இடுகைகள்

புதுமைப்பித்தனை வாசித்தல் : இரண்டு கதைகளை முன்வைத்து

படம்
நிகழ்காலத் தமிழ் வாழ்வில் கலை இலக்கியத்தின் இடம் என்ன? பொதுவான இந்தக் கேள்வியைக் கூடத் தள்ளி வைத்து விடலாம். கல்லூரியில் படிக்கும் ஒரு மாணாக்கரிடம் கவிதையை நீங்கள் வாசித்தது உண்டா?  அல்லது வாசிக்கக் கேட்டதுண்டா? என்று கேட்டுப் பாருங்கள்.

சாருவின் நேரடிக்கவிதைகள்

  எனது தொடர்வாசிப்புகளில் ஒன்று சாருநிவேதிதாவின் வலைப்பக்கம் தினசரி போய்வருவது எனக்கு வழக்கமில்லை. வாரத்தில் ஒருமுறையாவது சென்று வாசித்துவிட்டு வந்துவிடுவேன். அண்மைக்காலத்தில் தனது வலைப்பக்கத்தில் தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். நேற்றைய தேதியிட்டு வந்துள்ள கவிதைகளின் தலைப்புகள்: தோக்யோவில் வாங்கிய ஷூ ஆதலினால் இருள் படிந்த இல்லம் அமிர்தம் வேண்டி நின்றேன்… பரோல் கவிதையின் நுட்பங்கள் எனச் சொல்லப்படும் படிமம், உள்ளுறை, குறியீடு என எதற்கும் முக்கியத்துவம் தராமல் எழுதப்படும் நேரடிக்கவிதைகளாக - PLAIN POETRY- இருக்கின்றன. கவிதையின் சொல்லும் பாத்திரமாக இருப்பவரைக் கூட அவர் பூடகமாக்கவில்லை. அவரது புனைகதைகளிலும் கட்டுரைகளிலும் இருப்பதுபோலவே அவரே கவிதை சொல்லியாகவும் இருக்கிறார். கேட்கும் இடத்தில் வாசிக்கும் ஒவ்வொருவரும் இருந்துகொள்ளும்படியான வடிவம் இது. தமிழ் மரபில் சங்கப்புறக்கவிதைகளில் - காஞ்சித்திணைக் கவிதைகளின் வடிவம். முதுமொழிக்காஞ்சி, பொருண்மொழிக்காஞ்சி குறிப்பான நிகழ்வுகள் இருக்காது; ஆனால் கவியின் நிகழ்காலத்தை நினைவூட்டும் விதமாக இருக்கும். அதே நேரம் எல்லாக்காலத்திற்கும்...

ஜெயகாந்தனின் வாசகனாக நான்

படம்
08- 04 -2015 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய ஐ. பி. எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் முடிந்த கையோடு செய்தி அலைவரிசைகளுக்குத் தாவியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி வந்துவந்து போய்க்கொண்டிருந்தது. தூங்குவதற்காகக் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.

நெருப்பும் இன்னொரு நெருப்பும்- விழிப்புணர்வின் பெயரில் காமத்தூண்டல்

படம்
  Fire - ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு தீபா மேத்தா இயக்கிய படம். 1996 இல் வந்த அந்தப் படத்தின் பெயரைத் தாங்கி தமிழில் இப்போது ஒரு சினிமா வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் வந்த அந்த சினிமாவிற்கு அரங்குகளில் நல்ல கூட்டம் . பாண்டிச்சேரி போயிருந்தபோது பார்க்க நினைத்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. காரணம் முதல் தீயின் காட்சிகளை நினைவூட்டும் காட்சிகள் இதிலும் இருக்க வாய்ப்புண்டு என்பதுபோலச் சுவரொட்டிகளும் சமூக ஊடக முன்னோட்டங்களும் இருந்ததைச் சொல்லலாம்.

இரண்டு படங்கள்- ஒரு நினைவு

படம்
ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு மதுரையில் ஒருவாரம் நடந்தது (1981 ஜனவரி, 4-10) அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் அமர்வுகள் எல்லாம் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மு.வ.அரங்கிலும் துறைகளின் கருத்தரங்க அறைகளிலும் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்தன. அவற்றில் எல்லாம் பங்கேற்கும் வாய்ப்புகள் இளம் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மாநாட்டிற்கு வரும் திரளான மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிதான்.

ஆதிக்க மனநிலையை விசாரித்தலும் அகத்தைப் பேசுதலும்

படம்
ஆதிக்கமனநிலையை விசாரித்தல் இப்போது வந்துள்ள தலித் (இதழ்.39/ ஏப்ரல் -மே) இதழில் இரண்டு சிறுகதைகள் அச்சிடப்பட்டுள்ளன. "கெட்டவன்" என்ற கதையை எழுதியவர் அபிமானி. தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டப் பின்னணியில் எழுதும் எழுத்தாளர். "நழுவல்" என்ற கதையை எழுதியுள்ள இ.இராஜேஸ் கண்ணன், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர்களின் எழுத்துகளை முன்பே வாசித்திருக்கிறேன். அவர்களது புனைவுகளிலும் கட்டுரை எழுத்துகளிலும் சமகால வாழ்வியலின் சிக்கல்கள் மீது விசாரணைகளும் கேள்விகளும் இருக்கும். இந்த இரண்டு கதைகளிலும் விசாரணைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் விசாரிக்கப்படுவதற்குக் கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடையாளங்கள் மூலம் அபிமானியின் கதை தலித்திய கதையாக வெளிப்பட்டுள்ளது. இராஜேஸ்கண்ணனின் கதை வர்க்கப் பார்வைக் கதையாக எழுதப்பட்டுள்ளது. கதையின் நுட்பங்களான சொல்முறை, உரையாடலில் இருக்கவேண்டிய மொழிநடை போன்றவற்றில் கூடுதல் குறைவு போன்றன இருந்தபோதிலும் கதைகள் இரண்டும் விவாதிக்கும் மையம் வழியாகக் கவனம் பெறுவதோடு கதைக்களன்கள் சார்ந்த மனநிலைகளை முன்வைத்துள்ளன. ****** விசாரணை செய்வதற்கு இருதரப்பு ...

சென்னைப்பயணத்தில் இரண்டு நிகழ்வுகள்

படம்
சென்னை எனக்கு விருப்பமான நகரமல்ல. அங்கேயே தங்கி வாழும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதனைத் தவிர்த்தே வந்துள்ளேன். அதே நேரம் அந்த நகரத்தை வெறுத்து ஒதுக்கியும் விடமுடியாது. தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் எனது விருப்பப்புலம் சார்ந்த நிறுவனங்களும் நிகழ்வுகளும் அங்கேதான் இருக்கின்றன; நிகழ்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பிள்ளைகள் இருவரும் அங்கே இருந்தார்கள். அதனால் அதிகம் போய் நாட்கள் கணக்கில் தங்கியதுண்டு. அதிகமாக இரண்டு வாரங்கள் அளவு தங்கியுள்ளேன். அப்போது சென்னையில் இலக்கிய நிகழ்வுகளில் பார்வையாளனாகப் பங்கேற்றுவிட்டுத் திரும்புவேன். இப்போது ஓய்வுக்காலம் என்றாலும் அங்கே தங்கி நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியவில்லை.