மழையும் மழைசார்ந்தனவும்-8
71/ நீர் 1. கண்கள் கலங்கி முகமே குளமான நீர்நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரைபடிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்ந்து விடுகிறேன் தியானவெளியாகவும் மையப்போதமாகவும் குளம் ஆனால் இது அந்தரத்தில் மிதக்கிறது. 2 மழையைப்போல நீ எனக்கு எல்லாம் தந்தாய் 3 தூறலாய்த் தொடங்கி படிப்படியாக வலுத்து ஒவ்வொரு இழையாக இணைத்து சலசலவென ஓடோடி தியானத்தின் உச்சியிலிருந்து உன்னை அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய் அருவி 4. நீ நடந்துசெல்லும் பாதையெல்லாம் ஈரம் அது உனது பண்பு என் உடலெங்கும் பலவாகி ஓடுவது ஒரேவொரு அறு 5 கடலைப்போல ஒரு உடல் நீ கவிதையைப்போல ஒரு கடல்நீ 6. குளம் மழை அருவி ஆறு கடல் எல்லாம் நீ இப்பெயர்களில் பொருந்தும் வடிவம் நான் 7 குளம் தியானம் மழை குதூகலம் அருவி கொண்டாட்டம் ஆறுதிருவிழா கடல்கலவி எல்லாம் மனசெனச் சுழலும் ஒரு துளி 8 மழையைப்போல நீ எனக்கு எல்லாம் தந்தாய் ================================================== ரமேஷ் -பிரேம் /கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 262 72 அடைமழையின் அமைதி பெருமழையின் ஆக்ரோஷம் அடிமனத்தின் ஆழத்தில் ஆனந்