இடுகைகள்

தமயந்தியின் காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல்

படம்
தமயந்தியின் முதல் படம் தடயம். வணிக சினிமாவின் சூத்திரங்களைப் புறமொதுக்கி விட்டு, ஆண் – பெண் உறவின் எதிர்பார்ப்புகளையும் நுட்பமான தவிப்புகளையும் முன் வைத்த படம். தனது சினிமாவின் விவாதப்பொருளில் மாற்றுத் தளத்தைத் தேர்ந்தெடுத்தது போலவே தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் அந்தப் படத்தில் தனக்கென ஒரு மாற்றுத் தடத்தில் பயணம் செய்திருந்தார்.

ஒரு வினாவும் விடையும்

படம்
இந்துத்துவம் சமயநடவடிக்கைகளை ஆன்மீகமாக முன்வைத்து ஆன்மீக அரசியல் செய்வதுபோல, அதனை மறுப்பவர்கள் வள்ளலார், வைகுண்டசாமி, நாராயணகுரு போன்றவர்களின் ஆன்மீகத்தைக் கைக்கொண்டு அரசியலுடன் இணைத்து மாற்று ஆன்மீக அரசியல் செய்யலாமே? ஏன் நாத்திகத்தை முன்மொழிந்து அரசியல் செய்யவேண்டும்?

கடைசி விவசாயி - கலையியல் முழுமையும் கருத்தியல் குழப்பங்களும்

படம்
  சினிமா, காட்சி வழியாகப் பார்வையாளர்களோடு தொடர்புகொள்ளும் கலைவடிவம் என்பதை முழுமையாக நம்பி எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனது சினிமா ‘பார்க்கும்’ பழக்கம் தொடங்கிய காலத்திற்குப் பின் எடுக்கப்பட்ட சினிமாக்களிலிருந்து ஒரு பட்டியலைத் தரலாம்:

ஏற்பின் விளைவுகள்

 எ னது திறனாய்வுப்பார்வை எழுத்தின் அடிப்படைக்கட்டுமானங்கள் - காலமும் இடமும் கருப்பொருளும் உரிப்பொருளுமான - மூன்றின் இயைபுப் பொருத்தம் குறித்து முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொல்காப்பிய இலக்கியவியல் கற்றுத்தந்துள்ள பாடம். இந்த இயைபுப் பொருத்தத்தையே காலம், இடம், பாத்திரங்களின் வினை ஆகியவற்றின் ஓர்மை (Unity of Time, Space and Action)யென அரிஸ்டாடிலும் சொல்கிறது என்பதும் நான் கற்றுத்தேர்ந்த திறனாய்வு அறிவே.
படம்
  சுரேஷ்குமார் இந்திரஜித்தின் நுண்கதைகள் சிறுகதை வடிவத்திலிருந்து நுண்கதை வடிவத்தின் முதன்மையான வேறுபாடு, வெளியையை எழுதுவதில் இருப்பதாகத் தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் உலவும் புனைவு வெளியை விரிவாக எழுதுவதற்கு நுண்கதை வடிவத்தில் வாய்ப்பில்லை. ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்களைக் கதைக்குள் உலவிவிட்டு, அவர்களிடையே ஏற்படும் முரணுக்குப்பின்னால் எழும் மனப்போராட்டங்களையும் உளவியல் சிக்கலையும் எழுதுவதற்கு ஏற்ற வடிவமாக நுண்கதைகள் இருப்பதைத் தொடர்ந்த வாசிப்பில் உணரமுடிகிறது.

கோடைகாலம் - நினைவுகள்

படம்
போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருக்கிறேன்.