இடுகைகள்

இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்படும் நேரம் 23 மணி நேரம் தான்

படம்
காலையில் வழக்கம் போல எழுந்து காலைக் கடன்களை முடித்து கணிணியின் திரையைத் திறந்தபோது 06.15,2012 மார்ச் 25 எனக்காட்டியது. எல்லா நாளும் இரவு 11.00 மணியை ஒட்டித் தூங்குவது வழக்கம். எத்தனை மணிக்குப் படுத்தாலும் ஆறு மணி நேரம் கழித்து விழிப்பு வந்து விடும். அதிகாலை 05.00 யை ஒட்டி எழுந்து விடுவேன். நேற்று இரவு 11. 00 மணியளவில் தான் தூங்கப் போனேன். ஆனால் எழுந்து பார்த்த போது கணிணியின் திரை 06.15 எனக் காட்டியது. அலைபேசியின் திரையிலும் 06.15 என்று தான் இருந்தது. ஆனால்   அலமாரியில் இருந்த கடிகாரத்தில் நேரம் 05.15 மணி என்றிருந்தது.

ஜெயகாந்தனின் பாரிஸுக்குப் போ: காலத்தை எழுதுவதற்கான முன்மாதிரி

படம்
விடுதலைக்குப் பிந்திய இந்திய சமூகத்தின் திசை வழிகள் சரியானவை தானா? என்ற கேள்வியைப் பல்வேறு தளங்களில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்த கால கட்டமாக 1950-களின் பின் பாதியையும் 60-களின் முன்பாதியையும் சொல்ல வேண்டும்.. சிந்தனை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் ஐரோப்பிய மாதிரிகளை இந்தியர்கள் உள்வாங்க வேண்டும் என நம்பிய ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக்காலம் அது. அவரது நிலை பாடுகளுக்கு எதிராக இருந்தவர்கள் பண்பாட்டு வெளியை முன்னிறுத்திப் பலவகையான சொல்லாடல்களை உருவாக்கினார்கள். குறிப்பாக ஐரோப்பிய வகைப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது அதிகப் படியான எதிர்ப்புணர்வுகளை வெளிப் படுத்தினர்.மேற்கத்தியக் கல்வி முறையின் அடிப் படைக் கோட்பாட்டையும் கற்பிக்கும் முறையியலையும் விட்டுவிட்டு வெறும் பணியாளர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என விமரிசனம் செய்யப்பட்டது.

மீட்டெடுக்க வேண்டிய தனித்தன்மை

படம்
நம்முன் நிகழும் நிகழ்வுகளுள் எவை நம்பிக்கை சார்ந்தவை? எவை பாவனை சார்ந்தவை எனக் கண்டுபிடிப்பது எல்லோருக்கும் சுலபமல்ல. அப்படிக் கண்டு பிடிப்பதில் தேர்ந்தவர்களும் கூட தொடர்ச்சி யான கவனிப்பின் மூலமே சாத்தியப் படுத்து கின்றனர். சாத்தியப்படும் நிலையில் சிலவற்றை நம்பிக்கைகள் என்கிறார்கள்; சிலவற்றைப் பாவனைகள் என்கின்றனர். நம்பிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன; பாவனைகள் அம்பலமாக்கப்படுகின்றன.

பெயரிலும் இருக்கிறது; முகவரியிலும் இருக்கிறது

படம்
முன்குறிப்பு : இந்தக்கட்டுரையில் இடம்பெறும் பெயர்களும் தகவல்களும் உண்மையானவை; உண்மையத் தவிர வேறில்லை; உண்மையை உறுதி செய்வதற்காகக் கற்பனை தவிர்க்கப் பட்டுள்ளது . ============================================= உலக நாடக இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைத் தமிழில் ‘செகசுப்பியர்’ என்று ஒருவர் மொழிபெயர்த்து எழுதி இருந்தார் ஒருவர். செகப்பிரியர், செகசிற்பியர் என்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் அந்தப் பெயருக்குத் தமிழில் உண்டு. எனக்கோ பொல்லாத கோபம். பெயரை மொழிபெயர்க்கலாமா? பெயரின் உச்சரிப்பை – ஓசையை மாற்றலாமா?

