இடுகைகள்

பண்பாட்டுக் கல்வி

படம்
  “நமது கல்வி புதியன படைக்கும் ஆற்றலை வளர்க்கவில்லை; மனப்பாடம் செய்வதையும் அதன் வழியாகத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகளையையும் தானே வளர்க்கிறது?”                                                             - இந்தக் கேள்வியைப் பேராசிரியர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் வந்த போது கோவை நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர் கேட்டார்:  அதற்கு,   “ முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்”     என்று பதிலளித்தார் பேராசிரியர்.

கல்வியுலகம் -படைப்புலகம் -நீண்ட விவாதம்

கல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு.

பேரா. கே.ஏ. குணசேகரன்: தயக்கமின்றித் தடங்கள் பதித்தவர்

படம்
பேரா. கே. ஏ. குணசேகரன் எனது நீண்ட நாள் நண்பர். நண்பர் என்று சொல்வதைவிட ஒருசாலை மாணாக்கர் எனவும் ஒருசாலை ஆசிரியர்கள் எனவும் சொல்வதே சரியாக இருக்கும். நானெல்லாம் ஒருவேலையைத் தொடங்க வேண்டுமென்றால் பத்துத் தடவையாவது யோசிப்பேன். ஒன்றுக்கு இரண்டாகத் திட்டங்களைப் போடுவேன். ஆரம்பித்துவிட்டுப் பின்வாங்குவேன். ஏற்றுக் கொண்டு முடித்துவிடலாம் எனக் கிளம்பிப் பயணத்தைத் தொடங்கிப் பாதியில் முறித்துக்கொண்டு பாதியில் திரும்பிய பயண அனுபவங்களெல்லாம் உண்டு.

மேல்பார்வை X கீழ்பார்வை = குடலாப்ரேஷன்

படம்
ஆபரேஷன் சக்சஸ் என்று சொன்னபடி வந்த ஜூனியர் டாக்டர்களின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார் டாக்டர் அ.ரா. . சட்டென இந்த ஆபரேஷன் மெத்தடாலஜியை மாணவர்கள் புரிந்து கொண்டதில் உள்ளபடியே அவருக்கு மகிழ்ச்சி. அவர் மேஜை மீதிருந்த ஒரு படத்தில் கோமாளி சிரித்துக் கொண்டிருந்தான். அதில் இருந்த வாசகம்- ‘ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை மனிதனோடிருந்தது; அந்த வார்த்தை வார்த்தையாயிருந்தது’

அழகுகுட்டிச் செல்லம் என்னும் சோதனை முயற்சி

படம்
  எல்லாக் கலைகளிலும் சோதனை முயற்சிகள் விதம்விதமானவை. பெரும்போக்குக்கு எதிரான மாற்று முயற்சிகளாக மட்டுமே இல்லாமல், பெரும்போக்கைத் திசை திருப்பி இன்னொரு பெரும்போக்கை உருவாக்க நினைப்பதுகூட சோதனை முயற்சிகள் தான். ஒற்றை இழையில் சொல்லப்படும் கதைப் பின்னலைக் கொண்ட பெரும்போக்குச் சினிமாவுக்குள் பல கதைகளை ஒரு புள்ளியில் இணைத்துக் காட்டுவதின் மூலம் பார்வையாளர்களைத் திளைப்புக்குள் ஆழ்த்த முடியும்; அவர்களின் ரசனைக்கான இன்னொரு வடிவத்தைத் தரமுடியும் என நினைப்பதும் சோதனை முயற்சிகள் தான். தெரிவுசெய்யப்பட்ட தலைப்பில் முன்னெடுக்கப்படும் விவாதங்களின் முன்னோடியான நீயா? நானா? நிகழ்ச்சியின் இயக்குநரான நெல்லை ஆண்டனி தயாரித்த அழகுகுட்டிச் செல்லம் என்னும் படம் அப்படியானதொரு சோதனைப் படம் என்ற வகைப்பாட்டிற்குள் அடக்கக் கூடிய ஒன்று.   

நம்பிக்கையை விதைத்து நம்பிக்கையை அறுவடை செய்யலாம்.

தமிழகத் தேர்தலை ஊடகங்கள் தான் முன் தொடங்கி வைத்தன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக் கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம்.

எண்ணங்களால் இணையும் நிகழ்வுகள்: நேசமித்ரனின் பிரசவ வார்டு

படம்
பிரசவ வார்டு - இந்தமாத உயிர்மையில் வந்துள்ள சிறுகதையின் தலைப்பு. நிகழ்வெளியைத் தலைப்பாக்கிக் கதையை எழுதியுள்ளவர் நேசமித்ரன்.

