இடுகைகள்

காதல்: உண்மையின் மீது கட்டப்படும் விமரிசனம்

படம்
’காதல்’ – தமிழ் சினிமாவின் அடிப்படைக் கச்சாப்பொருள். காதலுக்குத் தமிழ் சினிமா செய்துள்ள மரியாதை கொஞ்சமல்ல. காரண காரியங்களோடும் காரணங்காரியங்கள் இல்லாமலும் ஓா் ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஏற்படுவதையும் அக்காதலைக் கல்யாணத்தில் முடித்துச் சுபம் போடுவதையும் விதம்விதமாகச் சொல்லிப் பார்ப்பதற்குத் தமிழ்ச் சினிமா சலிப்பே அடைந்ததில்லை. காதல் என்ற சொல்லோடு முன்னொட்டோ பின்னொட்டோ சோ்த்து விதம்விதமாகத் தலைப்பும் வைத்துப் பாரத்துவிட்டு இப்பொழுது ’காதல்’ என்ற பெயரிலேயே ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவுலகில் பிரமாண்டப் படங்களுக்குப் பெயா்போன ஷங்கரின் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குநராயிருந்த பாலாஜி சக்திவேல் அந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஊடகங்களும் அரசியலும்: மறத்தல் கொடியது ; மறக்கடித்தல் அதனினும் கொடியது

  தொலைக் காட்சி செய்தி அலைவரிசைகளின் கவனத்திலிருந்து கர்நாடகம் விலகிச் சென்று விட்டது. அம் மாநிலத்தில் இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது தடவையாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்யப்பட்டு விட்டது. ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் அரசியல்¢ கட்சிகள் செய்த சித்து விளையாட்டுக்கள் எல்லாம் மறந்து போகும். திரும்பவும் தேர்தல் வரும் போது கட்சிகளும் தலைவர்களும் புதிய கோஷங்களோடு வருவார்கள். ஊடகங்களும் பழையனவற்றை மறந்து விட்டு புதிய கோஷங்களின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து மக்கள் முன்னால் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையைச் செய்யத் தயாராக இருக்கின்றன. இப்போது ஊடகங்களின் பார்வை கர்நாடகத்திலிருந்து மேற்கு வங்காள மாநிலத்தின் பக்கம் திசை திரும்பி விட்டது.

கலகக்காரா் தோழா் பெரியார்

படம்
  ‘ நிஜ நாடகக் குழு‘ வினா் கடைசியாக நடத்திய இந்த நாடகத்தின் பெயா் கலகக்காரா் தோழா் பெரியார். அவா்களின் அடுத்த நாடகம் அண்ணல் அம்பேத்கா் பற்றியா….? எதிர்பார்ப்போம்.                            (வே. மதிமாறன் 2003 செப்டம்பா், தலித் முரசு 11) நவீன நாடகம் என்றாலே உள்ளடக்கத்தை விடவும் வடிவத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதால் நாடகத்திற்குப் போவதா…..? வேண்டாமா? எனத் தடுமாறிய மதிமாறன் குழப்பம் தீா்ந்து பாராட்டியுள்ள வரிகள்.      “இந்த நாடகம் எளிமையான, நோ்த்தியான வடிவத்தோடு இருக்கிறது. சுருங்கச் சொன்னால் வடிவத்தையும் தாண்டி உணா்வோடு வெளிப்படுகிறது உள்ளடக்கம்.“      

மாற்றம் ; அது ஒன்றே மாறாத விதி.

அவர்கள் என்னிடம் தந்த துண்டறிக்கை 17 வது மாவட்ட மாநாடு எனச் சொன்னது.மாநாடுகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு முறையும் இத்தகைய துண்டறிக்கையோடு அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் கடந்த முறை வந்த மாணவர்களில் யாராவது ஒருவர் இருப்பார்; மற்றவர்கள் புதியவர்களாக இருப்பார்கள். என்றாலும் தொடர்ச்சி விட்டுப் போனதாகத் தெரியவில்லை. மாவட்ட மாநாடு, மாநில மாநாடு அல்லது ஒரு விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி என வழக்கமான வேலைத் திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வினைகள் அதே தடத்தில் நடந்து கொண்டும்¢ இருக்கின்றன.

பொதுக்கல்வியே போதுமென்ற மனநிலை..

படம்
பெண்களின் கல்வியில் தமிழகம் காட்டி வரும் அக்கறைகள் மெச்சத் தக்கவையாக உள்ளன. தமிழக அரசு இலவச சைக்கிள், உதவித் தொகை போன்றன கொடுப்பதின் மூலம் காட்டும் அக்கறைகளைச் சொல்லவில்லை. பெற்றோர்கள் காட்டும் அக்கறைகளையே சொல்கிறேன்.ஆண்களுக்குச் சமமாகவும் பலநேரங்களில் ஆண்களைத் தாண்டியும் பெண்கள் படித்துப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், அடிதடிகள் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.தினசரிகளில் படித்திருக்கலாம். மிகுந்த பொறுப்போடு எழுப்பப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அதனைச் சட்டமன்றம் எதிர்கொண்ட விதத்தினையும் பற்றிச் சொல்லித் தான் ஆக வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் எழுப்பியவர் காட்டுமன்னார்கோவில் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பதால் அவை கூடுதல் கவனத்துக்குரியதும் கூட. எழுப்பிய கோரிக்கைகளில் ஒன்று ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது; இன்னொன்றுக்கு வெறும் சிரிப்புத்தான் பதிலாகக் கிடைத்துள்ளது.