ஆவணப்படுத்துதலின் அரசியல்: நகரும் நாட்டுப் புறங்கள்

முன்குறிப்பு:  இந்தக் கட்டுரை இ.பத்மநாப ஐயர் தொகுத்த பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் பங்கேற்ற தொகுப்பு ஒன்றில் இடம்பெற்ற கட்டுரை. அத்தொகுப்பிற்கு அவர் வைத்த பெயர் யுகம் மாறும். வெளிவந்த ஆண்டு 1999. இந்தக் கட்டுரை  அந்த ஆண்டு எழுதியதல்ல. 1988 இல் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் – முன்னும் பின்னும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி இதழில் எழுதிய கட்டுரையையே 1999 –ன் சூழலுக்கேற்ப நிகழ்காலத் தகவல்களுடன் மாற்றி எழுதி “ நகரும் நாட்டுப் புறங்கள் “ என்று தலைப்பிட்டேன். இப்போது 2012 இல் வலைப்பூவில் அதை அப்படியே பதிவேற்றம் செய்கிறேன். இந்தக் கட்டுரை    இற்றைப்படுத்த் வேண்டிய் ஒன்று என்பதை அறிவேன். இப்போது செய்யத் தோன்றவில்லை ======================================================================== இசைஞானி இளையராஜா, கி.ராஜநாராயணன், நடிகர் நாசர், ந.முத்துசாமி, மீனா சுவாமிநாதன்,தேவிகா, புஷ்பவனம் குப்புசாமி, கழனியூரன், டாக்டர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், டாக்டர் கே.ஏ.குணசேகரன், டாக்டர் தே.லூர்து, டாக்டர் மு,ராமசுவாமி,டாக்டர் கு.முருகேசன்- இந்தப் பெயர்கள் தமிழக நாட்டுப் புறவியல் க...

பெரியாரே! பெரியாரே!! அப்பாவிகள் இவர்கள். அறியாமல் செய்கிறார்கள்

படம்
தமிழ்நாட்டின் பொதுமனிதர்கள் ஞான .ராஜசேகரனை எவ்வாறு அறிந்திருப்பார்கள் என்பதற்குத் துல்லியமான புள்ளி விவர ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியியல் அதிகாரியாகப் பணி செய்யும் அவரின் தொடக்க அறிமுகம் நவீன நாடகங்கள். இன்று நவீன நாடகங்களில் செயல்படும் பலரும் கூட அவரை நாடக்காரராக அறிவார்களா? என்பது சந்தேகம்தான். நவீனத்துவ மனநிலை என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டவராக எழுபதுகளின் இறுதியிலேயே வெளிப்பட்டவர் ராஜசேகரன். நவீன நாடகப் பிரதிகளை உருவாக்கிய ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் சமகாலத்தில் வைத்து நினைக்கப்பட வேண்டியவர் அவர். வயிறு-1978 ,மரபு-1979, பாடலிபுத்திரம்-1980 ‘ என அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது மூன்று நாடகங்களை எழுதியவர் . இம்மூன்று நாடகப்பிரதிளும் வயிறு என்ற தொகுப்பாக 1980-இல் அகரம் வெளியீடாக வந்தது. இம்மூன்றில் வயிறு மட்டும் பம்பாய் [1978, இயக்கம் : கே. ஆர் . பரமேஷ்வரராவ் ] ,கோவை[1979, இயக்கம்: புவியரசு] மதுரை [1988, இயக்கம்: அ.ராமசாமி] எனச் சில மேடையேற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடகங்கள் மேடை யேறியதாகவோ, விவாதிக்கப்பட்டதாகவோ, பாடமாகப் படிக்கப்பட்டதாகவோ கூடத் தெர...

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும்

படம்
ஒரு நாவலாசிரியரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் வாசித்து முடித்து விட்டு திறனாய்வுக்கட்டுரை எழுத நினைத்த போது முதலில் தெரிவு செய்த நாவலாசிரியர் ஹெப்சிபா. இந்தக் கட்டுரையைப் படித்த பலர் என்னைப் பாராட்டினார்கள். ஹெப்சிபாவே அப்போது வந்த திணை இதழின் நேர்காணலில் இந்தக் கட்டுரையின் கருத்தை ஏற்றுச் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்தார். 22 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்தக் கட்டுரையை அவரது இறப்பை ஒட்டி வலைப்பூவில் ஏற்றிக் காணிக்கை ஆக்குகிறேன்.