அழிபடும் அடையாளங்கள்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒருவித வெறியுடன் கேட்கிறது அந்தச் சத்தம். தொலைக்காட்சியின் எந்தத் தமிழ்சேனலைத் திருப்பினாலும் அரைமணி நேரத்திற்குள் அந்தச் சத்தம் செவிப்பறையைத் தாக்குகிறது. கட்சிக் கூட்டங்கள், கல்யாண மண்டபங்கள் என எங்கும் இந்தச் சத்தம்தான். சட்டசபையின் இரைச்சல்களுக்கு ஊடே இந்த சத்தமும் கேட்டது. ஏன் போடுகிறோம் என்று தெரியாமலேயே தமிழா்கள் “ஒ” போடுகிறார்கள்.