இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிசாசு எழுதுதல் ( நவீன தமிழ்க் கவிகளின் கவிதைகள்)

படம்
இன்னொருவரால் எழுதமுடியாத பனுவல்கள் இவை என விமரிசனக் குறிப்புகளை இனியும் எழுதமுடியாது; ஏனென்றால் எல்லாப்பனுவல்களும்  ஆசிரிய நோக்கப்படி செய்யப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பனுவல்களுக்கும் எழுதுபவர்களுக்குமான உறவுகுறித்து மறுபரிசீலனைகளைப் பின்நவீனத்துவம் முன்வைத்தது.  இந்தப் பின்னணியில் பின்வரும் கவிதைகள் குழுவின் ஆக்கம் என்பதோடு வாசிக்கப்படவேண்டியவை.

மெட்ராஸ் - தலித் அரசியல் மீதான விமரிசனம்

படம்
திருநெல்வேலி  ‘பாம்பே’யில் மெட்ராஸ். ஆயுத பூசையன்று இரண்டாம் ஆட்டம் பார்த்தேன். படம் பார்த்தவர்கள் பலரும்  ‘பார்க்க வேண்டிய படம்’ என்றே சொல்லியதை இந்த வாரம் முழுக்க என் செவிகள் கேட்டிருந்தன. ஒரு அரங்கில் ஓடுவதற்கே இப்போது வரும் படங்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் திருநெல்வேலி போன்ற இடைநகரங்களிலேயே இரண்டு அரங்குகளில் நிறைந்த காட்சிகளாக ஒருவாரத்தைத் தாண்டி விட்டது மெட்ராஸ்.

யர்மோலா என்றொரு பின் நவீனத்துவப் பயணி

படம்
ஊடக நண்பர்களே! ஒவ்வொருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும் இந்தத் தகவலைச் சொல்லாமல் மறைப்பது சரியாக இருக்காது. நமது அருமை நண்பன் ழான் க்ளோத் இவான் யர்மோலா (1918 - 2014) தனது தொண்ணூற்று நான்கு முடிந்து தொண்ணூற்றைந்து நடந்து கொண்டிருக்கும்போது இறந்து விட்டான் என்பதை உறுதியான தகவலின் வழியாக உறுதி செய்கிறேன். சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு நமது ஊடகம் இதழுக்காக விரிவான நேர்காணலை வழங்கிய அவனுக்கு ஒரு அஞ்சலிக் கட்டுரையை எழுதுவது நம்முடைய கடமை. நம்மில் யார் அந்தக் கடமையைச் செய்வது என்று தீர்மானிக்கும் பொறுப்பை வழக்கம்போல் உங்கள் ஒவ்வொருவரிடமும் விட்டு விடுகிறேன். என்னுடைய பொறுப்பு, நீங்கள் எழுதியனுப்புவதைத் தொகுத்து வெளியிடுவது மட்டும் தான் என்பதை நான் மறுக்கவில்லை. அல்லது வெளியாள் பங்கேற்பாக (out sourcing) யாராவது ஒருவர் நீண்ட அஞ்சலிக் கட்டுரை எழுதி வைத்திருந்தால் வாங்கிப் போடலாமா? நீங்களே அப்படியொன்றை வாங்கி அனுப்பினால் ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அஞ்சலிக் கட்டுரைக்குப் பதிலாகக் கவிதை தான் வெளியிட வேண்டுமென்றால் அதை மற்றவர்கள...