இடுகைகள்

தொலையும் நம்பிக்கைகள்

படம்
மொழியும் சமயமும் பொருளாதார அடித்தளத்தின் மேல் பல்வேறு மேல்கட்டுமானங்கள் இருக்கின்றன. அடித்தளமான பொருளாதார உற்பத்தியும் பங்கீட்டு முறைகளும் மாறும்போது மேல்கட்டுமானங்களும் மாற்றம் அடையும் என்பது மார்க்சிய இயங்கியலின் அடிப்படைப்பாடம். மேல்கட்டுமானங்களில் பேரடையாளமாக இருப்பன சமயம், மொழி, இனம், குடும்ப அமைப்பு போன்றன. சிற்றடையாளமாக இருப்பன பேரடையாளங்களின் சினைக்கூறுகள்.

அரசியல் தலைமையும் பொருளியல் தலைமையும்

படம்
அரசியல் தலைமையைத் தாண்டி பொருளாதார வல்லுநர்களின் தலைமையே நாட்டைச் சரியாக வழிநடத்தும் என்ற கருத்து உலகமயத்தோடு உருவான கருத்து. உலகமயம் வெளியிலிருந்து அறிமுகமானது போலவே மன்மோகன் சிங் போன்ற பொருளாதார வல்லுநர்களின் அறிமுகமும் தொடர்ந்தது. அவரையொத்த இன்னொரு பொருளாதார முதன்மையை வலியுறுத்தியவரே ப.சிதம்பரம். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர். இதுவரை அவரே அதிக ஆண்டுகள் அப்பதவியிலிருந்து நிதித்திட்டங்களை முன்மொழிந்திருக்கிறார். அவரைக் கடந்த ஆண்டு இப்போதுள்ள அரசு நிதிக்காரணங்களுக்காகவே கைது செய்து சிறையில் அடைத்தது. 

காலம் இப்போ பெரண்டு போச்சு

படம்
போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருப்போம்.. இந்த வருடம் அந்தப் பேச்சையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு, நேற்று பாதிக்கப்பட்டவர்கள் இவ்வளவு. இறந்தவர்கள் இவ்வளவு என்ற புள்ளிவிவரக் கணக்காக மாற்றி விட்டது கரோனோ. கோடையும் போய் விட்டது. ஆடிக்காத்து பறபறவென்று அடித்து முடியப்போகுது. இளவேனிலில் வந்த கரோனா முதுவேனில் தாண்டி கார்காலத்தையும் கடந்துவிட்டது. அடுத்த கோடை வரை நீளும் என்றே சொல்கிறார்கள்.

சாதி -சமயம் - சட்டமன்றத்தேர்தல்

  இதுவரையிலான தமிழகத் தேர்தல்களில் பணமும் சாதியும் மட்டுமே மேலோங்கிய அலகுகளாக இருந்தன. இந்தமுறை சமயமென்னும் இன்னொரு அலகு தமிழ்நாட்டுத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றப்பட இருக்கிறது.அதற்கான அறிகுறிகள் வேகமாக நடக்கின்றன. சாதிகளின் திரட்சியும் சமயப்பூசல்களும் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தலாக மாறப்போகிறது தமிழகத்தேர்தல். அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என இப்போது உறுதியாகச் சொ ல்லமுடியாது. வரப்போகும் சட்டமன்றத்தேர்தல் சித்தாந்த எதிரிகளுக்கிடையே நடக்கப்போகும் போட்டி எனச் சொல்லப்படுவது ஒரு பாவனை மட்டுமே.

மையத்திற்கு வெளியே இருந்தவர் தோனி

படம்
இரவுமுழுவதும் நடக்கும் தெருக் கூத்திலும் ஸ்பெஷல் நாடகத்திலும் முக்கியமான கட்டங்களில் தூங்கிய பார்வையாளர்கள் எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். குறிப்பாக வாதம்- எதிர் வாதம் என்ற பகுதிகளில் நடிகர்களின் குரலும் வாதத்திறமையும் அந்த நேரத்தில் உருவாக்கிப் பேசும் வசனங்களும் இட்டுக்கட்டும் பாடல்களும் கையொலியை எழுப்பும்.

