இடுகைகள்

மழையும் மழைசார்ந்தனவும்-8

71/ நீர் 1. கண்கள் கலங்கி முகமே குளமான நீர்நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரைபடிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்ந்து விடுகிறேன் தியானவெளியாகவும் மையப்போதமாகவும் குளம் ஆனால் இது அந்தரத்தில் மிதக்கிறது. 2 மழையைப்போல நீ எனக்கு எல்லாம் தந்தாய் 3 தூறலாய்த் தொடங்கி படிப்படியாக வலுத்து ஒவ்வொரு இழையாக இணைத்து சலசலவென ஓடோடி தியானத்தின் உச்சியிலிருந்து உன்னை அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய் அருவி 4. நீ நடந்துசெல்லும் பாதையெல்லாம் ஈரம் அது உனது பண்பு என் உடலெங்கும் பலவாகி ஓடுவது ஒரேவொரு அறு 5 கடலைப்போல ஒரு உடல் நீ கவிதையைப்போல ஒரு கடல்நீ 6. குளம் மழை அருவி ஆறு கடல் எல்லாம் நீ இப்பெயர்களில் பொருந்தும் வடிவம் நான் 7 குளம் தியானம் மழை குதூகலம் அருவி கொண்டாட்டம் ஆறுதிருவிழா கடல்கலவி எல்லாம் மனசெனச் சுழலும் ஒரு துளி 8 மழையைப்போல நீ எனக்கு எல்லாம் தந்தாய் ================================================== ரமேஷ் -பிரேம் /கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 262 72   அடைமழையின் அமைதி பெருமழையின் ஆக்ரோஷம் அடிமனத்தின் ஆழத்தில் ஆனந்

மழையும் மழைசார்ந்தனவும் -7

61 மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா நிற்பதாயில்லை மழை இருப்பு கொள்ளாமல் இங்கும் அங்குமாய் வீட்டுக்குள் உலவினேன் துளியில் தொடங்கி துளியில் முடிக்கும் எளிய கலையை களைப்பின்றி மேற்கொண்டிருந்தாள் மழைத்தேவதை நெடுநேரத்துக்குப் பின் போய்வருவதாய்க் கூறி வாசலுக்கு வந்தேன் மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறத் தெரியாத பிள்ளையாய் இருப்பதை எண்ணி ஆத்திரமடைந்தேன் விருட்டென்று எழுந்து வெளியேறியபோது ஸ்தம்பித்தார்கள் மழையும் அம்மாவும் அம்மாவின் கண்களில் வளர்ந்தது ஆகாய நீலம் கருவிழிகளில் கார்மேகத்திரள் மழை. அரவமின்றி இடம் மாறியிருந்தது. துளித்துளியாய் அடுத்த பாட்டம் பொழியத்தொடங்கியது என் வயதுகள் கரைந்து வாசலில் வழிந்தன இறுதித்துளியை நோக்கி உருகும் பனிக்கட்டியாய் என் சரீரம் குலுங்கியது மழை நின்றபின் போயேன் என்றாள் மறுபடியும் அம்மா சுவரில் மாட்டியிருந்த புகைப்படமொன்றில் அடைமழையைப் பார்த்து விடாது சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா. ஜெ.பிரான்சிஸ் கிருபா/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 395 62/நீரின்றி அமையாது உலகு   மழை

