இடுகைகள்

எனக்குள்ளிருந்த இலங்கைத் தீவு

படம்
லங்காபுரியைக் கடல்சூழ்ந்த தீவாகவே எனது முதல் வாசிப்பு சொன்னது. ஆகாய மார்க்கமாகத் தூக்கிச் செல்லப்பட்ட சீதா தேவியைத் தேடிச்செல்லும் அனுமன் தனது தாவுதிறனால் கடல் தாண்டிப் போய் இறங்கிய மலையும், அரண்மனையும் பற்றிய வர்ணனையை எனது தாத்தாவுக்கு வாசித்த போது எனக்குள் இலங்கைப் பரப்பு ஓர் அரக்கனின் ஆட்சி நடக்கும் பூமியாக அறிமுகமானது. சீதாதேவையைத் தூக்கிச் சென்ற ராவணனின் இலங்காபுரியாக எனக்குள் நுழைந்த பிரதேசப்பரப்பு ராஜ கோபாலாச்சாரியாரின் சக்கரவர்த்தித் திருமகன் வழியாக அறிமுகமான பிரதேசம். 

நின்று பார்த்த மாலையும் கடந்து வந்த காலையும்

படம்
  எத்தனை கோயில்கள்.. எத்தனை கடவுள்கள்   இன்றைய மாலை /13-12-21 இந்தியப் பரப்பெங்கும் பல்வேறு கோயில்களில் இருக்கும் எல்லாத் தெய்வங்களையும் ஓரிடத்திற்குக் கொண்டு வந்து குவித்து வைத்திருக்கிறார்கள் அந்த வெளியில். ஏழெட்டு ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ந்த சுற்றுச் சுவர்களுக்குள் 108 கோயில்களும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

புதுமுகங்கள்; புதிய பாதைகள் - புல்புல் இஸபெல்லா, ஈழவாணி

படம்
  திறக்கும் வெளிகளுக்குள் நுழைவது மட்டுமல்ல; புதியபுதிய வெளிகளையே திறக்கிறார்கள் பெண்கள். பெண்களின் நுழைவுகள் ஆச்சரியப்பட வேண்டியனவல்ல. அடையாளப்படுத்தப்பட வேண்டியன

கவியின் அடையாளத்தைத் தேடுதல்: அ.ரோஸ்லினின் வாலைக்குழைக்கும் பிரபஞ்சம் தொகுப்பை முன்வைத்து

படம்
தமிழில் கவிதை வடிவத்திற்கு நீண்ட தொடர்ச்சி உண்டு. அத்தோடு தொடக்க நிலையிலேயே எளிய வடிவமாகவும் சிக்கலான வடிவமாகவும் உணரப்படும் தன்மைகளோடு தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. செவ்வியல் கவிதைகளுக்குப் பிறகு செவ்வியல் கவிதைகளுக்கு இணையாகச் சிக்கலாகவும் எளிமையாகவும் வெளிப்பட்டுள்ளவை நவீனத்துவ கவிதைகள்.

கையறு: மரணத்தின் தாலாட்டு

படம்
தமிழர்களின் அலைந்துழல்வுச்சித்திரங்கள் சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அமெரிக்காவின் அணுகுண்டுகள் வீசப்பட்ட நாட்கள்: ஆகஸ்டு- 6/ 9/ 1945. உலகத்தின் பார்வையில் பேரழிவு ஆயுதமாகப் பார்க்கப்பட்ட அணுகுண்டு, சப்பானின் அருகிலிருந்த பழைய பர்மா, மலேசியா, சீனா, தாய்லாந்து, முதலான நாட்டு மக்களால் வேறுவிதமாக உணரப்பட்டது. சிலர் தங்களின் விடுதலையின் கருவியாக அதை நினைத்தனர். இதுதான் வரலாற்றின் சுவைகூடிய நகைமுரண்

கவிதாசரண்: நினைவுகள்

கவிதாசரண் என்னும் பெயருக்குரிய உடலின் இயக்கம் நின்றுவிட்டது எனச்சொல்லும் அஞ்சலிக்குறிப்புகளைப் பார்க்கிறேன். அந்தப் பெயர்கொண்ட மனிதரைச் சந்தித்த இடத்தையும் நாளையும் நினைத்துக் கொள்கிறது மனம்.