இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டு படங்கள்- ஒரு நினைவு

படம்
ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு மதுரையில் ஒருவாரம் நடந்தது (1981 ஜனவரி, 4-10) அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் அமர்வுகள் எல்லாம் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மு.வ.அரங்கிலும் துறைகளின் கருத்தரங்க அறைகளிலும் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்தன. அவற்றில் எல்லாம் பங்கேற்கும் வாய்ப்புகள் இளம் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மாநாட்டிற்கு வரும் திரளான மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிதான்.

வாசிப்பின் அடுக்குகளுக்குள் பயணித்தல்

படம்
எழுதப்படும் ஒரு பனுவலின் போக்கில்  “மேற்கோள்” குறிக்குள் இடப்படும் ஒரு சொல் வழக்கமான பொருளிலிருந்து குறிப்பான பொருளொன்றுக்கு நகர்கிறது. அந்த நகர்வின் மூலம் எழுதுபவர் வாசிப்பவர்களின் கூடுதல் கவனத்தையும் நிதானமான வாசிப்பையும் கோருகிறார் எனக்கொள்ள வேண்டும். கலைப்பேச்சு என்ற தலைப்பிட்டுத் தொகுக்கப்பட்டுள்ள 33 கட்டுரைகளும் வெவ்வேறு காரணங்களையிட்டு “மேற்கோள்” குறிக்குள் நிற்பனவாக இருக்கின்றன. நூலின் கட்டுரைத் தலைப்புகளைப் பார்வையிடும்போது அதை நீங்கள் உணரலாம். அதில்லாமல் கட்டுரைகளை வாசிக்கும்போது கண்ணில் தட்டுப்படும் மேற்கோள் குறிக்குள் நிற்கும் கலைச்சொற்களின் பாவிப்பைக் கடக்கும்போதும் நீங்கள் நின்று நகரவேண்டியிருப்பதை உணரலாம்.

ஆதிக்க மனநிலையை விசாரித்தலும் அகத்தைப் பேசுதலும்

படம்
ஆதிக்கமனநிலையை விசாரித்தல் இப்போது வந்துள்ள தலித் (இதழ்.39/ ஏப்ரல் -மே) இதழில் இரண்டு சிறுகதைகள் அச்சிடப்பட்டுள்ளன. "கெட்டவன்" என்ற கதையை எழுதியவர் அபிமானி. தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டப் பின்னணியில் எழுதும் எழுத்தாளர். "நழுவல்" என்ற கதையை எழுதியுள்ள இ.இராஜேஸ் கண்ணன், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர்களின் எழுத்துகளை முன்பே வாசித்திருக்கிறேன். அவர்களது புனைவுகளிலும் கட்டுரை எழுத்துகளிலும் சமகால வாழ்வியலின் சிக்கல்கள் மீது விசாரணைகளும் கேள்விகளும் இருக்கும். இந்த இரண்டு கதைகளிலும் விசாரணைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் விசாரிக்கப்படுவதற்குக் கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடையாளங்கள் மூலம் அபிமானியின் கதை தலித்திய கதையாக வெளிப்பட்டுள்ளது. இராஜேஸ்கண்ணனின் கதை வர்க்கப் பார்வைக் கதையாக எழுதப்பட்டுள்ளது. கதையின் நுட்பங்களான சொல்முறை, உரையாடலில் இருக்கவேண்டிய மொழிநடை போன்றவற்றில் கூடுதல் குறைவு போன்றன இருந்தபோதிலும் கதைகள் இரண்டும் விவாதிக்கும் மையம் வழியாகக் கவனம் பெறுவதோடு கதைக்களன்கள் சார்ந்த மனநிலைகளை முன்வைத்துள்ளன. ****** விசாரணை செய்வதற்கு இருதரப்பு ...