அகண்: உள்ளோடும் தோற்றமயக்கம்

தமிழ்வெளி(ஏப்ரல், 2024 )யில் வந்துள்ள சுஜா செல்லப்பனின் இந்தக்கதையை வாசித்து முடித்தபோது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் வாசித்து விவாதிக்க வேண்டிய கதையாக முன்மொழியத் தோன்றியது. கதையாக்கத்திற்குத் தெரிவு செய்துள்ள உரிப்பொருள் சார்ந்து அதனைப் பெண்ணெழத்து என்று வகைப்படுத்தலாம். எழுதுபவர்கள் அப்படி வகைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. எழுத்துக்கு வாழ்க்கை அனுபவம் சார்ந்த நிகழ்வுகள் அல்லது எண்ணங்கள் மட்டுமே காரணம் என நம்புவதின் வெளிப்பாடே இவ்வகையான வகைப்பாட்டின் பின்னால் இருக்கின்றன என நினைப்பவர்கள் தான் இப்படி வகைப்படுத்துகிறார்கள் என்ற மறுதலிப்பில் உண்மையில்லாமல் இல்லை.