இடுகைகள்

ஈழத்தமிழ் இலக்கியம்: எழுதப்பட்டனவும் எழுதப்படுவனவும்

படம்
பேராசிரியர் அ. ராமசாமி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். தொடர்ச்சியாக ஈழ இலக்கிய புத்தகங்களை வாசித்து அது பற்றி எழுதிவருபவர்.அவருடனான மின்னஞ்சல் வழியான நேர்காணல் இது நேர்காணல் செய்து அகழ் இதழில் வெளியிட்டபோது நேர்காணலுக்குத் தந்த தலைப்பு:   வெற்று இரக்கத்தைப் பெறக்கூடிய எழுத்துகள் அலுப்பானவை:

பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்

படம்
2011, மே 13 தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் பெருநகரங்களில் வீசிக் கொண்டிருந்த அனல் காற்று திசைமாறிக் கொண்டிருப்பதாக வானிலை அறிக்கை சொல்லவில்லை. ஆனால் தொலைக்காட்சி ஊடகங்கள் அரசியல் சூறாவளிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தன.

சாதியும் தேர்தலும்:இமையத்தின் தாலிமேல சத்தியம்

படம்
தேர்தல் அரசியலில் வெற்றியைத் தருவதில் முதல் இடம் பணத்திற்கா? சாதிக்கா? என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது.பொதுத்தேர்தல்களில் சாதியும் இடைத்தேர்தல்களில் பணமும் முதலிடம் பெற்று வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பது தமிழகத் தேர்தல் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும். கொள்கையையும் கோட்பாட்டையும் முன்வைத்து அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகின்றன.ஆனால் அவற்றைச் சொல்லி மட்டுமே தேர்தல் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என நம்பும் கட்சிகள் இந்தியாவில் மிகக்குறைவு. 70 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் மட்டுமே கொள்கைப்பற்றோடு, அதனை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிகமும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பாதல் சர்க்காரின் ஏபங் இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம் -

படம்
இந்தியக் கலை என்னும் கருத்துரு ‘நவீன இந்தியா எப்படி இருக்கவேண்டும்?’ என்பதற்கு இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர் பண்டித நேருவுக்குத் தீர்க்கமான கனவுகள் இருந்தன. இக்கனவை நிறைவேற்றப் பொருளாதாரத்துறையில் கலப்புப் பொருளாதாரம் என்ற சொல்லாடலை முன்வைத்து வேளாண் வளர்ச்சிக்காகப் பெரும் அணைகளையும், தொழில் வளர்ச்சிக்காக க் கனரகத் தொழிற்சாலைகளையும் உருவாக்கும் திட்டங்களைத் தீட்டினார். அதுபோலவே கலை, இலக்கியத்துறையில் இந்தியத்தனம்கொண்ட கலை இலக்கியங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்று நினைத்தார். அதற்காக உருவாக்கப்பட்டவையே ஒவ்வொரு துறைக்குமான அகாதெமிகள். இலக்கியத்திற்காக சாகித்யா, நாடகம் மற்றும் மேடைக்கலைகளுக்காக சங்கீத் நாடக், ஓவியம் மற்றும் நுண்கலைக்காக லலித்கலா என அவர் காலத்தில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்காக எழுதப்பட்ட திட்ட முன்வரைவுகள் எண்பதுகளில் செயல்வடிவம் பெற்றன.

பெண்ணெழுத்துகள் : நகர்வின் ஏழு சிறுகதைகளை முன்வைத்து

படம்
  டிஸ்கவரி புக்பேலஸின் நிலவெளி என்ற அச்சிதழின் நீட்சியாக வரும் ‘நகர்வு’ இணைய இதழ் தனது மூன்றாவது இதழைப் பெண்கள் சிறப்பிதழாகப் பதிவேற்றம் செய்துள்ளது. கவிதை, கதை, நூல் மதிப்புரை எனப் பெண்களின் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில் வரிசைப்படுத்தப்பெற்றுள்ள சிறுகதைகள்:            1.     உமா மகேஸ்வரி – மோனா 2.     குதிரைச்சவாரி – நறுமுகை தேவி 3.     கொலப்பசி – நாச்சியாள் சுகந்தி 4.     பிடிமானக்கயிறு – அகிலா 5.     மறைப்பு – ப்ரியா 6.     உள்ளங்கை அல்லி - அம்பிகாவர்ஷினி 7.     வெள்ளைப்பூனை – லாவண்யா சுந்தரராஜன்

பாரதி நினைவுகள் : எட்டயபுரமும் ஏழாயிரம் பண்ணையும்..

படம்
எட்டயபுரத்திற்குச் சென்ற முதல் பயணத்தின்போது திரும்பத்திரும்ப இந்த ஊருக்கு வரவேண்டியதிருக்கும் என்று உள்மனது நினைத்திருக்க வேண்டும். அந்தப் பயணத்தில் பாரதியின் வீட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கி வீட்டிலிருந்த பொருட்களைப் பார்த்ததையும் வீடிருக்கும் அந்த வீதியில் இரண்டு தடவை நடந்ததையும் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அது நெல்லைக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரத்தில் . ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு எட்டயபுரத்தின் ஒவ்வொரு தெருவும் நடந்த இடங்களாகி விட்டன. ஆண்டுக்கு ஒன்றிரண்டு தடவையாவது சென்று வரவேண்டிய அலுவலக நடைமுறையை உருவாக்கித் தந்துவிட்டுப் போய்விட்டார் பேரா. க.ப. அறவாணன் அவர்கள்தான்.