இடுகைகள்

பிசாசு எழுதுதல் ( நவீன தமிழ்க் கவிகளின் கவிதைகள்)

படம்
இன்னொருவரால் எழுதமுடியாத பனுவல்கள் இவை என விமரிசனக் குறிப்புகளை இனியும் எழுதமுடியாது; ஏனென்றால் எல்லாப்பனுவல்களும்  ஆசிரிய நோக்கப்படி செய்யப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பனுவல்களுக்கும் எழுதுபவர்களுக்குமான உறவுகுறித்து மறுபரிசீலனைகளைப் பின்நவீனத்துவம் முன்வைத்தது.  இந்தப் பின்னணியில் பின்வரும் கவிதைகள் குழுவின் ஆக்கம் என்பதோடு வாசிக்கப்படவேண்டியவை.

மெட்ராஸ் - தலித் அரசியல் மீதான விமரிசனம்

படம்
திருநெல்வேலி  ‘பாம்பே’யில் மெட்ராஸ். ஆயுத பூசையன்று இரண்டாம் ஆட்டம் பார்த்தேன். படம் பார்த்தவர்கள் பலரும்  ‘பார்க்க வேண்டிய படம்’ என்றே சொல்லியதை இந்த வாரம் முழுக்க என் செவிகள் கேட்டிருந்தன. ஒரு அரங்கில் ஓடுவதற்கே இப்போது வரும் படங்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் திருநெல்வேலி போன்ற இடைநகரங்களிலேயே இரண்டு அரங்குகளில் நிறைந்த காட்சிகளாக ஒருவாரத்தைத் தாண்டி விட்டது மெட்ராஸ்.

யர்மோலா என்றொரு பின் நவீனத்துவப் பயணி

படம்
ஊடக நண்பர்களே! ஒவ்வொருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும் இந்தத் தகவலைச் சொல்லாமல் மறைப்பது சரியாக இருக்காது. நமது அருமை நண்பன் ழான் க்ளோத் இவான் யர்மோலா (1918 - 2014) தனது தொண்ணூற்று நான்கு முடிந்து தொண்ணூற்றைந்து நடந்து கொண்டிருக்கும்போது இறந்து விட்டான் என்பதை உறுதியான தகவலின் வழியாக உறுதி செய்கிறேன். சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு நமது ஊடகம் இதழுக்காக விரிவான நேர்காணலை வழங்கிய அவனுக்கு ஒரு அஞ்சலிக் கட்டுரையை எழுதுவது நம்முடைய கடமை. நம்மில் யார் அந்தக் கடமையைச் செய்வது என்று தீர்மானிக்கும் பொறுப்பை வழக்கம்போல் உங்கள் ஒவ்வொருவரிடமும் விட்டு விடுகிறேன். என்னுடைய பொறுப்பு, நீங்கள் எழுதியனுப்புவதைத் தொகுத்து வெளியிடுவது மட்டும் தான் என்பதை நான் மறுக்கவில்லை. அல்லது வெளியாள் பங்கேற்பாக (out sourcing) யாராவது ஒருவர் நீண்ட அஞ்சலிக் கட்டுரை எழுதி வைத்திருந்தால் வாங்கிப் போடலாமா? நீங்களே அப்படியொன்றை வாங்கி அனுப்பினால் ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அஞ்சலிக் கட்டுரைக்குப் பதிலாகக் கவிதை தான் வெளியிட வேண்டுமென்றால் அதை மற்றவர்கள...

எண்பதும் நாற்பதும்

படம்
போலந்து, வார்சா பல்கலைக் கழகத்திற்குத் தமிழ் கற்பிக்கப்போன பேராசிரியர்கள் பலருக்கும் கிடைக்காத ஓர் அனுபவம் எனக்குக் கிடைத்தது. 2011 அக்டோபர் 10 இல் வார்சா பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இரண்டு நாட்கள் கழித்துத் துறையில் நடக்க இருக்கும் 3 நாள் கருத்தரங்க அழைப்பினைக் கொடுத்துவிட்டு நீங்கள் இருக்கப்போகும் இந்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் இரண்டு பெரும் நிகழ்வுகளில் பங்கேற்கப்போகிறீர்கள் என்றார். என்ன நிகழ்வுகள் என்று நான் கேட்கவும் இல்லை; அவர் சொல்லவுமில்லை.

தனித்தன்மையான கல்வி; தனித்துவமான வாழ்க்கை: எதிர்நீச்சலடிக்கும் எதிர்பார்ப்பு.

படம்
வார்சாவில் நான் முழுமையான மொழியாசிரியனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கசப்போடு தான் முதலில் ஏற்றுக் கொண்டேன். கசப்புக்கான முதல் காரணம் முழுமையான மொழி ஆசிரியனாக என்னை எப்போதும் கருதிக் கொண்டதில்லை. அத்துடன் மொழிக்கல்வியில் ஒரே விதமான கற்கை முறையை எல்லா இடத்திலும் பின்பற்ற முடியாது. ஒருவரின் தாய்மொழியைக் கற்பிக்கும் அதே முறையை எல்லா நிலையிலும் பின்பற்றக் கூடாது என்பது மொழியாசிரியர்களுக்குத் தெரியும். தாய்மொழியாக அல்லாமல் ஒரு நாட்டின் இன்னொரு மாநிலமொழியைக் கற்பிக்கும் முறையைக் கூட அயல் தேசத்தில் மொழி கற்பிக்கும்போது பின்பற்ற முடியாது. வார்சாவில் தமிழ் கற்பிக்கப்போகும் முன்பு இந்த முறைகளையெல்லாம் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவனாக நான் செல்லவில்லை.