பெண்கள் தினக்கொண்டாட்டங்களும் நெல்லைப் பல்கலைக்கழகமும்
மனோன்மணியத்தில் நான் இணைப் பேராசிரியராக இணைந்து கொண்ட நாள் 1997,பிப்ரவரி,14, பிப்ரவரி கடைசி வாரத்தில் ஒருநாள், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த முனைவர் மரியஜான் என்னிடம் வந்து ‘மேடம், மகளிர் தினக்கொண்டாட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளச் சொன்னாங்க’ என்றார்.