வட்டார தேசியமும் வாரிசு அரசியலும்.
அதிகாரப் பரவலாக்கம் பற்றி ஜனநாயக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். மையப்படுத்தப்படும் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் போக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் வெளிப்பாடு. மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பில் சில மாநில மக்களின் நலன்களும் , மாநில அரசுகளின் உரிமைகளும் கண்டு கொள்ளப்படவில்லை; அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும்; மேலிருந்து கீழ் நோக்கி அப்பரவல் நகரவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டதுண்டு. ஒற்றைக் கட்சியின் ஆட்சி மைய அரசில் இருந்த போது இத்தகைய குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.