பழமலையும் சந்ருவும்-சந்திப்பும் நினைவுகளும்

முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. அதேபோல் நண்பர்களின் சந்திப்புகளும் படங்களாக விரிகின்றன. அண்மையில் கவி. பழமலய்யைச் சந்திக்க நேர்ந்தது. ஓவியர் சந்ருவிற்குப் பார்க்காமலேயே வாழ்த்துச் சொல்ல முடிந்தது.