இடுகைகள்

தந்தையும் மகனும் தாமரைத்திருக்கள்

படம்
ஒன்றிய அரசு வழங்கும் துறைசார் சிறப்பு விருதுகளின் பொதுப்பெயராக இருப்பது பத்மவிருதுகள். பத்மம் என்றால் தாமரை. அவ்விருதுகளில் மூன்று நிலைகள் உண்டு. பத்ம விருதுகளில் மிக உயர்ந்தது பத்மவிபூஷன். அடுத்தது பத்மபூஷன், கடைசிநிலை பத்மஶ்ரீ.

முகநூல் உருவாக்கிய இரண்டு எழுத்தாளர்கள்

படம்
நமது காலச் சமூக ஊடகங்கள் பலருக்கும் பலவிதமான திறப்புகளைச் செய்கின்றன. ஒற்றைத்தள வாசிப்புக்குப்பதிலாகப் பலதள வாசிப்புகளைத் தரும் இயல்பு தானாகவே அவை உருவாக்கித்தருகின்றன. வாசிப்பைப் போலவே தனக்குள் இருக்கும் எழுத்தார்வத்திற்கும் திறப்புகளை வழங்குகின்றன. ஆசிரியத்துவத்தணிக்கை இல்லாமல் தாங்கள் எழுதியதைத் தங்கள் விருப்பம்போல வெளியிடலாம். அப்படியான வெளிப்பாட்டில் தொடர்ச்சியாகக் கண்டடையும் ஓர்மையால் ஒருவர் தனது எழுத்துப் பாணியைக் கண்டடைய முடியும். அப்படிக் கண்டடைந்த இருவரின் எழுத்துகளுக்குச் சிறிய அளவில் தூண்டுகோலாக இருந்துள்ளேன்.

நவீனத்துவத்துவ நுழைவுகள் -இரண்டு சிறுகதை வாசிப்புகள்

படம்
தனது முடிவுகளுக்கு உறுதியான தீர்வுகளை முன் வைத்துவிட முடியாமல் தவிக்கும் சிக்கல் என்பது அடிப்படையில் ஒரு நவீனத்துவ மனக்குழப்பம். வாசிக்கப்படும் ஒரு பனுவலில் அவ்வகையான குழப்பமொன்றை உருவாக்கும் எழுத்தாளர்களை நவீனத்துவ எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தத் தயங்குவதில்லை.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

படம்
ஈ.வெ.ராமசாமி என்னும் மனிதர், பெரியாராக மறைந்தார் என்பது மட்டுமல்ல; கலகக்காரராகவும், தோழராகவும் வாழ்ந்தார். எதிர்த்தரப்பை மதித்து அவர்களோடு வாதம் செய்வதில் விருப்பம் உடையவர் பெரியார். அவர் அடிப்படையில் அரசியல்வாதி. இந்த நாட்டில் அல்லது மாநிலைத்தில் உருவாக்கவேண்டிய நிலைமை இதுதான் என இலக்கு வைத்துக்க்கொண்டு அதை நோக்கிப் பயணம் செய்த அரசியல்வாதி அல்ல. இந்த மாநிலத்தில் இவ்வளவு மோசமான நம்பிக்கைகளும் செயல்களும் இருக்கின்றன; இவை களையப்பட வேண்டும். அவை களையப்பட்டால், அதன் பின் உருவாகும் அமைப்புகளும் வாழ்க்கை முறையும் மக்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டவர். ஒருவிதத்தில் ஆன்மீகவாதிகளின் செயல்பாட்டை ஒத்தது பெரியாரின் செயல்பாடுகள்.

சி. அண்ணாமலையின் வெங்காயம் : மதத்தால் மறையாத மாமதயானை

படம்
நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர்களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.

பொங்கல் - சல்லிக்கட்டு - தமிழ்ப் புத்தாண்டு.

படம்
பண்பாட்டுத் தளத்தை முதன்மைப்படுத்தித் தமிழ் நாட்டின் ஆட்சியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பிடித்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 1967 -இல் ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் சி.என். அண்ணாதுரை முதல்வராக ஆனவுடன் முதன்மை அளித்துச் செய்தவைகள் இரண்டு. ஒன்று சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட பெயரைத் தமிழ்நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது படியரிசித் திட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டில் ஒன்று லட்சியம் சார்ந்தது; இன்னொன்று வாக்குறுதிகள் சார்ந்தது.

ஒரு தோல்வியும் ஒரு விலகலும்

படம்
இந்த இரண்டு இடங்களுக்கும் விருப்பம் இருந்தது. ஒரு துறை சார்ந்து தொடர்ந்து வேலைகள் செய்து அனுபவங்களையும் சாதனைகளையும் செய்துவிட்டு அந்த விருப்பங்களை அடைய நினைப்பதில் தவறும் இல்லை. தமிழ்மொழி, இலக்கியம் சார்ந்து ஆய்வுகளுக்கு வழிகாட்டல், நூல்கள் வெளியீடு, பல்வேறு அமைப்புகளின் உள்கட்டமைப்புகளில் பங்கேற்றல், அயல்நாட்டுப் பல்கலைக்கழகப்பணி எனத் தகுதிகள் இருந்த நிலையில் தான் செம்மொழி நிறுவனத்தை வழிகாட்டிட முடியும் எனத் தோன்றியது. முயற்சிகள் நிறைவேறவில்லை. ஒதுங்கிக் கொண்டேன். 30 ஆண்டுகள் கல்விப்புலத்தில் -குறிப்பாக உயர்கல்விப்புலத்தில் பணியாற்றிய பின் அதன் உச்சநிலைப்பதவியான துணைவேந்தர் பதவியில் அமரவேண்டும் என நினைப்பது விருப்பம்தான்; ஆசையல்ல. ஆசைப்பட்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதற்காகச் செய்ய வேண்டிய பணிகளைத் தாண்டி, முறையற்ற வழிகளிலும் முயற்சிகளைச் செய்யத் தோன்றும். அப்படிச் செய்தால் ஆசை நிறைவேறும் என்ற நிலை இருந்தபோதும் அதைச் செய்யவில்லை. அதனால் தான் இந்தத் தோல்விக்கதையையும் விலகல் நிலையையும் சொல்ல முடிகிறது.