இடுகைகள்

பெரிய கள்ளும் சிறிய கள்ளும்

படம்
வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகச் சேர்ந்த முதல் வாரத்தில் மாணவிகள் அளித்த விருந்தைச் சிறுவிருந்து எனக் குறித்து வைத்த நான், டேனுடா ஸ்டாசிக்கின் வீட்டில் நடந்த விருந்தைப் பெருவிருந்து என நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளேன். காலத்தைக் காரணமாக்கிப் பெயர் சூட்டாத தமிழர்கள் இப்படித் தான் சொல்வோம். ஆனால் ஐரோப்பியர்களின் பெயரிடல் காலத்தைக் கவனத்தில் கொள்வது. அதனால் பெருவிருந்தை நீண்ட விருந்து ( Long Feast) எனச் சொல்வார்கள். ஔவையின் ”சிறிய கள்ளையும் பெரிய கள்ளையும்” ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்க முடியாமல் தவிப்பது ஏனென்று புரிந்து கொள்ளலாம். எழுதியிருந்தால், போலந்தில் இருந்த காலத்தில் பல்வேறு வகையான விருந்துகளில் பங்கேற்றேன் என்றாலும் இவ்விரண்டும் அடையாள விருந்துகளாக நினைவில் நிற்கின்றன.  

கதைகளாக மாறும் கவிதைக் கணங்கள்:ரவிக்குமாரின் கடல்கிணறு தொகுப்புக்கான முன்னுரை

படம்
நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், கற்பிதங்கள் என்ற சொற்களுக்கிடையிலான வேறுபாடுகளை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தால் வேறுபாடுகள் எதுவும் இல்லையோ என்று தோன்றும். எனக்குத் தோன்றியுள்ளது. வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றால் தமிழ் மொழியில் ஏன் இந்த மூன்று சொற்களும் உருவாக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்து கொண்டே இருக்கிறது.

தடைகளும் விடைகளும்

படம்
இந்தச் செய்தியைத் தினமணி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் (20,மார்ச், 2014) நான் வாசித்தேன்; நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள். சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கொற்கை நாவலில், பரதவ குல சமூகத்தினரை பற்றி இழிவான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அந்த நாவலுக்குத் தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.   இதனையொத்த இன்னொரு செய்தியை ஒரு மாதத்திற்கு முன்பு நாளிதழ் ஒன்றில் வாசித்தேன்: நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.

பெண்ணியம்: இமையம் கிளப்பிய சர்ச்சை

இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டுப் போயிருந்தால் இவ்வளவு சர்ச்சைகளும் பேச்சுகளும் உண்டாகியிருக்காது என்றே நினைக்கிறேன். முதலில் கட்டுரை அப்புறம் சர்ச்சைகளும் விளக்கங்களும்

பெண்ணியம்: கருத்தரங்க நிகழ்வு

படம்
“ பெண்ணியம்: எழுத்துகள் வாசிப்புகள் சொல்லாடல்கள் என்றஇரண்டு  நாள் பயிலரங்கின்    படத்தொகுப்பு. 

ஒரு கருத்தரங்கமும் பின் விளைவுகளும்

படம்
கல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு. கடந்த இரண்டு மாதமாக நான்கு பல்கலைக்கழகங்கள், ஆறு கல்லூரிகளுக்குச் சொற்பொழிவாற்றவும் கட்டுரை வாசிக்கவும் சென்றிருக்கிறேன். இன்னும் சில கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அதற்கிடையில் எங்கள் பல்கலைக் கழகத்திலும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் காட்ட வேண்டியதும் அவசியம்.