கொரோனாவோடு வாழ்ந்தது -ஏப்ரல் வரை
ஏப்ரல் 15 க்குப் பிறகு நாடு தழுவிய ஊரடங்கு விலக்கப்படவேண்டும் . முதன்மையாக உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் சீராக நடக்கவேண்டும் . வேளாண் உற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக ஊரடங்கு விதிகளில் தளர்வு நடைபெற்றால் மட்டும் போதாது . உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை உண்ணும் வகையிலான வடிவங்களில் மாற்றவேண்டும் . அதனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் . இவை நடக்கவில்லை என்றால் இந்தியா போன்ற நாடுகள் நோயைத் தாண்டிய பெரும்பிணியாகப் பசியை எதிர்கொள்ள நேரிடும் . பசியின் வெளிப்பாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன . அதனைக் கவனித்துச் சொல்லும் திசையில் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை . அதனால் பொதுச்சமூகம் அறியாமல் இருக்கிறது .