இடுகைகள்

இருவேறு காரணங்கள்

படம்
முன்குறிப்பாகச் சில .. . இந்தக் கட்டுரையில் அண்மையில் நான் வாசித்த இரண்டு கதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பரிந்துரைக்கான காரணங்கள் இரண்டு கதைகளுக்கும் ஒன்றல்ல என்ற குறிப்போடு பரிந்துரை செய்கிறேன். வாசிக்கும் எல்லாக்கதைகளைப் பற்றியும் விமரிசன/ விவாதக்குறிப்புகளைச் சொல்லியே ஆகவேண்டும் என நினைப்பதில்லை. இந்தக் கதைகளை வாசித்து முடித்தவுடன் உடனே எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அயல்பயணத் திட்டமிடல்களால் அப்போது எழுத இயலவில்லை. பயணத்திற்குப் பின்னும் எழுதாமல் தவிர்க்க முடியவில்லை. திரும்பவும் அவர்களிடம் கதைகளின் படிகளை வாங்கி வாசித்துவிட்டு எழுதுகிறேன். இதுதான் மனதில் தங்கி விடும் இலக்கியப்பனுவலில் திமிறல். எதையாவது சொல் எனத் திமிறிக்கொண்டே இருக்கும்.

மாறியது திசை; மாற்றியது…

படம்
முதல் கோணல் என்று தோன்றியது. முற்றிலும் கோணலாகும் வாய்ப்பு குறைவுதான். ஆனாலும் கொஞ்சம் திகைப்பும்;தடுமாற்றமும் உண்டானதை மறுப்பதற்கில்லை.

இயல்விருது பெற்ற பாவண்ணனுக்கு வாழ்த்து.

படம்
இயற்பண்புவாத எழுத்துமுறை பொதுவாகச் சலிப்பை உருவாக்கும். அச்சலிப்பைத் தீர்க்கும் அருமருந்தாக அவ்வகை எழுத்துக்குள் நுழைக்கப்பட்ட வாழ்க்கை நெறியொன்று உண்டு. அதனைச் சரியாகச் செய்து தனது எழுத்துகளுக்கு உலக இலக்கியத்தில் ஓரிடம் பிடித்தவர் ஆண்டன் செகாவ். தனது காலகட்டத்து ருஷ்ய வாழ்க்கையின் எல்லா அடுக்குகளையும் புனைவுகளாக எழுதிக்காட்டினார். அந்த அடுக்குகளில் நடக்க வேண்டிய மாற்றங்களை முன்வைத்து நாடகங்களை எழுதினார். ஒவ்வொரு இலக்கிய வடிவத்திற்குமான அழகியலைக் கடைப்பிடித்தவர் அவர்.

கிழக்கென்பது திசையல்ல. மேற்கென்பதும்….

படம்
தினசரி நடக்கும் ஒன்று சூரியன் வருவதும்; மறைவதும். சூரியன் உதித்துவரும் திசை கிழக்கு. கிழக்கைப் பார்த்து நின்று கைகள் இரண்டையும் விரி. உன் முதுகுக்குப் பின்னால் இருக்கும் திசை மேற்கு உன் சோத்தாங்கை காட்டும் திசை தெற்கு . உன் பீச்சாங்கை காட்டும் திசை வடக்கு

சுந்தரராமசாமி

படம்
நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்லவில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கியிருந்தேன்.

ஆக்கத்திறன் வெளிப்படும் கதை வடிவங்கள்

படம்
எழுதப்படும் உரிப்பொருள் (theme) அல்லது பொருண்மை ஒன்றுதான். அதை முன்வைக்க நினைக்கும் எழுத்தாளரின் பார்வைக்கோணமும், புனைவைப் பற்றிய புரிதலும் வேறுவேறு பனுவல்களாக மாறுகின்றன. உரிப்பொருள் ஒன்றாக இருந்தாலும் வெளிப்படுத்த நினைக்கும் நோக்கமே கதையின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. அண்மையில் சரவணன் சந்திரனின் ஜிலேபி (யாவரும்.காம் /ஏப்ரல், 2023) சு.வேணுகோபாலின் மோகப்புயல் (வல்லினம், மே,2023) கதையையும் அடுத்தடுத்து வாசித்தேன். இரண்டு சிறுகதைகளின் உரிப்பொருளும் காமம் என்ற பொருண்மைக்குள் அடங்கக்கூடிய ஒன்றுதான். உணர்வு சார்ந்து எழுத்தாளர்கள் காமத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கதைகளின் தலைப்பும், அத்தலைப்பு கதைக்குள் உருவாக்கும் உணர்வும் ஓரளவு வெளிப்படுத்துகின்றன.

ஐபிஎல் -இரண்டு பதிவுகள்

படம்
கோ டிக்கால் பூதம் மார்ச் 31 இல் தொடங்கி மே 28 இல் முடியவுள்ள ஐபிஎல் 2023 போட்டிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. பெரும்பணத்தைப் பெறப்போகும் கடைசி அணி என்னும் தகுதிக்குரிய அணிகளாக நான்கு அணிகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. உருவாக்கப்பட்ட ஆண்டிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி இந்த ஆண்டும் அதைத்தக்க வைக்கும் விதமாகப் புள்ளிப்பட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட இன்னொரு அணியான லக்னோ அணியும் நான்கு அணிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில். இரண்டாவது, நான்காவது இடங்களில் நீண்டகால அணிகளான சென்னையும் மும்பையும். புதிதாக உருவாக்கப்பட்ட அணிகள் ஒன்றிய அரசின் ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஆளும் வலுவான மாநிலங்கள் என்பது தற்செயல் என நம்ப வேண்டும்.