எஸ்.விஸ்வநாதனின் குளிர்ந்த கரம் பற்றுதல் இனி இல்லை
சென்னை நகரம் பிடிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை போகும்போதும் சிலரைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு போவேன். அதன் போக்குவரத்து நெருக்கடியும் போகவேண்டிய தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரமும் சேர்ந்து கிளம்புவதையே தடுத்துவிடும். பார்க்க நினைத்தவர்களைப் பார்க்காமலேயே வருத்தத்துடன் - தொலைபேசியில் பேசிவிட்டுத் திரும்பிவிடுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் தொலைபேசியில் வருத்தத்துடன் பேசிவிட்டு வந்த நண்பர் எஸ்.விஸ்வநாதன். இனி அவரோடு தொலைபேசியிலும் பேசமுடியாது. இனி அவரது குரலும் அன்பாய்ப்பிடித்துக்கொள்ளும் கைகளின் குளிர்மையும் இனி இல்லை.