின் அடிப்படைகளையும் பேசுகின்றனர். அரிஸ்டாடிலுக்கும் பரதருக்கும் முதன்மை வடிவங்கள் நாடகம். அதன் உட்பிரிவாகவோ, துணைவிளைவுகளாகவோ கருதித்தான் கவிதை, கதை போன்றவற்றைச் சொல்கின்றனர். செய்யுளை இலக்கியம் என்ற சொல்லின் இடத்தில் வைத்து அடிப்படைகளைப் பேசும் தொல்காப்பியருக்கோ முதன்மை வடிவம் கவிதைதான். பாட்டு, பா, பாடல் எனச் சிறிய வேறுபாடுகளையும் பேசுபவர் மற்ற வடிவங்களாக மற்றவற்றைப் பேசுகிறார்.