இடுகைகள்

நம்பிக்கை அளித்த திரைப்படங்கள்

படம்
தமிழ் சினிமாவில் ஆச்சரியங்கள் நிகழப் போவதாகப் பேச்சுக்களும் விவாதங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய பேச்சுக்களுக்கும் விவாதங்களுக்கும் பின்னணியில் சமீபத்தில் வந்த சில திரைப்படங்கள் காரணங்களாக இருந்துள்ளன. குறிப்பாக வசந்த பாலன் இயக்கத்தில் வந்த வெயில் , அமீர் இயக்கத்தில் வந்த பருத்தி வீரன் என்ற இரண்டு படங்கள் உருவாக்கி விட்ட அந்தப் பேச்சுக்களை ராமின் கற்றது தமிழ் அதிகமாக்கியது. தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு இந்த நம்பிக்கையை இன்னும் கூடுதலாக்கக் கூடும்.

தமிழில் திருப்புமுனை நாடகங்கள்

படம்
தமிழை இயல், இசை நாடகம் எனப் பிரித்துப் பேசிய பண்டைய வரையறைகளை விளக்கிக் காட்டும் ஒரு மொழி இலக்கிய ஆசிரியர், நிகழ்காலத் தமிழிலிருந்து இவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டுகள் தந்து விளக்கம் சொல்ல முயலும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் பலவாறாக உள்ளன. ஏனென்றால் இன்று நம்முன்னே இருப்பனவெல்லாம் திரைப்படங்களின் தமிழும் அலைவரிசைகளின் தமிழும் தான். தமிழ்¢ அலை வரிசைகளின் பெருக்கத்தினால் இயலும் இசையும் நாடகமும் ஆகிய முத்தமிழும் ஒன்றோடொன்று கலந்து குழம்பி நிற்கின்றன. இந்தக் குழப்பம் பின் நவீனத்துவக் குழப்பம் என்று நினைத்து விட வேண்டாம்.

மும்முனைத் தாக்குதல் சச்சின், சந்திரமுகி, மும்பை எக்ஸ்பரஸ்

படம்
மொழி, இனம், சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம், பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அதன் நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும் தமிழா்களின் தனி அடையாளங்கள் பற்றிப் பேசுகிறவா்கள் பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் மூன்று படங்கள் வெளிவந்தன. ’சச்சின்’, ’சந்திரமுகி’, ’மும்கை எக்ஸ்பிரஸ்’. இந்த மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

எல்லை தாண்டும் ஆசைகள்

ஒரு நிலப்பரப்பின் ஆட்சித்தலைவனைக் குறிக்கும் பலசொற்களுள் ஒன்று வேந்தன் என்பது .தன் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பில் வாழும் மனிதர்களையும் பிற உயிரினங்களையும் தன் விருப்பம்போல வாழும்படியான உத்தரவுகளைச் சட்டங்களாக்கி ஆண்ட நிர்வாகிகளைக் குறிக்கப் பயன்பட்ட நிலமானிய காலப் பெயர்ச்சொல் அது. மன்னன், அரசன், போன்றன அதே அதிகாரங்களை எடுத்துக் கொண்ட நபர்களைக் குறிக்கப் பயன்பட்ட வேறு சொற்கள்.

தமிழ் எம்.ஏ.- தமிழின் பெயராலும் கொலைகள்

படம்
தமிழ்த் திரைப்பட உலகம் எப்போதும் ஏதாவது ஒரு முன் மாதிரியைப் பின்பற்றிச் செல்லும் மந்தைத் தனத்தைப் பின்பற்றும் இயல்புடையதாகவே இருக்கிறது. ஊரின் பெயரில் ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து ஊர்களின் பெயரைத் தலைப்பாக வைத்துப் படம் எடுப்பதுண்டு. இப்போதைய போக்கு ஒரு பெயரில் படத்தைத் தொடங்கிப் பின்னர் வேறு பெயரில் வெளியிடுவது என்று நினைக்கிறேன்.

நகல்களின் பெருக்கம்

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வுப் பொழுதின் முக்கிய வினையாக இருந்த வாசிப்பு நேரம் தொலைக்காட்சி ஊடகங்களுக்குக் கையளிக்கப் பட்டுச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஒற்றை அலைவரிசையாக இருந்த அரசின் தொலைக் காட்சியோடு பல அலைவரிசைகள் போட்டி போட்ட நிலையில் தொலைக் காட்சிப் பெட்டிகளை இயக்கும் விதமே மாறி விட்டதைக் கவனித்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே தொடு உணர்வு வழியே அலை வரிசைகளை மாற்றிக் கொள்ளும் வசதிகள் கொண்ட பெட்டிகள் மட்டுமே நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்கள். இலவசமாக அரசு தந்த 22 அங்குல நீளம் கொண்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டியில் கூட இந்த வசதி  இருக்கிறது.ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகும் நூற்றுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழகப் பரப்பில் வீட்டிற்குள் நுழைகின்றன. அவற்றுள் ஐம்பதுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழ் பேசுகின்றன. செய்தி அலைவரிசைகள் தினசரி நான்கந்து வெடிப்புச்செய்திகளை வெடிக்கச்செய்கின்றன. என்றாலும் ஒவ்வொரு அலை வரிசைகளின் நிகழ்ச்சித் தயாரிப்பில் வித்தியாசங்கள் இல்லை.   வேறுபாடுகள் கொண்டவைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கோரக்கனவைக் கலைத்தல் வேண்டி

பத்மினி: “என்னோட குரலையே நாடகத்திலெ பயன்படுத்தி இருக்கிறதாகவும், அந்தப்போலீஸ்காரப்படுபாவிங்க செஞ்ச அக்கிரமத்தெ மேடையிலெ காட்டறதாகவும் கட்டாயம் வந்து பாக்கணும்னு” நீங்க லெட்டர் எழுதியிருந்தீங்க. பாண்டிக்கு பக்கத்திலெ இருவது கல் தூரந்தான் கடலூர்.. ஆனா அப்போ வரமுடியல.. ‘ கமிஷன்’ ‘வக்கீல்’னு அலைஞ்சிக்கிட்டு இருந்தேனா.. எம்பாடே பெரும்பாடா இருந்துச்சு.. அதுக்கும் மேல நாடகம் என்ன வேண்டிக்கிடக்கின்னு வரல. இப்போ (06-02-95) மதுரைக்குக்கூடத் தற்செயலாத்தான் வந்தேன். நாடகத்தெப் பார்த்தேன்.