பாசாங்குகள் இல்லாத ஒரு பகிர்வு: அபத்தம் இதழில் ஓர் உரையாடல்

படம்
2023, ஜூன் -ஜூலை மாதவாக்கில் ஒருமாதம் கனடாவில் இருந்தேன். மகன் இருக்கும் ஒட்டாவில் இருந்து கொண்டு அருகில் இருக்கும் சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்ததோடு, தலைநகர் டொரண்டோ நகருக்கும் சென்றேன். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள் என நண்பர்கள் பலர் அங்கே இருக்கிறார்கள். இரண்டு நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதோடு நண்பர்களோடும் சந்திப்புகளும் இருந்தன. அப்போது அங்கிருந்து வெளியாகும் அபத்தம் இதழின் ஆசிரியர்கள் ஜார்ஜ், கற்சுறா ஆகியோரோடும் சந்திப்பு நடந்தது. சந்திப்பு நடந்த கற்சுறாவின் உணவுவிடுதிக்கு என்னை அழைத்துச்சென்றவர் நண்பர் சின்னசிவா. முழு உரையாடலிலும் அவர் இருக்கவில்லை. பாதிநேரம் இருந்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.  அங்கே நான்குபேரும் பேசிக்கொண்ட உரையாடலைத் தொகுத்துத் தந்துள்ளது அபத்தம் இதழ்.  

மழையும் மழைசார்ந்தனவும் -6

படம்
 மழையை நினைத்துக்கொள்ளுதல் என்பது மழையின் காலத்தை நினைத்துக்கொள்ளுதல் தான். மழையின் காலம் என்பது ஈரத்தின் காலம் . ஈரத்தை விரும்புவதும் வெறுப்பதுமான மனநிலையில் மழை பெய்யத்தொடங்குகிறது. இது ஆறாவது பத்து. இப்பத்தில் யாழன் ஆதி மண்குதிரை சித்தாந்தன் அப்பாஸ் குமரகுரு பூமா ஈஸ்வரமூர்த்தி பொன்.தனசேகரன் மனோமோகன் அன்பழகன் செந்தில்வேல் கோ.நாதன் ஆகியோரின் மழைக்கால நினைவுகள் குறித்து வாசிக்கலாம்

மழையும் மழைசார்ந்தனவும்-5

படம்
மழை என்பது மழை மட்டுமல்ல. மழை சாரலாகவும் தூறலாகவும் பொழிவாகவும் அழிவாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது. மழை மனதிற்குள்  ஈரமாகவும் நேசமாகவும் காதலாகவும் காமமாகவும் மாறுகிறது. வெக்கையை உருவாக்கிப் பிரிவைப் பரிசளிக்கிறது. ஐந்தாம் பத்தில் நீலகண்டன், பரமேசுவரி, தூரன் குணா, சாய் இந்து, அலறி, கல்பனா, பெண்ணியா, காலபைரவன், த.அரவிந்தன்  எனப் பத்துப்பேரின் கவிதைகள்

மழையும் மழைசார்ந்தனவும் -4

படம்
ஐப்பசி, கார்த்திகை தமிழ்நாட்டின் மழைக்காலம். ஐப்பசி பேஞ்சு பொறக்கணும்; கார்த்திகை காஞ்சு பொறக்கணும் என்பது சின்ன வயசில் கேட்ட சொலவடை. காலமாற்றத்தில் மார்கழி  கொட்டும் மழையோடு பிறக்கிறது. நிலவெளியையும் அதன் இருப்பையும் அங்கு வாழும் மனிதர்களின் நெருக்கடிகளையும் எழுதும் எழுத்துகள் எப்போதும் கவனத்துக்குரியன. மழையும் மழைசார்ந்தனவும் கவனத்துக்குரியனவாக இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

மழையும் மழைசார்ந்தனவும்- 3

படம்
மழைக்குப் பால் வேறுபாடு உண்டா? கவிதை எழுதும் பெண்கள் வேறுபட்ட மனநிலையையே வெளிப்படுத்துகிறார்கள். இந்த மூன்றாவது பத்தில் 4 பேர் பெண்கள். அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் உணர்வுகள் வேறானவை.   சுஜாதா செல்வராஜு, கடங்கநேரியான், வெயில், கலாப்ரியா, போகன் சங்கர், தர்மினி, அனார், தமிழச்சி, சிபிச்செல்வன், ரமேஷ் பிரேதன் கவிதைகளுக்குள் மழையை வாசித்துப்பாருங்கள்