இடுகைகள்

மகளிரியலின் துன்பியல் சித்திரம் : பாவையின் திறவி

படம்
நிகழ்காலத்தில் பெண்ணியம் என்னும் கலைச்சொல் முழுமையான அரசியல் கலைச்சொல்லாக மாறிவிட்டது. இப்படியொரு அரசியல் கலைச்சொல்லை உருவாக்கித் தங்களின் விடுதலை அரசியலைப் பேசுவதற்குப் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த நடைமுறைத் தடைகளும் கருத்தியல் முரண்பாடுகளும் பற்பல. மனிதத் தன்னிலையின் அடையாளமாக- பரிமாணங்களாகச் சொல்லப்படும் உடலியல், சமூகவியல், உளவியல் கூறுகள் ஒவ்வொன்றிலும் முன்வைக்கப்பட்ட விவாதங்களை வென்றே பெண்கள் கடந்து வந்துள்ளார்கள். உலகிலுள்ள எல்லாப் பெண்களும் அப்படிக் கடந்துவந்துவிட்டார்கள் என்று தடாலடியாக ஒருவர் மறுக்கலாம். ஆனால் பெண்களால் முடியாத பரப்புகள் இருக்கின்றன எனச் சொல்லப்பட்ட ஒவ்வொன்றிலும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட முன்மாதிரிப் பெண்களை உலகம் பரவலாகக் கண்டுவிட்டது. 

நமது கிராமங்களும் நமது நகரங்களும்

படம்
கடந்த ஒரு நுற்றாண்டுத் தமிழ்க் கலை, இலக்கியங்கள்- குறிப்பாக சினிமாக்கள், ‘நகரங்கள்‘ என்பதனைக் கிராமங்களின் எதிர்வுகளாகவே சித்திரித்து முடித்துள்ளன.

விலகிச் செல்லும் அந்தரங்கம்

படம்
திருமணம் நடக்கும் அந்த மண்டபம் எனக்குப் புதிய ஒன்று அல்ல. திருமணத்தில் கலந்து கொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் திரை அரங்கம் இருந்தது. அப்போது இந்த இடத்திற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் தான் பார்த்தேன். எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

தமிழ் நாடகங்கள் நவீனமான கதை

படம்
"தமிழர்களாகிய நாம் ‘நவீனம்’ என்பதை ஐரோப்பாவின் அனைத்து அர்த்தங்களோடும் உள்வாங்கிக் கொண்டோம் என்பதில்லை"

வன்முறையை மோகிக்கும் அரசியல் சினிமா: அந்நியன்

படம்
“கேப்பையில் நெய் வடியுதுன்னு சொன்னா கேப்பவனுக்கு மதியெங்க போச்சு“ என்பது தமிழ் நாட்டுக் கிராமங்களில் சொல்லப்படும் பழமொழி. இந்தப் பழமொழி ஷங்கரின் ’அந்நியன்’ படத்துக்குப் பொருத்தமானது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், ஷங்கர் தமிழ்நாட்டில் கிராமங்கள் இருக்கிறதா? கிராமத்திலும் மனிதா்கள்தான் வாழுகிறார்களா? என்று கேட்கக்கூடும்.

கனவான்களின் பொதுப்புத்தி

படம்
“திறமைகளை மதிக்காத சமூகம் கிரிமினல்களை உருவாக்குகிறது“ – தத்துவார்த்தச் சொல்லாடல்களில் ஒன்று. மாவட்ட அளவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மாணவா்கள் விரும்பிய துறையில் ஈடுபட முடியாத நிலையில் (இன்றைய சூழ்நிலையில் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களுக்கு உரிய இடம் மறுக்கப்படுவதில்லை) ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். தாய் தன் உயிரைப் பணயம் வைத்து லஞ்சம் கொடுத்தும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதபோது இன்னொருவன் கிரிமினலாகிறான். கிரிமினலானது எல்லாருக்குமான கல்விச் சாலையை உருவாக்கத்தான் (திறமையானவா்களுக்கு முன்னுரிமை கொடுக்க அல்ல) இது “ஜென்டில்மேன் படத்தின் கதை”.