தாரை தப்பட்டை என்னும் கீதாசாரம்

படம்
தனது படங்களுக்காக இந்திய அளவில் விருதுகளைப் பெற்றுள்ள -தமிழின் முக்கிய இயக்குநராகக் கருதப்படுகிற பாலாவின் ஏழாவது படம் தாரை தப்பட்டை. இவரைப் பாராட்டும் மணிரத்னம்  ‘அவ்வப்போது வேறுவேறு சூத்திரங்களை முன்வைத்துத் திரைக்கதையை அமைத்துப் படங்களை இயக்குகிறார்; ஒரே சூத்திரத்தைப் பின்பற்றுவதில்ல்லை’ என்கிறார்.  சேது, நந்தா, பிதாமகன் வரையிலான பாலாவின் முதல் மூன்று படங்கள் வரையிலும் வித்தியாசங்களைத் தேடும் இயக்குநர் பாலா என்றொரு தோற்றம் இருந்தது. ஆனால் நான் கடவுள், அவன் இவன், பரதேசி என பிந்திய மூன்று படங்களோடு தாரை தப்பட்டை என்னும் ஏழாவது படத்தையும் பார்த்தபின்பு, ஒட்டுமொத்தமாக அவரது எல்லாப் படங்களுமே ஒரேவிதக் கருத்தை முன்வைப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

எளிமையின் அழகியல் : கண்டராதித்தனின் திருச்சாழல்

எனது கவிதை வாசிப்பு எளிமையானது. தேடிக்கண்டடைவது. தேடும்போது சலிப்பில் விலகிப்போவதுண்டு. நினைவுகளால் நிறுத்தித் தொடர்வதுண்டு. நிறுத்தப்பட்டது நினைவுக்கு வராமலே போவதுமுண்டு. கவிதை வாசிப்பில் பெரும்பாலானவர்களின் வாசிப்பு இப்படித்தான் என நினைக்கிறேன். ஒன்று நினைவிலாடும்போது திரும்பவும் தேடிப்போகத்தூண்டும். சிரிப்பும் நகைப்பும் சிந்தனைத் தெரிப்பும் கைகூடிவந்தால் நீண்ட பயணம் நிச்சயம்.

மனிதநேயமும் தமிழ்ப்புனைகதைகளும்

மேற்கு ஐரோப்பிய நாடுகள் இத்தாலியின் பின்னிடைக்கால எழுத்தாளர்களான தாந்தே  பிரான்ஸ் நாட்டில் மனிதநேயம் அறிமுகமான பொழுது அதனை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றிய அறிஞர் டச் கிளரிக் டெஸிடெரஸ் எராஸ்மஸ்க்ஷ். இவரே இங்கிலாந்திலும் மனிதநேயக்கருத்தோட்டம் அறிமுகமாகக் காரணமாகவும் இருந்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எராஸ்மஸ்ஸால் அறிமுகப்படுத்தப் பட்ட மனிதநேயம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செவ்வியல் இலக்கிய வல்லுநர்களான வில்லியம் க்ரொசின்

சாரு நிவேதிதா: தந்திரக் கதை சொல்லலின் ஒரு கோடு

படம்
என் பெயர் சீஸர்.ரோமானியப்பேரரசர் ஜூலியஸ் சீஸர் அல்ல, வெறும் சீஸர். என்னுடைய பயாலாஜிகல் தந்தை பெயர் டைஸன். இப்படித்தொடங்குகிறது போனமாத(டிசம்பர், 2015) உயிர்மையில் வந்து சாருநிவேதிதா வின் கதை. கதையின் தலைப்பு என் பெயர் சீஸர் . ஒருவிதத்தில் தன்மைக்கூற்றுக் கதை. கதை எழுதும் சாரு நிவேதிதா நாயாக மாறித் தன் கதையை - நாயின் கதையை- கூறுவதாக வாசிக்கவேண்டும் என நிர்ப்பந்திக்கும் கதைகூற்று முறை.

தன் வரலாற்றைச் சொல்லுதலின் அரசியல்: கே.ஏ. குணசேகரனின் வடு

படம்
தலித் இயக்கம் இந்தியாவில் அதிரடி மாற்றங்கள் பலவற்றை நிகழ்த்திக் காட்டியுள்ளது. பிற இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களை நிகழ்த்திட எடுத்துக் கொண்ட கால அளவை விடத் தலித் இயக்கங்கள் எடுத்துக் கொண்ட கால அளவு மிகக் குறைவானது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று . இலக்கியம் அல்லது எழுத்துப் பரப்பில் பிற இயக்கங்கள் தயங்கித் தயங்கிக் காலடி எடுத்து வைத்த பல பிரதேசங்களில் தலித் இயக்கங்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நுழைந்துள்ளன  என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

பேரா. சே. ராமானுஜம்: இந்தியப் பெருவெளியில் பயணம் செய்த தமிழ் அரங்கியலாளர்

படம்
முதன் முதலாய்ப் பார்த்த நாள் முதலாய் மரணம் வரை உடல் மற்றும் மனதளவில் பெரிய அளவு வேறுபாடுகள் இல்லாமலேயே நினைக்க முடிகிறது என்றால் அவரோடான பழக்கம் ஒன்று குறுகியகாலப் பழக்கமாய் இருக்க வேண்டும். அல்லது குருட்டுத்தனமான பழக்கமாய் இருக்கவேண்டும்.

மரத்தில் மறையும் யானை:அ.முத்துலிங்கத்தின் சிப்பாயும் போராளியும்

படம்
ஒன்றை இன்னொன்றாக ஆக்குவது உருவாக்குபவரது வேலை. எதை உருவாக்குகிறோம் என்ற உணர்வோடு தொடங்கினாலும் இன்னொன்றின் அடிப்படைக்கூறுகளின் மீது ஏற்படும் தற்காலிக விருப்பம் உருவாக்கியதை இன்னொன்றுபோலக் காட்டிவிடும். சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்து பார்த்தவர்கள் தான்.