ஆகஸ்டு - 16 முகநூல் நினைவூட்டல்கள்

  நாம் எழுதிவைத்த நாட்குறிப்புகளைத் திரும்பவும் வாசிப்பது ஒரு அனுபவம். ஏதாவது ஒரு நாளைத் திறந்து வைத்துக்கொண்டு அன்றும் அதற்கு முன்னும்பின்னும் நடந்த நிகழ்வுகளை அசைபோடும்போது நிகழ்காலம் மறந்துவிடவும் வாய்ப்புண்டு. அப்படியொரு வாய்ப்பை முகநூலின் நினைவுத்தூண்டல்கள் செய்கின்றன. ஒவ்வொருநாளும் உனது நினைவுகள் -Memories -எனத் திருப்பிக் கொண்டுவரும் நினைவுகள் நம்மை எடைபோட்டுக்கொள்ள உதவுகின்றன. 2010, பிப்ரவரியில் முகநூலில் இணைந்தது தொடங் கி முகநூலுக்காக எழுதியவை பல ஆயிரம் சொற்களாக இருக்கக்கூடும். .எழுதுவதற்காகவும் மற்றவர்கள் எழுதியனவற்றை வாசிப்பதற்காகவும் நட்புகளோடு உரையாடுவதற்காகவும் ஒவ்வொரு நாளும் முகநூலில் கழித்த நேரங்கள் கணிசமானவை. அவற்றை வீணான காலம் என்று நினைக்க முடியவில்லை. எப்போதும் ஒருவித விமரிசனத் தொனியோடு எழுதிய அவ்வெழுத்துகள் புதிய நட்புகளைத் தேடித்தந்திருக்கின்றன. பழைய நட்புகளில் பலரை எதிரிகளாகவும் ஆக்கியிருக்கின்றன. இன்று காலை சில ஆண்டுகளின் முன் பதிவுகளைக் காட்டியது முகநூல். வரிசையாகப் பார்த்துக்கொண்டே போனால் தொடர்ச்சியாகப் பின்னோக்கி ஆறு ஆண்டுகள் -2014 முதல் இந்தத் தேதியில் -...

வெளியே x உள்ளே

படம்
நிகழ்காலத் தமிழகத்தில்/இந்தியாவில் சிந்தித்துச் செயல்படுகிறவர்களாகக் காட்டிக்கொள்ளும் மனிதர்களின் மூளையை அலைக்கழிக்கும் கருத்துரைகள் பலப்பல. தேசியம், தேசப் பாதுகாப்பு, தேசியப் பெருமிதம், தேசியப்பண்பாடு, சமய நல்லிணக்கம் அல்லது சமயச் சார்பின்மை, பிராமண எதிர்ப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெண்களின் விடுதலை என்பன அவற்றுள் சில. இந்த வார்த்தைகளை முன்வைத்து, இவற்றின் எதிர்வுகளாக சிலவற்றைக் காட்டிப் பயமுறுத்தி அவற்றில் எதை ஆதரிக்கிற மனிதனாக நீ இருக்கப் போகிறாய்? எனக் கேட்பது நிகழ்கால மனத்தின் புறநிலை. இந்தப் புறநிலை உண்மையிலிருந்து ஒருவரும் தப்பிவிட முடியாது. அரசியல் தளத்தில் மட்டுமல்ல; எல்லாத்தளங்களிலும் இது செயல்பாட்டில் இருக்கவே செய்கிறது. அரசியலில் வெளிப்படையாக எழுப்பப்படும் இந்தக் குரல்கள் மற்றதுறைகளில் பதுங்கிக் கிடக்கும். தேவைப்பட்டால் கிளர்ந்தெழுந்துவிடும். இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் சௌரவ் கங்குலி இருந்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர் கிரேக் சாப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இர...