இடுகைகள்

நெல்லை நினைவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயர் கல்வி நிறுவனங்கள்

படம்
தரம் உயர்த்திக்கொள்ளல் ----------------------------------------- நான் பணியாற்றும் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

நினைவுகள்: பேரா.க.ப.அறவாணன்

படம்
மரணங்களை நிறுத்துவது மனிதர்கள் கையில் இல்லை. முதுமைக்குப் பின்னான மரணங்களுக்கு வருந்தவேண்டியதும் இல்லை. மரணத்திற்குப் பின்னானதொரு வாழ்க்கை இருப்பதாக நம்புபவர்கள் பிரார்த்தனை செய்து அவ்வாழ்க்கைகுள் அனுப்பி வைக்க முயல்கின்றனர். தெரிந்தவர்களின் மரணங்களை- அக வாழ்க்கையிலும் புறநிலைப் பணிகளிலும் தொடர்புடையவர்களின் மரணச்செய்திகளை அடுத்து அவர்களை நினைத்துக் கொள்வது அனைவரும் செய்வது. இரங்கி நிற்கும் மனம் நினைவுகளில் வழியாக அவர்களது சந்திப்புகளையும் பேசிய பேச்சுகளையும் நினைத்துப் பின்னோக்கிப் பயணம் செய்கிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்திலிருந்து உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறை நிலையிலோ ஏதாவது கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் அந்த நாளைப் பயன்படுத்திக் கொள்கிறது

துறையும் பல்கலைக்கழகமும் - சில நினைவுகள்

படம்
  தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்:  பல்கலைக்கழகங்களின் தகுதிமதிப்பீட்டைப் பரிசீலனை செய்து தரமதிப்பீட்டை உருவாக்கும்- NAAC- நோக்கத்தோடு தேசியத் தரமதிப்பீட்டுக்குழு பல்கலைக்கழகத்திற்கு வருகைதர உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வருவார்கள். அவர்கள் வரும்போது ஒவ்வொரு துறையும் தங்களின் சிறப்புக்கூறுகளையும் செயல்பாடுகளையும் ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும்.

கடந்து வந்த 20 வருடங்கள்: நிகழ்வுகளும் நினைவுகளும்

படம்
கடந்த காலத்தை நினைத்துக் கொள்வது, எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு ஒருவழி. தனிமனிதர்கள் தங்கள் மனத்திற்குள் செயல்படுத்தும் இந்தச் செயலை, நிறுவனங்கள் கூடிப்பேசி விவாதித்துச் செய்கின்றன. 1991 -ல் தொடங்கப்பட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் தமிழியல் துறை (1996) ஆரம்பிக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட நாடகவெளிகள் என்று சொல்லி

இந்தக் கண்காணிப்புப்பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து போகிறது. கடந்த நான்கு வாரங்களாக ஞாயிறு தவிர ஆறுநாட்களும் அதே பேருந்தில் பயணம். குறிப்பிட்ட காலம் சார்ந்த வினைகள் எப்பொழுதும் ஒழுங்கினை உண்டாக்கி விடத்தக்கன. தேர்வுகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்பட வேண்டியன. அதில் சிறு பிசகு நேர்ந்தாலும் மொத்த ஒழுங்கும் குலைந்து விடும் அபாயம் உண்டு. அப்படியானதொரு அபாயம் நிகழ்ந்து விடாமல் இருக்க, நான் கண்காணிப்பாளனாக அனுப்பப் பட்டேன். கண்காணிப்பு ஒருவிதத்தில் நம்பிக்கையின் அடையாளமும், இன்னொரு விதத்தில் நம்பிக்கை யின்மையின் வெளிப்பாடும்கூட . தனக்குக் கீழ் இருப்பவன் கண்காணிக்கப் பட்டால் ஒழுங்காகச் செயல்படுவான் என்பதான நம்பிக்கை.

பாடத்திட்ட அரசியல்

படம்
    ‘விழிப்பென்பது    இரு விழிகளையும்   சேரத் திறந்து   வைத்திருத்தல் அல்ல‘                                                     (சு. வில்வரத்தினம், உயிர்த்தெழும் காலத்திற்காக)     என்ற வரிகளைப் படித்துவிட்டு, அடையாளத்திற்கு வைக்கப்படும் பட்டுக் கயிறு அந்தப் பக்கத்தில் - 391 இருக்கும்படி வைத்துவிட்டு, கண்களை ஒருசேர மூடி விழித்திருந்தேன்.